Responsive image

தொண்டரடிப்பொடி_ஆழ்வார்

திருமாலை 41

பாசுர எண்: 912

திருமாலை 42

பாசுர எண்: 913

பாசுரம்
அமரவோ ரங்க மாறும்
      வேதமோர் நான்கு மோதி,
தமர்களில் தலைவ ராய
      சாதியந் தணர்க ளேலும்,
நுமர்களைப் பழிப்ப ராகில்
      நொடிப்பதோ ரளவில், ஆங்கே
அவர்கள்தாம் புலையர் போலும்
      அரங்கமா நகரு ளானே. (43)

திருமாலை 43

பாசுர எண்: 914

திருமாலை 44

பாசுர எண்: 915

பாசுரம்
பெண்ணுலாம் சடையி னானும்
      பிரமனு முன்னைக் காண்பான்,
எண்ணிலா வூழி யூழி
      தவஞ்செய்தார் வெள்கி நிற்ப,
விண்ணுளார் வியப்ப வந்து
      ஆனைக்கன் றருளை யீந்த
கண்ணறா, உன்னை யென்னோ
      களைகணாக் கருது மாறே. (44)

திருமாலை 45

பாசுர எண்: 916

பாசுரம்
வளவெழும் தவள மாட
      மதுரைமா நகரந் தன்னுள்,
கவளமால் யானை கொன்ற
      கண்ணனை அரங்க மாலை,
துவளத்தொண் டாய தொல்சீர்த்
      தொண்டர டிப்பொ டிசொல்,
இளையபுன் கவிதை யேலும்
      எம்பிறார் கினிய வாறே. (45)

திருப்பள்ளியெழுச்சி 1

பாசுரம்
கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான்
      கனவிரு ளகன்றது காலையம் பொழுதாய்,
மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம்
      வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி,
எதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த
      இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும்,
அதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும்
      அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. (1)

பதம் பிரிக்கவும்
கதிரவன் குணதிசை சிகரம் வந்து அணைந்தான்
கனை இருள் அகன்றது காலை அம் பொழுதாய்
மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம்
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி
எதிர்திசை நிறைந்தனர்; இவரொடும் புகுந்த
இருங் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலில் அலைகடல் போன்று உளது எங்கும்;
அரங்கத்தம்மா ! பள்ளி எழுந்தருளாயே.
(திருப்பள்ளியெழுச்சி - 1)

திருப்பள்ளியெழுச்சி 2

பாசுரம்
கொழுங்கொடி முல்லையின் கொழுமல ரணவிக்
      கூர்ந்தது குணதிசை மாருத மிதுவோ,
எழுந்தன மலரணைப் பள்ளிகொள் ளன்னம்
      ஈன்பனி நனைந்தத மிருஞ்சிற குதறி,
விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய்
      வெள்ளெயி றுறவதன் விடத்தனுக் கனுங்கி,
      அழுங்கிய ஆனையி னருந்துயர் கெடுத்த
அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. (2)

பதம் பிரிக்கவும்
கொழுங்கொடி முல்லையின் கொழுமலர் அணவிக்
கூர்ந்தது குணதிசை மாருதம் இதுவோ !
எழுந்தன மலர் அணைப் பள்ளிகொள் அன்னம்
ஈன்பனி நனைந்த தம் இருஞ் சிறகு உதறி;
விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ்வாழ்
வெள் எயிறு உற, அதன் விடத்துனுக்கு அனுங்கி
அழுங்கிய ஆனையின் அருந்துயர் கெடுத்த
அரங்கத்தம்மா ! பள்ளி எழுந்தருளாயே.
(திருப்பள்ளியெழுச்சி - 2)

திருப்பள்ளியெழுச்சி 3

பாசுரம்
சுடரொளி பரந்தன சூழ்திசை யெல்லாம்
      துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி,
படரொளி பசுத்தனன் பனிமதி யிவனோ
      பாயிறு ளகன்றது பைம்பொழில் கமுகின்,
மடலிடைக் கீறிவண் பாளைகள் நாற
      வைகறை கூர்ந்தது மாருத மிதுவோ,
அடலொளி திகழ்தரு திகிரியந் தடக்கை
      அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. (3)

பதம் பிரிக்கவும்
சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம்;
துன்னிய தாரகை மின்னொளி சுருங்கிப்
படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ !
பாயிருள் அகன்றது, பைம்பொழிற் கமுகின்
மடலிடைக் கீறி வண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
அடல் ஒளி திகழ் திகிரி அம் தடக்கை
அரங்கத்தம்மா ! பள்ளி எழுந்தருளாயே.
(திருப்பள்ளியெழுச்சி - 3)

திருப்பள்ளியெழுச்சி 4

பாசுரம்
மேட்டிள மேதிகள் தளைவிடு மாயர்கள்
      வேய்ங்குழ லோசையும் விடைமணிக் குரலும்,
ஈட்டிய இசைதிசை பரந்தன வயலுள்
      இருந்தின சுரும்பினம் இலங்கையர் குலத்தை,
வாட்டிய வரிசிலை வானவ ரேறே.
      மாமுனி வேள்வியைக் காத்து,அவ பிரதம்
ஆட்டிய அடுதிறல் அயோத்தியெம் மரசே.
      அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. (4)

பதம் பிரிக்கவும்
மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்
வேய்ங்குழல் ஓசையும் விடை மணிக் குரலும்
ஈட்டிய இசை திசை பரந்தன; வயலுள்
இரிந்தன சுரும்பினம்; இலங்கையர் குலத்தை
வாட்டிய வரிசிலை வானவர் ஏறே !
மாமுனி வேள்வியைக் காத்து அவபிரதம்
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே !
அரங்கத்தம்மா ! பள்ளி எழுந்தருளாயே.
(திருப்பள்ளியெழுச்சி - 4)

திருப்பள்ளியெழுச்சி 5

பாசுரம்
புலம்பின புட்களும் பூம்பொழில் களின்வாய்
      போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி,
கலந்தது குணதிசை கனைகட லரவம்
      களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த,
அலங்கலந் தொடையல்கொண் டடியிணை பணிவான்
      அமரர்கள் புகுந்தன ராதலி லம்மா
இலங்கையர் கோன்வழி பாடுசெய் கோயில்
      எம்பெரு மான்.பள்ளி யெழுந்தரு ளாயே. (5)

பதம் பிரிக்கவும்
புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய்;
போயிற்றுக் கங்குல்; புகுந்தது புலரி;
கலந்தது குணதிசைக் கனைகடல் அரவம்;
களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
அலங்கல் அம் தொடையல் கொண்டு அடியிணை பணிவான்
அமரர்கள் புகுந்தனர்; ஆதலில், அம்மா !
இலங்கையர்கோன் வழிபாடு செய் கோயில்
எம்பெருமான் ! பள்ளி எழுந்தருளாயே.
(திருப்பள்ளியெழுச்சி - 5)

Enter a number between 1 and 4000.