Blogs

ராமானுஜர் கிளிக்கண்ணி !(29)

ராகம்: செஞ்சுருட்டி

ஆதிசேஷன் அம்சமடி ! ஆண்டாளின் அண்ணனடி !

ஆளவந்தார்க்கடிமையடி - கிளியே !

எங்கள் இராமானுசனடி ! கிளியே !

ஸ்வாமி யதிராஜனடி !

அரங்கனின் அடிமையடி ! வேங்கடத்து வேதியனடி !

பெரும்புதூர் வள்ளலடி - கிளியே !

எங்கள் இராமானுசனடி ! கிளியே !

ஸ்வாமி யதிராஜனடி !


தேவராஜ தாசனடி ! பார்த்தசாரதி புத்ரனடி !

பாருக்கெல்லாம் தெய்வமடி - கிளியே !

எங்கள் இராமானுசனடி ! கிளியே !

ஸ்வாமி யதிராஜனடி !

நாரணனைக் காட்டினான்டி ! செல்வபிள்ளைக்குத் தந்தையடி !

வயிரமுடி சாற்றினாண்டி - கிளியே !

எங்கள் இராமானுசனடி ! கிளியே !

ஸ்வாமி யதிராஜனடி !

சென்னியில் சூடுவாரை வைகுந்தத்தில் வாழ வைக்கும்

உய்யும் வழி அதுவே --- கிளியே !

எங்கள் இராமானுசனடி -- அது

யதிராஜன் திருவடியே !

ஈயாடுவதோ கருடர்க்கெதிரே...(30)

ஏப்ரல் 25 2013, சித்திரையில் சித்திரை - மதுரகவி ஆழ்வாரின் திருநக்ஷத்திரம்.

திருவாய்மொழியின் பெருமையை நீங்களும் பாடலாமே...

ஈயாடுவதோ கருடர்க்கெதிரே !

இரவிக்கெதிர் மின்மினி ஆடுவதோ !

நாயாடுவதோ நரகேசரி முன் ?

அழகூர்வசி முன் பேயாடுவதோ !

பெருமான் வகுளாபரணன் அருள்

கூர்ந்தோவாதுரை ஆயிரா மாமறையின்

ஒருசொற் பொருமோ உலகிற்கவியே !

மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் !

பாடசாலை செய்தி பத்திரிக்கை - ஏப்ரல் 2013(31)

ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை செய்தி பத்திரிகை, ஏப்ரல் 2013.

(பாடசாலை குறித்த செய்திகள், சமீபத்திய நிகழ்வுகள், தியாக பாரதி இதழ், பாப்பா பாட்டு, கோசாலை செய்திகள் முதலியன. )

Newsletter in pdf format in languages Tamizh and English.

ஏனோ மனமே இனிமேலாகிலும்...(28)

ஏனோ மனமே இனிமேலாகிலும்

எம்பெருமானாரை பஜியாயோ !

வானோர்க்கு அமுதீந்த தீனசரண்யனை

தானே பஜித்து தாலாட்டினாராம் ! (ஏனோ)


திருநாராயண புரத்தில் வந்து

திருநாரணரை பஜித்தாராம் !

திருமகள் யதுகிரி தாயாரை நெஞ்சில்

திருத்தமாய் துதித்து பஜித்தாராம் ! (ஏனோ)


அம்புயக் கண்ணன் சம்பத் குமாரனை

அன்புடன் மடியில் வைத்து ஆதரித்தார் !

துன்பங்கள் போக்கிடும் அன்பர்கள் நாதனை

தன்புதல்வன் போல் ஆதரித்தாராம் ! (ஏனோ)


"செல்லப்பிள்ளை" என்றொருதரம் சொல்லிட

தொல்லைகள் யாவும் தொலைந்திடுமாம் !

வள்ளலை சயனத்தில் பல்லவ சயனத்தோடு

உள்ளம் பூரித்துத் தாலாட்டினாராம் ! (ஏனோ)

MP3 Version


முகுந்தமாலா - 8(27)

चिन्तयामि हरिमेव सन्ततं मन्दमन्द हसिताननाम्बुजम् |
नन्दगोप-तनयं परात्परं नारदादि-मुनिबृन्द वन्दितम् || 8 ||
(मुकुन्दमाला - 8)


சிந்தயாமி ஹரிமேவ ஸந்ததம் மந்த மந்த ஹசிதாநநாம்புஜம் |
நந்தகோப தநயம் பராத்பரம் நாரதாதி முனி ப்ருந்த வந்திதம் ||
(முகுந்தமாலா - 8)

[பொருள்]

மனதைக் கவரும் அழகான புன்முறுவல் பூக்கும் தாமரைத் திருமுகத்தானும், நந்தகோபரின் திருமகனும், எல்லோரையும் விட உயர்ந்தவனும், நாரதர் முதலான முனிவர்களால் நாரதர் முதலான முனிவர்களால் வணங்கப்படுபவனுமான ஸ்ரீ மஹாவிஷ்ணுவையே எப்பொழுதும் சிந்தித்திருக்கிறேன்.

அஹம் நான்
மந்த மந்த ஹசித புன்முறுவல் பூக்கும்
ஆநநாம்புஜம் தாமரைத் திருமுகத்தானும்
நந்தகோப தநயம் நந்தகோபரின் திருமகனும்
பராத்பரம் மேன்மை பொருந்திய அனைவரிலும் மேம்பட்டவன் (எல்லோரையும் விட உயர்ந்தவனும்)
நாரதாதி முனிப்ருந்த வந்திதம் நாரதர் முதலான முனிவர்களால் வணங்கப்படுபவனுமான
ஹரிமேவ (ஹரிம் ஏவ) ஸ்ரீ மஹாவிஷ்ணுவையே
ஸந்ததம் எப்பொழுதும்
சிந்தயாமி சிந்தித்திருக்கிறேன்

பாடசாலை செய்தி பத்திரிக்கை - ஜனவரி 2013(44)

ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை செய்தி பத்திரிகை, ஜனவரி 2013

(பாடசாலை குறித்த செய்திகள், சமீபத்திய நிகழ்வுகள், தியாக பாரதி இதழ், பாப்பா பாட்டு, கோசாலை செய்திகள் முதலியன. )

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.