ஸ்ரீ மதே ராமாநுஜாய நம:

ஏனோ மனமே இனிமேலாகிலும்...

ஏனோ மனமே இனிமேலாகிலும்
எம்பெருமானாரை பஜியாயோ !

வானோர்க்கு அமுதீந்த தீனசரண்யனை
தானே பஜித்து தாலாட்டினாராம் ! (ஏனோ)

திருநாராயண புரத்தில் வந்து
திருநாரணரை...

ராமானுஜர் கிளிக்கண்ணி !

ராகம்: செஞ்சுருட்டி

ஆதிசேஷன் அம்சமடி ! ஆண்டாளின் அண்ணனடி !
ஆளவந்தார்க்கடிமையடி - கிளியே !
எங்கள்  இராமானுசனடி ! கிளியே !
ஸ்வாமி யதிராஜனடி !

அரங்கனின் அடிமையடி ! வேங்கடத்து வேதியனடி !
பெரும்புதூர் வள்ளலடி - கிளியே !
எங்கள்  இராமானுசனடி !...

ஈயாடுவதோ கருடர்க்கெதிரே...

பிரிவு:ஆழ்வார்கள்

 

  ஏப்ரல் 25 2013, சித்திரையில் சித்திரை - மதுரகவி ஆழ்வாரின் திருநக்ஷத்திரம்.   திருவாய்மொழியின் பெருமையை நீங்களும் பாடலாமே...    ஈயாடுவதோ கருடர்க்கெதிரே ! இரவிக்கெதிர் மின்மினி ஆடுவதோ ! நாயாடுவதோ நரகேசரி முன் ? அழகூர்வசி...

கண்ணபுரத்தென் கருமணியே !

அருளியவர் :குலசேகர ஆழ்வார்

மன்னுபுகழ்க் கௌசலைதன் மணிவியிறு வாய்த்தவனே !
தென்னிலங்கைக் கோன்முடிகள் சிந்துவித்தாய் ! செம்பொன்சேர்
கன்னிநன்மா மதிள்புடைசூழ் கண்ணபுரத்தென் கருமணியே !
என்னுடைய இன்னமுதே ! இராகவனே ! தாலேலோ.
(பெருமாள் திருமொழி - 8.1)

 

பாடசாலை செய்தி பத்திரிக்கை - ஏப்ரல் 2013

 

ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை செய்தி பத்திரிகை, ஏப்ரல் 2013

(பாடசாலை குறித்த செய்திகள், சமீபத்திய நிகழ்வுகள், தியாக பாரதி இதழ், பாப்பா பாட்டு...

ஏனோ மனமே இனிமேலாகிலும்
எம்பெருமானாரை பஜியாயோ !

வானோர்க்கு அமுதீந்த தீனசரண்யனை
தானே பஜித்து தாலாட்டினாராம் ! (ஏனோ)

திருநாராயண புரத்தில் வந்து
திருநாரணரை பஜித்தாராம் !

திருமகள் யதுகிரி தாயாரை நெஞ்சில்
திருத்தமாய் துதித்து பஜித்தாராம் ! (ஏனோ)

அம்புயக் கண்ணன் சம்பத் குமாரனை

அன்புடன் மடியில் வைத்து ஆதரித்தார் !

துன்பங்கள் போக்கிடும் அன்பர்கள் நாதனை
தன்புதல்வன் போல் ஆதரித்தாராம் ! (ஏனோ)

"செல்லப்பிள்ளை" என்றொருதரம் சொல்லிட
தொல்லைகள் யாவும் தொலைந்திடுமாம் !

வள்ளலை சயனத்தில் பல்லவ சயனத்தோடு
உள்ளம் பூரித்துத் தாலாட்டினாராம் ! (ஏனோ)

 

ராகம்: செஞ்சுருட்டி

ஆதிசேஷன் அம்சமடி ! ஆண்டாளின் அண்ணனடி !
ஆளவந்தார்க்கடிமையடி - கிளியே !
எங்கள்  இராமானுசனடி ! கிளியே !
ஸ்வாமி யதிராஜனடி !

அரங்கனின் அடிமையடி ! வேங்கடத்து வேதியனடி !
பெரும்புதூர் வள்ளலடி - கிளியே !
எங்கள்  இராமானுசனடி ! கிளியே !
ஸ்வாமி யதிராஜனடி !

தேவராஜ தாசனடி ! பார்த்தசாரதி புத்ரனடி !
பாருக்கெல்லாம் தெய்வமடி - கிளியே !
எங்கள்  இராமானுசனடி ! கிளியே !
ஸ்வாமி யதிராஜனடி !
 

நாரணனைக் காட்டினான்டி ! செல்வபிள்ளைக்குத் தந்தையடி !
வயிரமுடி சாற்றினாண்டி - கிளியே !
எங்கள்  இராமானுசனடி ! கிளியே !
ஸ்வாமி யதிராஜனடி !

சென்னியில் சூடுவாரை வைகுந்தத்தில் வாழ வைக்கும்
உய்யும் வழி அதுவே --- கிளியே !
எங்கள் இராமானுசனடி -- அது
யதிராஜன் திருவடியே !

 

 

 

 
ஏப்ரல் 25 2013, சித்திரையில் சித்திரை - மதுரகவி ஆழ்வாரின் திருநக்ஷத்திரம்.
 
திருவாய்மொழியின் பெருமையை நீங்களும் பாடலாமே... 
 
ஈயாடுவதோ கருடர்க்கெதிரே !
இரவிக்கெதிர் மின்மினி ஆடுவதோ !
நாயாடுவதோ நரகேசரி முன் ?
அழகூர்வசி முன் பேயாடுவதோ ! 
பெருமான் வகுளாபரணன் அருள் 
கூர்ந்தோவாதுரை ஆயிரா மாமறையின்
ஒருசொற் பொருமோ உலகிற்கவியே !
 
மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் !
 

 

Pages