Responsive image

திருப்பாவை

திருப்பாவை 1

பாசுர எண்: 474

பாசுரம்
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
      நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
      கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்
      கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
      பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

திருப்பாவை 2

பாசுர எண்: 475

பாசுரம்
வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்
      செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
      நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
      செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
      உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

திருப்பாவை 3

பாசுர எண்: 476

பாசுரம்
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
      நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து
      ஓங்கு பெறும் செந் நெல் ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
      தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
      நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்

திருப்பாவை 4

பாசுர எண்: 477

பாசுரம்
ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்
      ஆழி உள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
      பாழிய் அம் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
      தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
      மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

திருப்பாவை 5

பாசுர எண்: 478

பாசுரம்
மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்
      தூய பெரு நீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
      தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
      வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
      தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.

திருப்பாவை 6

பாசுர எண்: 479

பாசுரம்
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
      வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
      கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
      உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
      உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

திருப்பாவை 7

பாசுர எண்: 480

பாசுரம்
கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து
      பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
      வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ
      நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
      தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்

திருப்பாவை 8

பாசுர எண்: 481

பாசுரம்
கீழ் வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு
      மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
      கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
      மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
      ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாயாய்

திருப்பாவை 9

பாசுர எண்: 482

பாசுரம்
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
      தூபம் கமழத் துயிலணைமேல் கண் வளரும்
மாமான் மகளே மணிக் கதவம் தாழ் திறவாய்
      மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான்
ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ
      ஏமப் பெருந் துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
      நாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய்

திருப்பாவை 10

பாசுர எண்: 483

பாசுரம்
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்.
      மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
      போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கரணனும்
      தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே
      தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.

Enter a number between 1 and 4000.