முதல்_திருவந்தாதி
முதல் திருவந்தாதி 41
அருளியவர்: பொய்கையாழ்வார்
முதல்_திருவந்தாதி
பாசுர எண்: 2122
பாசுரம்
குன்றனைய குற்றஞ் செயினும் குணங்கொள்ளும்
இன்று முதலாக என்னெஞ்சே, - என்றும்
புறனுரையே யாயினும் பொன்னாழிக் கையான்
திறனுரையே சிந்தித் திரு 41
முதல் திருவந்தாதி 42
அருளியவர்: பொய்கையாழ்வார்
முதல்_திருவந்தாதி
பாசுர எண்: 2123
பாசுரம்
திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால்
திருமகட்கே தீர்ந்தவா றென்கொல், - திருமகள்மேல்
பாலோதம் சிந்தப் படநா கணைக்கிடந்த,
மாலோத வண்ணர் மனம்? 42
முதல் திருவந்தாதி 43
அருளியவர்: பொய்கையாழ்வார்
முதல்_திருவந்தாதி
பாசுர எண்: 2124
பாசுரம்
மனமாசு தீரு மறுவினையும் சார,
தனமாய தானேகை கூடும், - புனமேய
பூந்துழா யானடிக்கே போதொடு நீரேந்தி,
தாம்தொழா நிற்பார் தமர். 43
முதல் திருவந்தாதி 44
அருளியவர்: பொய்கையாழ்வார்
முதல்_திருவந்தாதி
பாசுர எண்: 2125
பாசுரம்
தமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே,
தமருகந்த தெப்பேர்மற் றப்பேர், - தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித் திமையா திருப்பரே,
அவ்வண்ணம் அழியா னாம். 44
முதல் திருவந்தாதி 45
அருளியவர்: பொய்கையாழ்வார்
முதல்_திருவந்தாதி
பாசுர எண்: 2126
பாசுரம்
ஆமே யமரர்க் கறிய? அதுநிற்க,
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே, - பூமேய
மாதவத்தோன் தாள்பணிந்த வாளரக்கன் நீண்முடியை,
பாதமத்தா லேண்ணினான் பண்பு. 45
முதல் திருவந்தாதி 46
அருளியவர்: பொய்கையாழ்வார்
முதல்_திருவந்தாதி
பாசுர எண்: 2127
பாசுரம்
பண்புரிந்த நான்மறையோன் சென்னிப் பலியேற்ற,
வெண்புரி_ல் மார்பன் வினைதீர, - புண்புரிந்த
ஆகத்தான் தாள்பணிவார் கண்டீர், அமரர்தம்
போகத்தால் பூமியாள் வார். 46
முதல் திருவந்தாதி 47
அருளியவர்: பொய்கையாழ்வார்
முதல்_திருவந்தாதி
பாசுர எண்: 2128
பாசுரம்
வாரி சுருக்கி மதக்களி றைந்தினையும்,
சேரி திரியாமல் செந்நிறீஇ, - கூரிய
மெய்ஞ்ஞானத் தாலுணர்வார் காண்பரே, மேலொருநாள்
கைந்நாகம் காத்தான் கழல். 47
முதல் திருவந்தாதி 48
அருளியவர்: பொய்கையாழ்வார்
முதல்_திருவந்தாதி
பாசுர எண்: 2129
பாசுரம்
கழலொன் றெடுத்தொருகை சுற்றியோர் கைமேல்,
சுழலும் சுராசுரர்க ளஞ்ச, - அழலும்
செருவாழி யேந்தினான் சேவடிக்கே செல்ல,
மருவாழி நெஞ்சே. மகிழ். 48
முதல் திருவந்தாதி 49
அருளியவர்: பொய்கையாழ்வார்
முதல்_திருவந்தாதி
பாசுர எண்: 2130
பாசுரம்
மகிழல கொன்றேபோல் மாறும்பல் யாக்கை,
நெகிழ முயல்கிற்பார்க் கல்லால், - முகில்விரிந்த
சோதிபோல் தோன்றும் சுடர்ப்பொன் நெடுமுடி,எம்
ஆதிகாண் பார்க்கு மரிது. 49
முதல் திருவந்தாதி 50
அருளியவர்: பொய்கையாழ்வார்
முதல்_திருவந்தாதி
பாசுர எண்: 2131
பாசுரம்
அரியபுல னைந்தடக்கி யாய்மலர்கொண்டு, ஆர்வம்
பரியப் பரிசினால் புல்கில், - பெரியனாய்
மாற்றாது வீற்றிருந்த மாவலிபால், வண்கைநீர்
ஏற்றானைக் காண்ப தெளிது. 50