முதல்_திருவந்தாதி
முதல் திருவந்தாதி 21
அருளியவர்: பொய்கையாழ்வார்
முதல்_திருவந்தாதி
பாசுர எண்: 2102
பாசுரம்
நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால்,
சென்று திசையளந்த செங்கண்மாற்கு, - என்றும்
படையாழி புள்ளூர்த்தி பாம்பணையான் பாதம்,
அடையாழி நெஞ்சே. அறி. 21
முதல் திருவந்தாதி 22
அருளியவர்: பொய்கையாழ்வார்
முதல்_திருவந்தாதி
பாசுர எண்: 2103
பாசுரம்
அறியு முலகெல்லாம் யானேயு மல்லேன்,
பொறிகொள் சிறையுவண மூர்ந்தாய், - வெறிகமழும்
காம்பேய்மென் தோளி கடைவெண்ணெ யுண்டாயை,
தாம்பேகொண் டார்த்த தழும்பு. 22
முதல் திருவந்தாதி 23
அருளியவர்: பொய்கையாழ்வார்
முதல்_திருவந்தாதி
பாசுர எண்: 2104
பாசுரம்
தழும்பிருந்த சார்ங்கநாண் தோய்ந்த மங்கை,
தழும்பிருந்த தாள்சகடம் சாடி, - தழும்பிருந்த
பூங்கோதை யாள்வெருவப் பொன்பெயரோன் மார்ப்பிடந்த,
வீங்கோத வண்ணர் விரல். 23
முதல் திருவந்தாதி 24
அருளியவர்: பொய்கையாழ்வார்
முதல்_திருவந்தாதி
பாசுர எண்: 2105
பாசுரம்
விரலோடு வாய்தோய்ந்த வெண்ணெய்கண்டு, ஆய்ச்சி
உரலோ டுறப்பிணித்த ஞான்று - குரலோவா
தோங்கி நினைந்தயலார் காண இருந்திலையே?,
ஓங்கோத வண்ணா. உரை. 24
முதல் திருவந்தாதி 25
அருளியவர்: பொய்கையாழ்வார்
முதல்_திருவந்தாதி
பாசுர எண்: 2106
பாசுரம்
உரைமேற்கொண் டென்னுள்ளம் ஓவாது எப் போதும்
வரைமேல் மரகதமே போல, - திரைமேல்
கிடந்தானைக் கீண்டானை, கேழலாய்ப் பூமி
இடந்தானை யேத்தி யெழும். 25
முதல் திருவந்தாதி 26
அருளியவர்: பொய்கையாழ்வார்
முதல்_திருவந்தாதி
பாசுர எண்: 2107
பாசுரம்
எழுவார் விடைகொள்வார் ஈன்துழா யானை,
வழுவா வகைநினைந்து வைகல் - தொழுவார்,
வினைச்சுடரை நந்துவிக்கும் வேங்கடமே, வானோர்
மனச்சுடரைத் தூண்டும் மலை. 26
முதல் திருவந்தாதி 27
அருளியவர்: பொய்கையாழ்வார்
முதல்_திருவந்தாதி
பாசுர எண்: 2108
பாசுரம்
மலையால் குடைகவித்து மாவாய் பிளந்து,
சிலையால் மராமரமேழ் செற்று, - கொலையானைப்
போர்க்கோ டொசித்தனவும் பூங்குருந்தம் சாய்த்தனவும்
காக்கோடு பற்றியான் கை. 27
முதல் திருவந்தாதி 28
அருளியவர்: பொய்கையாழ்வார்
முதல்_திருவந்தாதி
பாசுர எண்: 2109
பாசுரம்
கைய வலம்புரியும் நேமியும், கார்வண்ணத்
தைய. மலர்மகள்நின் னாகத்தாள், - செய்ய
மறையான்நின் உந்தியான் மாமதிள்மூன் றெய்த
இறையான்நின் ஆகத் திறை. 28
முதல் திருவந்தாதி 29
அருளியவர்: பொய்கையாழ்வார்
முதல்_திருவந்தாதி
பாசுர எண்: 2110
பாசுரம்
இறையும் நிலனும் இருவிசும்பும் காற்றும்,
அறைபுனலும் செந்தீயு மாவான், - பிறைமருப்பின்
பைங்கண்மால் யானை படுதுயரம் காத்தளித்த,
செங்கண்மால் கண்டாய் தெளி. 29
முதல் திருவந்தாதி 30
அருளியவர்: பொய்கையாழ்வார்
முதல்_திருவந்தாதி
பாசுர எண்: 2111
பாசுரம்
தெளிதாக வுள்ளத்தைச் செந்நிறீஇ, ஞானத்
தெளிதாக நன்குணர்வார் சிந்தை, - எளிதாகத்
தாய்நாடு கன்றேபோல் தண்டுழா யானடிக்கே,
போய்நாடிக் கொள்ளும் புரிந்து. 30