முதல்_திருவந்தாதி
முதல் திருவந்தாதி 11
அருளியவர்: பொய்கையாழ்வார்
முதல்_திருவந்தாதி
பாசுர எண்: 2092
பாசுரம்
வாயவனை யல்லது வாழ்த்தாது, கையுலகம்
தாயவனை யல்லது தாம்தொழா, - பேய்முலைநஞ்
சூணாக வுண்டான் உருவொடு பேரல்லால்,
காணாகண் கேளா செவி. 11
முதல் திருவந்தாதி 12
அருளியவர்: பொய்கையாழ்வார்
முதல்_திருவந்தாதி
பாசுர எண்: 2093
பாசுரம்
செவிவாய்கண் மூக்குடலென் றைம்புலனும், செந்தீ
புவிகால்நீர் விண்பூதம் ஐந்தும், - அவியாத
ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே,
ஏனமாய் நின்றாற் கியல்வு. 12
முதல் திருவந்தாதி 13
அருளியவர்: பொய்கையாழ்வார்
முதல்_திருவந்தாதி
பாசுர எண்: 2094
பாசுரம்
இயல்வாக ஈன்துழா யானடிக்கே செல்ல,
முயல்வார் இயலமரர் முன்னம், - இயல்வாக
நீதியா லோதி நியமங்க ளால்பரவ,
ஆதியாய் நின்றார் அவர். 13
முதல் திருவந்தாதி 14
அருளியவர்: பொய்கையாழ்வார்
முதல்_திருவந்தாதி
பாசுர எண்: 2095
பாசுரம்
அவரவர் தாந்தம் அறிந்தவா றேத்தி,
இவரிவ ரெம்பெருமா னென்று, - சுவர்மிசைச்
சார்த்தியும் வைத்தும் தொழுவர், உலகளந்த
மூர்த்தி யுருவே முதல். 14
முதல் திருவந்தாதி 15
அருளியவர்: பொய்கையாழ்வார்
முதல்_திருவந்தாதி
பாசுர எண்: 2096
பாசுரம்
முதலாவார் மூவரே அம்மூவ ருள்ளும்
முதலாவான் மூரிநீர் வண்ணன், - முதலாய
நல்லான் அருளல்லால் நாமநீர் வையகத்து,
பல்லார் அருளும் பழுது 15
முதல் திருவந்தாதி 16
அருளியவர்: பொய்கையாழ்வார்
முதல்_திருவந்தாதி
பாசுர எண்: 2097
பாசுரம்
பழுதே பலபகலும் போயினவென்று, அஞ்சி
அழுதேன் அரவணைமேல் கண்டு - தொழுதேன்,
கடலோதம் காலலைப்பக் கண்வளரும், செங்கண்
அடலோத வண்ணர் அடி. 16
முதல் திருவந்தாதி 17
அருளியவர்: பொய்கையாழ்வார்
முதல்_திருவந்தாதி
பாசுர எண்: 2098
பாசுரம்
அடியும் படிகடப்பத் தோள்திசைமேல் செல்ல,
முடியும் விசும்பளந்த தென்பர், - வடியுகிரால்
ஈர்ந்தான் இரணியன தாகம், எருஞ்சிறைப்புள்
ஊர்ந்தா னுலகளந்த நான்று. 17
முதல் திருவந்தாதி 18
அருளியவர்: பொய்கையாழ்வார்
முதல்_திருவந்தாதி
பாசுர எண்: 2099
பாசுரம்
நான்ற முலைத்தலை நஞ்சுண்டு, உறிவெண்ணெய்
தோன்றவுண் டான்வென்றி சூழ்களிற்றை - ஊன்றி,
பொருதுடைவு கண்டானும் புள்ளின்வாய் கீண்டானும்,
மருதிடைபோய் மண்ணளந்த மால். 18
முதல் திருவந்தாதி 19
அருளியவர்: பொய்கையாழ்வார்
முதல்_திருவந்தாதி
பாசுர எண்: 2100
பாசுரம்
மாலுங் கருங்கடலே. என்நோற்றாய், வையகமுண்
டாலின் இலைத்துயின்ற ஆழியான், - கோலக்
கருமேனிச் செங்கண்மால் கண்படையுள், என்றும்
திருமேனி நீதீண்டப் பெற்று. 19
முதல் திருவந்தாதி 20
அருளியவர்: பொய்கையாழ்வார்
முதல்_திருவந்தாதி
பாசுர எண்: 2101
பாசுரம்
பெற்றார் தளைகழலப் போர்ந்தோர் குறளுருவாய்,
செற்றார் படிகடந்த செங்கண்மால், - நற்றா
மரைமலர்ச் சேவடியை வானவர்கை கூப்பி,
நிரைமலர்கொண்டு ஏத்துவரால் நின்று. 20