Responsive image

பெரிய_திருமடல்

பெரிய திருமடல் 31

பாசுர எண்: 2780

பாசுரம்
தன்னடியார் முன்பும் தரணி முழுதாளும்,
கொன்னவிலும் வேல்வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும்
தன்னிலைமை யெல்லாம் அறிவிப்பன், - தான்முனநாள்
மின்னிடை யாய்ச்சியர்த்தம் சேரிக் களவிங்கண்,       68

பெரிய திருமடல் 32

பாசுர எண்: 2781

பாசுரம்
துன்னு படல்திறந்து புக்கு, - தயிர்வேண்ணெய்
தன்வயி றார விழுங்க, கொழுங்கயல்கண்
மன்னும் மடவோர்கள் பற்றியோர் வான்கயிற்றால்
பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும்,      69

பெரிய திருமடல் 33

பாசுர எண்: 2782

பாசுரம்
அன்னதோர் பூதமாய் ஆயர் விழவின்கண்
துன்னு சகடத்தால் புக்க பெருஞ்சோற்றை,       70

பெரிய திருமடல் 34

பாசுர எண்: 2783

பாசுரம்
முன்னிருந்து முற்றத்தான் துற்றிய தெற்றெனவும்
மன்னர் பெருஞ்சவையுள் வாழ்வேந்தர் தூதனாய்,      71

பெரிய திருமடல் 35

பாசுர எண்: 2784

பாசுரம்
தன்னை யிகழ்ந்துரைப்பத் தான்முனநாள் சென்றதுவும்,
மன்னு பறைகறங்க மங்கையர்த்தம் கண்களிப்ப,       72

பெரிய திருமடல் 36

பாசுர எண்: 2785

பாசுரம்
கொன்னவிலும் கூத்தனாய்ப் பேர்த்தும் குடமாடி,
என்னிவ னென்னப் படுகின்ற ஈடறவும்,       73

பெரிய திருமடல் 37

பாசுர எண்: 2786

பாசுரம்
தென்னிலங்கை யாட்டி அரக்கர் குலப்பாவை,
மன்னன் இராவணன்றன் நல்தங்கை, - வாளெயிற்றுத்       74

பெரிய திருமடல் 38

பாசுர எண்: 2787

பாசுரம்
துன்னு சுடுசினத்துச் சூர்ப்பணகா சோர்வெய்தி,
பொன்னிறங் கொண்டு புலர்ந்தெழுந்த காமத்தால்,      75

பெரிய திருமடல் 39

பாசுர எண்: 2788

பாசுரம்
தன்னை நயந்தாளைத் தான்முனிந்து மூக்கரிந்து,
மன்னிய திண்ணெனவும்-வாய்த்த மலைபோலும்,       76

பெரிய திருமடல் 40

பாசுர எண்: 2789

பாசுரம்
தன்னிகரொன் றில்லாத தாடகையை, மாமுனிக்காகத்
தென்னுலகம் ஏற்றுவித்த திண்டிறலும்-மற்றிவைதான்       77

Enter a number between 1 and 4000.