தொண்டரடிப்பொடி_ஆழ்வார்
திருமாலை 12
அருளியவர்: தொண்டரடிப்பொடி_ஆழ்வார்
திருமாலை
பாசுர எண்: 883
பாசுரம்
நமனும்முற் கலனும் பேச
நரகில்நின் றார்கள் கேட்க,
நரகமே சுவர்க்க மாகும்
நாமங்க ளுடைய நம்பி,
அவனதூ ரரங்க மென்னாது
அயர்த்துவீழ்ந் தளிய மாந்தர்,
கவலையுள் படுகின் றாரென்
றதனுக்கே கவல்கின் றேனே. (12)
திருமாலை 13
அருளியவர்: தொண்டரடிப்பொடி_ஆழ்வார்
திருமாலை
பாசுர எண்: 884
பாசுரம்
எறியுநீர் வெறிகொள் வேலை
மாநிலத் துயிர்க ளெல்லாம்,
வெறிகொள்பூந் துளவ மாலை
விண்ணவர் கோனை யேத்த,
அறிவிலா மனித ரெல்லாம்
அரங்கமென் றழைப்ப ராகில்,
பொறியில்வாழ் நரக மெல்லாம்
புல்லெழுந் தொழியு மன்றே? (13)
திருமாலை 14
அருளியவர்: தொண்டரடிப்பொடி_ஆழ்வார்
திருமாலை
பாசுர எண்: 885
பாசுரம்
வண்டின முரலும் சோலை
மயிலினம் ஆலும் சோலை,
கொண்டல்மீ தணவும் சோலை
குயிலினம் கூவும் சோலை,
அண்டர்கோ னமரும் சோலை
அணிதிரு வரங்க மென்னா,
மிண்டர்பாய்ந் துண்ணும் சோற்றை
விலக்கிநாய்க் கிடுமி னீரே. (2) (14)
திருமாலை 15
அருளியவர்: தொண்டரடிப்பொடி_ஆழ்வார்
திருமாலை
பாசுர எண்: 886
பாசுரம்
மெய்யர்க்கே மெய்ய னாகும்
விதியிலா வென்னைப் போல,
பொய்யர்க்கே பொய்ய னாகும்
புட்கொடி யுடைய கோமான்,
உய்யப்போ முணர்வி னார்கட்
கொருவனென் றுணர்ந்த பின்னை,
ஐயப்பா டறுத்துத் தோன்றும்
அழகனூ ரரங்க மன்றே? (15)
திருமாலை 16
அருளியவர்: தொண்டரடிப்பொடி_ஆழ்வார்
திருமாலை
பாசுர எண்: 887
பாசுரம்
சூதனாய்க் கள்வ னாகித்
தூர்த்தரோ டிசைந்த காலம்,
மாதரார் கயற்க ணென்னும்
வலையுள்பட் டழுந்து வேனை,
போதரே யென்று சொல்லிப்
புந்தியில் புகுந்து, தன்பால்
ஆதரம் பெருக வைத்த
அழகனூ ரரங்க மன்றே? (16)
திருமாலை 17
அருளியவர்: தொண்டரடிப்பொடி_ஆழ்வார்
திருமாலை
பாசுர எண்: 888
பாசுரம்
விரும்பிநின் றேத்த மாட்டேன்
விதியிலேன் மதியொன் றில்லை,
இரும்புபோல் வலிய நெஞ்சம்
இறையிறை யுருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த
அரங்கமா கோயில் கொண்ட,
கரும்பினைக் கண்டு கொண்டேன்
கண்ணிணை களிக்கு மாறே. (17)
திருமாலை 18
அருளியவர்: தொண்டரடிப்பொடி_ஆழ்வார்
திருமாலை
பாசுர எண்: 889
பாசுரம்
இனிதிரைத் திவலை மோத
எறியும்தண் பரவை மீதே,
தனிகிடந் தரசு செய்யும்
தாமரைக் கண்ண னெம்மான்,
கனியிருந் தனைய செவ்வாய்க்
கண்ணணைக் கண்ட கண்கள்,
பனியரும் புதிரு மாலோ
எஞ்செய்கேன் பாவி யேனே. (18)
திருமாலை 19
அருளியவர்: தொண்டரடிப்பொடி_ஆழ்வார்
திருமாலை
பாசுர எண்: 890
பாசுரம்
குடதிசை முடியை வைத்துக்
குணதிசை பாதம் நீட்டி,
வடதிசை பின்பு காட்டித்
தென்திசை யிலங்கை நோக்கி,
கடல்நிறக் கடவு ளெந்தை
அரவணைத் துயிலு மாகண்டு,
உடலெனக் குருகு மாலோ
எஞ்செய்கே னுலகத் தீரே. (19)
திருமாலை 20
அருளியவர்: தொண்டரடிப்பொடி_ஆழ்வார்
திருமாலை
பாசுர எண்: 891
பாசுரம்
பாயுநீ ரரங்கந் தன்னுள்
பாம்பணைப் பள்ளி கொண்ட,
மாயனார் திருநன் மார்பும்
மரகத வுருவும் தோளும்,
தூய தாமரைக் கண்களும்
துவரிதழ் பவள வாயும்,
ஆயசீர் முடியும் தேசும்
அடியரோர்க் ககல லாமே? (20)
892:
பணிவினால் மனம தொன்றிப்
பவளவா யரங்க னார்க்கு,
துணிவினால் வாழ மாட்டாத்
தொல்லைநெஞ் சே.நீ சொல்லாய்,
அணியனார் செம்பொ னாய
அருவரை யனைய கோயில்,
மணியனார் கிடந்த வாற்றை
மனத்தினால் நினைக்க லாமே? (21)