தொண்டரடிப்பொடி_ஆழ்வார்
திருமாலை 1
அருளியவர்: தொண்டரடிப்பொடி_ஆழ்வார்
திருமாலை
பாசுர எண்: 872
பாசுரம்
காவலிற் புலனை வைத்துக்
கலிதனைக் கடக்கப் பாய்ந்து,
நாவலிட் டுழிதரு கின்றோம்
நமன்தமர் தலைகள் மீதே,
மூவுல குண்டு மிழ்ந்த
முதல்வ.நின் நாமம் கற்ற,
ஆவலிப் புடைமை கண்டாய்
அரங்கமா நகரு ளானே. (1)
திருமாலை 2
அருளியவர்: தொண்டரடிப்பொடி_ஆழ்வார்
திருமாலை
பாசுர எண்: 873
பாசுரம்
பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா. அமர ரேறே.
ஆயர்தம் கொழுந்தே. என்னும்,
இச்சுவை தவிர யான்போய்
இந்திர லோக மாளும்,
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகரு ளானே. (2)
திருமாலை 3
அருளியவர்: தொண்டரடிப்பொடி_ஆழ்வார்
திருமாலை
பாசுர எண்: 874
பாசுரம்
வேதநூல் பிராயம் நூறு
மனிசர்தாம் புகுவ ரேலும்,
பாதியு முறங்கிப் போகும்
நின்றதில் பதினை யாண்டு,
பேதைபா லகன தாகும்
பிணிபசி மூப்புத் துன்பம்,
ஆதலால் பிறவி வேண்டேன்
அரங்கமா நகரு ளானே. (3)
திருமாலை 4
அருளியவர்: தொண்டரடிப்பொடி_ஆழ்வார்
திருமாலை
பாசுர எண்: 875
பாசுரம்
மொய்த்தவல் வினையுள் நின்று
மூன்றெழுத் துடைய பேரால்,
கத்திர பந்து மன்றே
பராங்கதி கண்டு கொண்டான்,
இத்தனை யடிய ரானார்க்
கிரங்கும்நம் மரங்க னாய
பித்தனைப் பெற்று மந்தோ.
பிறவியுள் பிணங்கு மாறே. (4)
திருமாலை 5
அருளியவர்: தொண்டரடிப்பொடி_ஆழ்வார்
திருமாலை
பாசுர எண்: 876
பாசுரம்
பெண்டிரால் சுகங்க ளுய்ப்பான்
பெரியதோ ரிடும்பை பூண்டு
உண்டிராக் கிடக்கும் போது
உடலுக்கே கரைந்து நைந்து,
தண்டுழாய் மாலை மார்பன்
தமர்களாய்ப் பாடி யாடி,
தொண்டுபூண் டமுத முண்ணாத்
தொழும்பர்சோ றுகக்கு மாறே. (5)
திருமாலை 6
அருளியவர்: தொண்டரடிப்பொடி_ஆழ்வார்
திருமாலை
பாசுர எண்: 877
பாசுரம்
மறம்சுவர் மதிளெ டுத்து
மறுமைக்கே வெறுமை பூண்டு,
புறம்சுவ ரோட்டை மாடம்
புரளும்போ தறிய மாட்டீர்,
அறம்சுவ ராகி நின்ற
அரங்கனார்க் காட்செய் யாதே,
புறம்சுவர் கோலஞ் செய்து
புள்கவ்வக் கிடக்கின் றீரே. (6)
திருமாலை 7
அருளியவர்: தொண்டரடிப்பொடி_ஆழ்வார்
திருமாலை
பாசுர எண்: 878
பாசுரம்
புலையற மாகி நின்ற
புத்தொடு சமண மெல்லாம்,
கலையறக் கற்ற மாந்தர்
காண்பரோ கேட்ப ரோதாம்,
தலையறுப் புண்டும் சாவேன்
சத்தியங் காண்மின் ஐயா,
சிலையினா லிலங்கை செற்ற
தேவனே தேவ னாவான். (7)
திருமாலை 8
அருளியவர்: தொண்டரடிப்பொடி_ஆழ்வார்
திருமாலை
பாசுர எண்: 879
பாசுரம்
வெறுப்பொடு சமணர் முண்டர்
விதியில்சாக் கியர்கள், நின்பால்
பொறுப்பரி யனகள் பேசில்
போவதே நோய தாகி
குறிப்பெனக் கடையு மாகில்
கூடுமேல் தலையை ஆங்கே,
அறுப்பதே கருமங் கண்டாய்
அரங்கமா நகரு ளானே. (8)
திருமாலை 9
அருளியவர்: தொண்டரடிப்பொடி_ஆழ்வார்
திருமாலை
பாசுர எண்: 880
பாசுரம்
மற்றுமோர் தெய்வ முண்டே
மதியிலா மானி டங்காள்,
உற்றபோ தன்றி நீங்கள்
ஒருவனென் றுணர மாட்டீர்,
அற்றமே லொன்ற றீயீர்
அவனல்லால் தெய்வ மில்லை,
கற்றினம் மேய்த்த வெந்தை
கழலிணை பணிமி னீரே. (9)
திருமாலை 10
அருளியவர்: தொண்டரடிப்பொடி_ஆழ்வார்
திருமாலை
பாசுர எண்: 881
பாசுரம்
நாட்டினான் தெய்வ மெங்கும்
நல்லதோ ரருள்தன் னாலே,
காட்டினான் திருவ ரங்கம்
உய்பவர்க் குய்யும் வண்ணம்,
கேட்டிரே நம்பி மீர்காள்.
கெருடவா கனனும் நிற்க,
சேட்டைதன் மடிய கத்துச்
செல்வம்பார்த் திருக்கின் றீரே. (10)
882:
ஒருவில்லா லோங்கு முந்நீர்
அனைத்துல கங்க ளுய்ய,
செருவிலே யரக்கர் கோனைச்
செற்றநம் சேவ கனார்,
மருவிய பெரிய கோயில்
மதிள்திரு வரங்க மென்னா,
கருவிலே திருவி லாதீர்.
காலத்தைக் கழிக்கின் றீரே. (11)