Responsive image

திருமாலை

திருமாலை 41

பாசுர எண்: 912

திருமாலை 42

பாசுர எண்: 913

பாசுரம்
அமரவோ ரங்க மாறும்
      வேதமோர் நான்கு மோதி,
தமர்களில் தலைவ ராய
      சாதியந் தணர்க ளேலும்,
நுமர்களைப் பழிப்ப ராகில்
      நொடிப்பதோ ரளவில், ஆங்கே
அவர்கள்தாம் புலையர் போலும்
      அரங்கமா நகரு ளானே. (43)

திருமாலை 43

பாசுர எண்: 914

திருமாலை 44

பாசுர எண்: 915

பாசுரம்
பெண்ணுலாம் சடையி னானும்
      பிரமனு முன்னைக் காண்பான்,
எண்ணிலா வூழி யூழி
      தவஞ்செய்தார் வெள்கி நிற்ப,
விண்ணுளார் வியப்ப வந்து
      ஆனைக்கன் றருளை யீந்த
கண்ணறா, உன்னை யென்னோ
      களைகணாக் கருது மாறே. (44)

திருமாலை 45

பாசுர எண்: 916

பாசுரம்
வளவெழும் தவள மாட
      மதுரைமா நகரந் தன்னுள்,
கவளமால் யானை கொன்ற
      கண்ணனை அரங்க மாலை,
துவளத்தொண் டாய தொல்சீர்த்
      தொண்டர டிப்பொ டிசொல்,
இளையபுன் கவிதை யேலும்
      எம்பிறார் கினிய வாறே. (45)

Enter a number between 1 and 4000.