Responsive image

திருமாலை

திருமாலை 31

பாசுர எண்: 902

திருமாலை 32

பாசுர எண்: 903

பாசுரம்
ஆர்த்துவண் டலம்பும் சோலை
      அணிதிரு வரங்கந் தன்னுள்,
கார்த்திர ளனைய மேனிக்
      கண்ணனே. உன்னைக் காணும்,
மார்க்கமொ றறிய மாட்டா
      மனிசரில் துரிச னாய,
மூர்க்கனேன் வந்து நின்றேன்,
      மூர்க்கனேன் மூர்க்க னேனே. (32)

திருமாலை 33

பாசுர எண்: 904

பாசுரம்
மெய்யெல்லாம் போக விட்டு
      விரிகுழ லாரில் பட்டு,
பொய்யெலாம் பொதிந்து கொண்ட
      போட்கனேன் வந்து நின்றேன்,
ஐயனே. அரங்க னே.உன்
      அருளென்னு மாசை தன்னால்,
பொய்யனேன் வந்து நின்றேன்
      பொய்யனேன் பொய்ய னேனே. (33)

திருமாலை 34

பாசுர எண்: 905

பாசுரம்
உள்ளத்தே யுறையும் மாலை
      உள்ளுவா னுணர்வொன் றில்லா,
கள்ளத்தேன் நானும் தொண்டாய்த்
      தொண்டுக்கே கோலம் பூண்டேன்,
உள்ளுவா ருள்ளிற் றெல்லாம்
      உடனிருந் தறிதி யென்று,
வெள்கிப்போ யென்னுள் ளேநான்
      விலவறச் சிரித்திட் டேனே. (34)

திருமாலை 35

பாசுர எண்: 906

பாசுரம்
தாவியன் றுலக மெல்லாம்
      தலைவிளாக் கொண்ட எந்தாய்,
சேவியே னுன்னை யல்லால்
      சிக்கெனச் செங்கண் மாலே,
ஆவியே.அமுதே என்றன்
      ஆருயி ரனைய எந்தாய்,
பாவியே னுன்னை யல்லால்
      பாவியேன் பாவி யேனே. (35)

திருமாலை 36

பாசுர எண்: 907

பாசுரம்
மழைக்கன்று வரைமு னேந்தும்
      மைந்தனே.மதுர வாறே,
உழைக்கன்றே போல நோக்கம்
      உடையவர் வலையுள் பட்டு,
உழைக்கின்றேற் கென்னை நோக்கா
      தொழிவதே,உன்னை யன்றே
அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி.
      அரங்கமா நகரு ளானே. (36)

திருமாலை 37

பாசுர எண்: 908

பாசுரம்
தெளிவிலாக் கலங்கல் நீர்சூழ்
      திருவரங்கங் கத்துள் ளோங்கும்,
ஒளியுளார் தாமே யன்றே
      தந்தையும் தாயு மாவார்,
எளியதோ ரருளு மன்றே
      எந்திறத் தெம்பி ரானார்,
அளியன்நம் பையல் என்னார்
      அம்மவோ கொடிய வாறே. (37)

திருமாலை 38

பாசுர எண்: 909

பாசுரம்
மேம்பொருள் போக விட்டு
      மெய்ம்மையை மிகவு ணர்ந்து,
ஆம்பரி சறிந்து கொண்டு
      ஐம்புல னகத்த டக்கி,
காம்புறத் தலைசி ரைத்துன்
      கடைத்தலை யிருந்து,வாழும்
சோம்பரை உகத்தி போலும்
      சூழ்புனல் அரங்கத் தானே. (38)

திருமாலை 39

பாசுர எண்: 910

பாசுரம்
அடிமையில் குடிமை யில்லா
      அயல்சதுப் பேதி மாரில்,
குடிமையில் கடைமை பட்ட
      குக்கரில் பிறப்ப ரேலும்,
முடியினில் துளபம் வைத்தாய்.
      மொய்கழற் கன்பு செய்யும்,
அடியரை யுகத்தி போலும்
      அரங்கமா நகரு ளானே. (39)

திருமாலை 40

பாசுர எண்: 911

பாசுரம்
திருமறு மார்வ.நின்னைச்
      சிந்தையுள் திகழ வைத்து,
மருவிய மனத்த ராகில்
      மாநிலத் துயிர்க ளெல்லாம்,
வெருவரக் கொன்று சுட்டிட்
      டீட்டிய வினைய ரேலும்,
அருவினைப் பயன துய்யார்
      அரங்கமா நகரு ளானே. (40)
912:
வானுளா ரறிய லாகா
      வானவா. என்ப ராகில்,
தேனுலாந் துளப மாலைச்
      சென்னியாய். என்ப ராகில்,
ஊனமா யினகள் செய்யும்
      ஊனகா ரகர்க ளேலும்,
போனகம் செய்த சேடம்
      தருவரேல் புனித மன்றே? (41)

Enter a number between 1 and 4000.