திருமாலை
திருமாலை 22
அருளியவர்: தொண்டரடிப்பொடி_ஆழ்வார்
திருமாலை
பாசுர எண்: 893
பாசுரம்
பேசிற்றே பேச லல்லால்
பெருமையொன் றுணர லாகாது,
ஆசற்றார் தங்கட் கல்லால்
அறியலா வானு மல்லன்,
மாசற்றார் மனத்து ளானை
வணங்கிநா மிருப்ப தல்லால்,
பேசத்தா னாவ துண்டோ ?
பேதைநெஞ் சே.நீ சொல்லாய். (22)
திருமாலை 23
அருளியவர்: தொண்டரடிப்பொடி_ஆழ்வார்
திருமாலை
பாசுர எண்: 894
பாசுரம்
கங்கயிற் புனித மாய
காவிரி நடுவு பாட்டு,
பொங்குநீர் பரந்து பாயும்
பூம்பொழி லரங்கந் தன்னுள்,
எங்கள்மா லிறைவ னீசன்
கிடந்ததோர் கிடக்கை கண்டும்,
எங்ஙனம் மறந்து வாழ்கேன்
ஏழையே னேழை யேனே. (23)
திருமாலை 24
அருளியவர்: தொண்டரடிப்பொடி_ஆழ்வார்
திருமாலை
பாசுர எண்: 895
பாசுரம்
வெள்ளநீர் பரந்து பாயும்
விரிபொழி லரங்கந் தன்னுள்,
கள்ளனார் கிடந்த வாறும்
கமலநன் முகமும் கண்டு
உள்ளமே. வலியை போலும்
ஒருவனென் றுணர மாட்டாய்,
கள்ளமே காதல் செய்துன்
கள்ளத்தே கழிக்கின் றாயே. (24)
திருமாலை 25
அருளியவர்: தொண்டரடிப்பொடி_ஆழ்வார்
திருமாலை
பாசுர எண்: 896
பாசுரம்
குளித்துமூன் றனலை யோம்பும்
குறிகொளந் தணமை தன்னை,
ஒளித்திட்டே னென்க ணில்லை
நின்கணும் பத்த னல்லேன்,
களிப்பதென் கொண்டு நம்பீ.
கடல்வண்ணா. கதறு கின்றேன்,
அளித்தெனக் கருள்செய் கண்டாய்
அரங்கமா நகரு ளானே. (25)
திருமாலை 26
அருளியவர்: தொண்டரடிப்பொடி_ஆழ்வார்
திருமாலை
பாசுர எண்: 897
பாசுரம்
போதெல்லாம் போது கொண்டுன்
பொன்னடி புனைய மாட்டேன்,
தீதிலா மொழிகள் கொண்டுன்
திருக்குணம் செப்ப மாட்டேன்,
காதலால் நெஞ்ச மன்பு
கலந்திலே னதுதன் னாலே,
ஏதிலே னரங்கர்க்கு எல்லே.
எஞ்செய்வான் தோன்றி னேனே. (26)
திருமாலை 27
அருளியவர்: தொண்டரடிப்பொடி_ஆழ்வார்
திருமாலை
பாசுர எண்: 898
பாசுரம்
குரங்குகள் மலையை தூக்கக்
குளித்துத்தாம் புரண்டிட் டோ டி,
தரங்கநீ ரடைக்க லுற்ற
சலமிலா அணிலம் போலேன்,
மரங்கள்போல் வலிய நெஞ்சம்
வஞ்சனேன் நெஞ்சு தன்னால்,
அரங்கனார்க் காட்செய் யாதே
அளியத்தே னயர்க்கின் றேனே. (27)
திருமாலை 28
அருளியவர்: தொண்டரடிப்பொடி_ஆழ்வார்
திருமாலை
பாசுர எண்: 899
பாசுரம்
உம்பரா லறிய லாகா
ஒளியுளார் ஆனைக் காகி,
செம்புலா லுண்டு வாழும்
முதலைமேல் சீறி வந்தார்,
நம்பர மாய துண்டே?
நாய்களோம் சிறுமை யோரா,
எம்பிராற் காட்செய் யாதே
எஞ்செய்வான் தோன்றி னேனே. (28)
திருமாலை 29
அருளியவர்: தொண்டரடிப்பொடி_ஆழ்வார்
திருமாலை
பாசுர எண்: 900
பாசுரம்
ஊரிலேன் காணி யில்லை
உறவுமற் றொருவ ரில்லை,
பாரில்நின் பாத மூலம்
பற்றிலேன் பரம மூர்த்தி,
காரொளி வண்ண னே.(என்)
கண்ணனே. கதறு கின்றேன்,
ஆருளர்க் களைக் ணம்மா.
அரங்கமா நகரு ளானே. (29)
திருமாலை 30
அருளியவர்: தொண்டரடிப்பொடி_ஆழ்வார்
திருமாலை
பாசுர எண்: 901
பாசுரம்
மனத்திலோர் தூய்மை யில்லை
வாயிலோ ரிஞ்சொ லில்லை,
சினத்தினால் செற்றம் நோக்கித்
தீவிளி விளிவன் வாளா,
புனத்துழாய் மாலை யானே.
பொன்னிசூழ் திருவ ரங்கா,
எனக்கினிக் கதியென் சொல்லாய்
என்னையா ளுடைய கோவே. (30)
902:
தவத்துளார் தம்மி லல்லேன்
தனம்படத் தாரி லல்லேன்,
உவர்த்தநீர் போல வென்றன்
உற்றவர்க் கொன்று மல்லேன்,
துவர்த்தசெவ் வாயி னார்க்கே
துவக்கறத் துரிச னானேன்,
அவத்தமே பிறவி தந்தாய்
அரங்கமா நகரு ளானே. (31)