திருமங்கை_ஆழ்வார்
பெரிய திருமொழி 11
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 958
பாசுரம்
வாலிமாவலத்தொருவனதுடல்கெட
வரிசிலைவளைவித்து,அன்று
ஏலநாறுதண்தடம்பொழிலிடம்பெற
இருந்தநலிமய்யத்துள்,
ஆலிமாமுகிலதிர்தர அருவரை
அகடுறமுகடேறி,
பீலிமாமயில்நடஞ்செயும்தடஞ்சுனைப்
பிரிதிசென்றடைநெஞ்சே. (2) 1.2.1
பதம் பிரிக்கவும்
வாலி மா வலத்து ஒருவனது உடல் கெட வரி சிலை வளைவித்து அன்றுஏலம் நாறு தண் தடம் பொழில் இடம் பெறஇருந்த நல் இமயத்துள்ஆலி மா முகில் அதிர் தர, அரு வரைஅகடு உற, முகடு ஏறிபீலி மா மயில் நடம் செய்யும் தடஞ்சுனைப்பிரிதி சென்று அடை நெஞ்சே !(1.2.1)
பெரிய திருமொழி 12
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 959
பாசுரம்
கலங்கமாக்கடலரிகுலம்பணிசெய்ய
அருவரையணைகட்டி,
இலங்கைமாநகர்ப்பொடிசெய்தவடிகள்தாம்
இருந்தநல்லிமயத்து,
விலங்கல்போல்வனவிறலிருஞ்சினத்தன
வேழங்கள்துயர்க்கூர,
பிலங்கொள்வாளெயிற்றரியவைதிரிதரு
பிரிதிசென்றடைநெஞ்சே. 1.2.2
பதம் பிரிக்கவும்
கலங்க மாக் கடல் அரிகுலம் பணி செய்யஅரு வரை அணைகட்டிஇலங்கை மா நகர் பொடி செய்த அடிகள் தாம் இருந்த நல் இமயத்துள்விலங்கல் போல்வன விறல் இரும் சினத்தன வேழங்கள் துயர் கூர,பிலம் கொள் வாள் எயிற்று அரி-அவை திரி தரு பிரிதி சென்று அடை நெஞ்சே !(1.2.2)
பெரிய திருமொழி 13
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 960
பாசுரம்
துடிகொள்_ண்ணிடைச்சுரிகுழல் துளங்கெயிற்
றிளங்கொடிதிறத்து, ஆயர்
இடிகொள்வெங்குரலினவிடையடர்த்தவன்
இருந்தநல்லிமயத்து,
கடிகொள்வேங்கையின்நறுமலரமளியின்
மணியறைமிசைவேழம்,
பிடியினோடுவண்டிசைசொலத்துயில்கொளும்
பிரிதிசென்றடைநெஞ்சே. 1.2.3
பதம் பிரிக்கவும்
துடி கொள் நுண் இடைச் சுரி குழல் துளங்கு எயிற்றுஇளங்கொடி திறத்து, ஆயர்இடி கொள் வெம் குரல் இன விடை அடர்த்தவன்இருந்த நல் இமயத்துள்கடி கொள் வேங்கையின் நறுமலர் அமளியின்மணி அறைமிசை வேழம்பிடியினோடு வண்டு இசை சொல, துயில் கொளும் பிரிதி சென்று அடை நெஞ்சே !(1.2.3)
பெரிய திருமொழி 14
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 961
பாசுரம்
மறங்கொளாளரியுருவெனவெருவர
ஒருவனதகல்மார்வம்
திறந்து,வானவர்மணிமுடிபணிதர
இருந்தநல்லிமயத்துள்,
இறங்கியேனங்கள்வளைமருப்ப ிடந்திடக்
கிடந்தருகெரிவீசும்,
பிறங்குமாமணியருவியொடிழிதரு
பிரிதிசென்றடைனெஞ்சே. 1.2.4
பதம் பிரிக்கவும்
மறம் கொள் ஆள் அரி உரு என வெருவரஒருவனது அகல் மார்வம்திறந்து வானவர் மணிமுடி பணி தரஇருந்த நல் இமயத்துள்இறங்கி ஏனங்கள் வளை மருப்பு இடந்திடக்கிடந்து அருகு எரி வீசும்பிறங்கு மா மணி அருவியோடு இழிதரு பிரிதி சென்று அடை நெஞ்சே !(1.2.4)
பெரிய திருமொழி 15
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 962
பாசுரம்
கரைசெய்மாக்கடல்கிடந்தவன் கனைகழல்
அமரர்கள்தொழுதேத்த,
அரைசெய்மேகலையலர்மகளவளொடும்
அமர்ந்தநல்லிமயத்து,
வரைசெய்மாக்களிறீளவெதிர்வளர்முளை
அளைமிகுதேன்fதோய்த்து,
பிரசவாரிதன்னிளம்பிடிக்கருள்செயும்
பிரிதிசென்றடைநெஞ்சே. 1.2.5
பதம் பிரிக்கவும்
கரைசெய் மாக்கடல் கிடந்தவன் கனைகழல்அமரர்கள் தொழுது ஏத்தஅரைசெய் மேகலை அலர்மகள் அவளொடும்அமர்ந்த நல்இமயத்துவரைசெய் மாக்களிறு இளவெதிர் வளர்முளைஅளைமிகு தேன் தோய்த்து*பிரச வாரிதன் இளம்பிடிக்கு அருள் செயும்பிரிதி சென்று அடை நெஞ்சே !(1.2.5)
பெரிய திருமொழி 16
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 963
பாசுரம்
பணங்களாயிரமுடையநல்லவரவணைப்
பள்ளிகொள் பரமாவென்று,
இணங்கிவானவர்மணிமுடிபணிதர
இருந்தநல்லிமயத்து,
மணங்கொள்மாதவிநெடுங்கொடிவிசும்புற
நிமிர்ந்தவைமுகில்பற்றி,
பிணங்குபூம்பொழில்நுழைந்துவண்டிசைசொலும்
பிரிதிசென்றடைநெஞ்சே. 1.2.6
பெரிய திருமொழி 17
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 964
பாசுரம்
கார்கொள்வேங்கைகள்கனவரைதழுவிய
கறிவளர்க்கொடிதுன்னி,
போர்கொள்வேங்கைகள்புனவரைதழுவிய
பூம்பொழிலிமயத்துள்,
ஏர்கொள்பூஞ்சுனைத்தடம்படிந் தினமலர்
எட்டுமிட்டிமையோர்கள்,
பேர்களாயிரம்பரவிநின்றடிதொழும்
பிரிதிசென்றடைநெஞ்சே. 1.2.7
பெரிய திருமொழி 18
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 965
பாசுரம்
இரவுகூர்ந்திருள்பெருகியவரைமுழை
இரும்பசியதுகூர,
அரவமாவிக்குமகன்பொழில்தழுவிய
அருவரையிமயத்து,
பரமனாதியெம்பனிமுகில்வண்ணனென்று
எண்ணிநின்றிமையோர்கள்,
பிரமனோடுசென்றடிதொழும்பெருந்தகைப்
பிரிதிசென்றடைநெஞ்சே. 1.2.8
பெரிய திருமொழி 19
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 966
பாசுரம்
ஓதியாயிரநாமங்களுணர்ந்தவர்க்கு
உறுதுயரடையாமல்,
ஏதமின்றிநின்றருளும்நம்பெருந்தகை
இருந்தநல்லிமயத்து,
தாதுமல்கியபிண்டிவிண்டலர்கின்ற
தழல்புரையெழில்நோக்கி,
பேதைவண்டுகளெரியெனவெருவரு
பிரிதிசென்றடைநெஞ்சே. 1.2.9
பெரிய திருமொழி 20
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 967
பாசுரம்
கரியமாமுகிற்படலங்கள்கிடந்து
அவைமுழங்கிட,களிறென்று
பெரியமாசுணம்வரையெனப்பெயர்தரு
பிரிதியெம்பெருமானை,
வரிகொள்வண்டறைபைம்பொழில்மங்கையர்
கலியனதொலிமாலை,
அரியவின்னிசைபாடுநல்லடியவர்க்கு
அருவினையடயாவே. 1.2.10