Responsive image

திருக்குறுந்தாண்டகம்

திருக்குறுந்தாண்டகம் 1

பாசுரம்
நிதியினைப் பவளத் தூணை
      நெறிமையால் நினைய வல்லார்,
கதியினைக் கஞ்சன் மாளக்
      கண்டுமுன் ஆண்ட மாளும்,
மதியினை மாலை வாழ்த்தி
      வணங்கியென் மனத்து வந்த,
விதியினைக் கண்டு கொண்ட
      தொண்டனேன் விடுகி லேனே (2) 1

திருக்குறுந்தாண்டகம் 2

பாசுரம்
காற்றினைப் புனலைத் தீயைக்
      கடிமதி ளிலங்கை செற்ற
ஏற்றினை, இமயம் மேய
      எழில்மணித் திரளை, இன்ப
ஆற்றினை அமுதந் தன்னை
      அவுணனா ருயிரை யுண்ட
கூற்றினை, குணங்கொண் டுள்ளம்
      கூறுநீ கூறு மாறே. 2

திருக்குறுந்தாண்டகம் 3

பாசுரம்
பாயிரும் பரவை தன்னுள்
      பருவரை திரித்து, வானோர்க்
காயிருந் தமுதங்க் கொண்ட
      அப்பனை எம்பி ரானை,
வேயிருஞ்சோலை சூழ்ந்து
      விரிகதி ரிரிய நின்ற,
மாயிருஞ்சோலை மேய
      மைந்தனை வணங்கி னேனே. 3

திருக்குறுந்தாண்டகம் 4

பாசுரம்
கேட்கயா னுற்ற துண்டு
      கேழலா யுலகங்க் கொண்ட,
பூக்கெழு வண்ண நாரைப்
      போதரக் கனவில் கண்டு,
வாக்கினால் கருமந் தன்னால்
      மனத்தினால் சிரத்தை தன்னால்,
      விழுங்கினேற் கினிய வாறே. 4

திருக்குறுந்தாண்டகம் 5

பாசுரம்
இரும்பனன் றுண்ட நீர்போல்
      எம்பெரு மானுக்கு, என்றன்
அரும்பெற லன்பு புக்கிட்
      டடிமைபூண் டுய்ந்து போனேன்,
வரும்புயல் வண்ண னாரை
      மருவியென் மனத்து வைத்து,
கரும்பினின் சாறு போலப்
      பருகினேற் கினிய லாறே 5

திருக்குறுந்தாண்டகம் 6

பாசுரம்
மூவரில் முதல்வ நாய
      ஒருவனை யுலகங் கொண்ட,
கோவினைக் குடந்தை மேய
      குருமணித் திரளை, இன்பப்
பாவினைப் பச்சைத் தேனைப்
      பைம்பொன்னை யமரர் சென்னிப்
பூவினை, புகழும் தொண்டர்
      எஞ்சொல்லிப் புகழ்வர் தாமே? 6

திருக்குறுந்தாண்டகம் 7

பாசுரம்
இம்மையை மறுமை தன்னை
      எமக்குவீ டாகி நின்ற,
மெய்ம்மையை விரிந்த சோலை
      வியந்திரு வரங்கம் மேய,
செம்மையைக் கருமை தன்னைத்
      திருமலை ஒருமை யானை,
தன்மையை நினைவா ரென்றன்
      தலைமிசை மன்னு வாரே. 7

திருக்குறுந்தாண்டகம் 8

பாசுரம்
வானிடைப் புயலை மாலை
      வரையிடைப் பிரசம் ஈன்ற,
தேனிடைக் கரும்பின் சாற்றைத்
      திருவினை மருவி வாழார்,
மானிடப் பிறவி யந்தோ.
      மதிக்கிலர் கொள்க, தந்தம்
ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக்
      குறுதியே வேண்டி னாரே. 8

திருக்குறுந்தாண்டகம் 9

பாசுரம்
உள்ளமோ ஒன்றில் நில்லாது
      ஓசையி னெரிநின் றுண்ணும்
கொள்ளிமே லெறும்பு போலக்
      குழையுமா லென்ற னுள்ளம்,
தெள்ளியீர். தேவர்க் கெல்லாம்
      தேவரா யுலகம் கொண்ட
ஒள்ளியீர், உம்மை யல்லால்
      எழுமையும் துணையி லோமே. 9

திருக்குறுந்தாண்டகம் 10

பாசுரம்
சித்தமும் செவ்வை நில்லா
      தெஞ்செய்கேன் தீவி னையேன்,
பத்திமைக் கன்பு டையேன்
      ஆவதே பணியா யந்தாய்,
முத்தொளி மரத கம்மே.
      முழங்கொளி முகில்வண் ணா,என்
அத்த.நின் னடிமை யல்லால்
      யாதுமொன் றறிகி லேனே. 10

Enter a number between 1 and 4000.