திருக்குறுந்தாண்டகம்
திருக்குறுந்தாண்டகம் 1
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
திருக்குறுந்தாண்டகம்
பாசுர எண்: 2032
பாசுரம்
நிதியினைப் பவளத் தூணை
நெறிமையால் நினைய வல்லார்,
கதியினைக் கஞ்சன் மாளக்
கண்டுமுன் ஆண்ட மாளும்,
மதியினை மாலை வாழ்த்தி
வணங்கியென் மனத்து வந்த,
விதியினைக் கண்டு கொண்ட
தொண்டனேன் விடுகி லேனே (2) 1
திருக்குறுந்தாண்டகம் 2
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
திருக்குறுந்தாண்டகம்
பாசுர எண்: 2033
பாசுரம்
காற்றினைப் புனலைத் தீயைக்
கடிமதி ளிலங்கை செற்ற
ஏற்றினை, இமயம் மேய
எழில்மணித் திரளை, இன்ப
ஆற்றினை அமுதந் தன்னை
அவுணனா ருயிரை யுண்ட
கூற்றினை, குணங்கொண் டுள்ளம்
கூறுநீ கூறு மாறே. 2
திருக்குறுந்தாண்டகம் 3
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
திருக்குறுந்தாண்டகம்
பாசுர எண்: 2034
பாசுரம்
பாயிரும் பரவை தன்னுள்
பருவரை திரித்து, வானோர்க்
காயிருந் தமுதங்க் கொண்ட
அப்பனை எம்பி ரானை,
வேயிருஞ்சோலை சூழ்ந்து
விரிகதி ரிரிய நின்ற,
மாயிருஞ்சோலை மேய
மைந்தனை வணங்கி னேனே. 3
திருக்குறுந்தாண்டகம் 4
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
திருக்குறுந்தாண்டகம்
பாசுர எண்: 2035
பாசுரம்
கேட்கயா னுற்ற துண்டு
கேழலா யுலகங்க் கொண்ட,
பூக்கெழு வண்ண நாரைப்
போதரக் கனவில் கண்டு,
வாக்கினால் கருமந் தன்னால்
மனத்தினால் சிரத்தை தன்னால்,
விழுங்கினேற் கினிய வாறே. 4
திருக்குறுந்தாண்டகம் 5
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
திருக்குறுந்தாண்டகம்
பாசுர எண்: 2036
பாசுரம்
இரும்பனன் றுண்ட நீர்போல்
எம்பெரு மானுக்கு, என்றன்
அரும்பெற லன்பு புக்கிட்
டடிமைபூண் டுய்ந்து போனேன்,
வரும்புயல் வண்ண னாரை
மருவியென் மனத்து வைத்து,
கரும்பினின் சாறு போலப்
பருகினேற் கினிய லாறே 5
திருக்குறுந்தாண்டகம் 6
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
திருக்குறுந்தாண்டகம்
பாசுர எண்: 2037
பாசுரம்
மூவரில் முதல்வ நாய
ஒருவனை யுலகங் கொண்ட,
கோவினைக் குடந்தை மேய
குருமணித் திரளை, இன்பப்
பாவினைப் பச்சைத் தேனைப்
பைம்பொன்னை யமரர் சென்னிப்
பூவினை, புகழும் தொண்டர்
எஞ்சொல்லிப் புகழ்வர் தாமே? 6
திருக்குறுந்தாண்டகம் 7
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
திருக்குறுந்தாண்டகம்
பாசுர எண்: 2038
பாசுரம்
இம்மையை மறுமை தன்னை
எமக்குவீ டாகி நின்ற,
மெய்ம்மையை விரிந்த சோலை
வியந்திரு வரங்கம் மேய,
செம்மையைக் கருமை தன்னைத்
திருமலை ஒருமை யானை,
தன்மையை நினைவா ரென்றன்
தலைமிசை மன்னு வாரே. 7
திருக்குறுந்தாண்டகம் 8
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
திருக்குறுந்தாண்டகம்
பாசுர எண்: 2039
பாசுரம்
வானிடைப் புயலை மாலை
வரையிடைப் பிரசம் ஈன்ற,
தேனிடைக் கரும்பின் சாற்றைத்
திருவினை மருவி வாழார்,
மானிடப் பிறவி யந்தோ.
மதிக்கிலர் கொள்க, தந்தம்
ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக்
குறுதியே வேண்டி னாரே. 8
திருக்குறுந்தாண்டகம் 9
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
திருக்குறுந்தாண்டகம்
பாசுர எண்: 2040
பாசுரம்
உள்ளமோ ஒன்றில் நில்லாது
ஓசையி னெரிநின் றுண்ணும்
கொள்ளிமே லெறும்பு போலக்
குழையுமா லென்ற னுள்ளம்,
தெள்ளியீர். தேவர்க் கெல்லாம்
தேவரா யுலகம் கொண்ட
ஒள்ளியீர், உம்மை யல்லால்
எழுமையும் துணையி லோமே. 9
திருக்குறுந்தாண்டகம் 10
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
திருக்குறுந்தாண்டகம்
பாசுர எண்: 2041
பாசுரம்
சித்தமும் செவ்வை நில்லா
தெஞ்செய்கேன் தீவி னையேன்,
பத்திமைக் கன்பு டையேன்
ஆவதே பணியா யந்தாய்,
முத்தொளி மரத கம்மே.
முழங்கொளி முகில்வண் ணா,என்
அத்த.நின் னடிமை யல்லால்
யாதுமொன் றறிகி லேனே. 10