பெரியாழ்வார் திருமொழி 9
அருளியவர்: பெரியாழ்வார்
பெரியாழ்வார்_திருமொழி
பாசுர எண்: 21
பாசுரம்
கிடக்கில் தொட்டில்கிழியஉதைத்திடும்
எடுத்துக்கொள்ளில் மருங்கையிறுத்திடும்
ஒடுக்கிப்புல்கில் உதரத்தேபாய்ந்திடும்
மிடுக்கிலாமையால் நான்மெலிந்தேன்நங்காய். 9.
பதம் பிரிக்கவும்
கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்*
எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கு இலாமையால் நான் மெலிந்தேன் நங்காய்.
(பெரியாழ்வார் திருமொழி - 9)
Summary
Lay him in the cradle, and he kicks like it would break; take him to the waist, and he clings like a wench; hold him in front and he trounces the belly. I can bear it no more, Ladies, I am exhausted!
பெரியாழ்வார் திருமொழி 10
அருளியவர்: பெரியாழ்வார்
பெரியாழ்வார்_திருமொழி
பாசுர எண்: 22
பாசுரம்
செந்நெலார்வயல்சூழ் திருக்கோட்டியூர்
மன்னுநாரணன் நம்பிபிறந்தமை
மின்னுநூல் விட்டுசித்தன்விரித்த இப்
பன்னுபாடல்வல்லார்க்கு இல்லைபாவமே. 10.
பதம் பிரிக்கவும்
செந்நெல் ஆர் வயல் சூழ் திருக்கோட்டியூர்
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை
மின்னு நூல் விட்டுசித்தன் விரித்த இப்
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே.
(பெரியாழ்வார் திருமொழி - 10)
Summary
These sweet songs of Vishnuchitta who wears the bright Vedic thread speak of the birth of the eternal Lord Narayana in famed Tirukkottiyur, surrounded by fertile paddy fields. Those who master it will gather no sin.
பெரியாழ்வார் திருமொழி 11
அருளியவர்: பெரியாழ்வார்
பெரியாழ்வார்_திருமொழி
பாசுர எண்: 23
பாசுரம்
சீதக்கடல் உள்ளமுதன்னதேவகி
கோதைக்குழலாள் அசோதைக்குப்போத்தந்த
பேதைக்குழவி பிடித்துச்சுவைத்துண்ணும்
பாதக்கமலங்கள் காணீரே
பவளவாயீர். வந்துகாணீரே. 1.
பெரியாழ்வார் திருமொழி 12
அருளியவர்: பெரியாழ்வார்
பெரியாழ்வார்_திருமொழி
பாசுர எண்: 24
பாசுரம்
முத்தும்மணியும் வயிரமும்நன்பொன்னும்
தத்திப்பதித்துத் தலைப்பெய்தாற்போல் எங்கும்
பத்துவிரலும் மணிவண்ணன்பாதங்கள்
ஒத்திட்டிருந்தவா காணீரே
ஒண்ணுதலீர். வந்துகாணீரே. 2.
பெரியாழ்வார் திருமொழி 13
அருளியவர்: பெரியாழ்வார்
பெரியாழ்வார்_திருமொழி
பாசுர எண்: 25
பாசுரம்
பணைத்தோளிளவாய்ச்சி பால்பாய்ந்தகொங்கை
அணைத்தாரஉண்டு கிடந்தஇப்பிள்ளை
இணைக்காலில் வெள்ளித்தளைநின்றிலங்கும்
கணைக்கால்இருந்தவாகாணீரே
காரிகையீர். வந்துகாணீரே. 3.
பெரியாழ்வார் திருமொழி 14
அருளியவர்: பெரியாழ்வார்
பெரியாழ்வார்_திருமொழி
பாசுர எண்: 26
பாசுரம்
உழந்தாள்நறுநெய் ஓரோர்தடாவுண்ண
இழந்தாளெரிவினாலீர்த்து எழில்மத்தின்
பழந்தாம்பாலோச்சப் பயத்தால்தவழ்ந்தான்
முழந்தாள்இருந்தவாகாணீரே
முகிழ்முலையீர். வந்துகாணீரே. 4.
பெரியாழ்வார் திருமொழி 15
அருளியவர்: பெரியாழ்வார்
பெரியாழ்வார்_திருமொழி
பாசுர எண்: 27
பாசுரம்
பிறங்கியபேய்ச்சி முலைசுவைத்துண்டிட்டு
உறங்குவான்போலேகிடந்த இப்பிள்ளை
மறங்கொளிரணியன் மார்பைமுன்கீண்டான்
குறங்குவளைவந்துகாணீரே
குவிமுலையீர். வந்துகாணீரே. 5.
பெரியாழ்வார் திருமொழி 16
அருளியவர்: பெரியாழ்வார்
பெரியாழ்வார்_திருமொழி
பாசுர எண்: 28
பாசுரம்
மத்தக்களிற்று வசுதேவர்தம்முடை
சித்தம்பிரியாத தேவகிதன்வயிற்றில்
அத்தத்தின்பத்தாநாள் தோன்றியஅச்சுதன்
முத்தமிருந்தவாகாணீரே
முகிழ்நகையீர். வந்துகாணீரே. 6.
பெரியாழ்வார் திருமொழி 17
அருளியவர்: பெரியாழ்வார்
பெரியாழ்வார்_திருமொழி
பாசுர எண்: 29
பாசுரம்
இருங்கைமதகளிறு ஈர்க்கின்றவனை
பருங்கிப்பறித்துக்கொண்டு ஓடுபரமன்தன்
நெருங்குபவளமும் நேர்நாணும்முத்தும்
மருங்கும்இருந்தவாகாணீரே
வாணுதலீர். வந்துகாணீரே. 7.
பெரியாழ்வார் திருமொழி 18
அருளியவர்: பெரியாழ்வார்
பெரியாழ்வார்_திருமொழி
பாசுர எண்: 30
பாசுரம்
வந்தமதலைக்குழாத்தை வலிசெய்து
தந்தக்களிறுபோல் தானேவிளையாடும்
நந்தன்மதலைக்கு நன்றுமழகிய
உந்திஇருந்தவாகாணீரே
ஒளியிழையீர். வந்துகாணீரே. 8.