மான் கொண்ட தோல் மார்வில் மாணியாய் மாவலிமண்
தான் கொண்டு தாளால் அளந்த பெருமானைத்
தேன் கொண்ட சாரல் திருவேங்கடத்தானை
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே.
(பெரிய திருமொழி - 6-8-1)

 

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருநறையூர்

பாசுர எண்: 0
பெரிய திருமொழி : 5

கலங்க முந்நீர் கடைந்தமு தங்கொண்டு இமையோர்
துளங்கல் தீர நல்கு சோதிச் சுடராய
வலங்கை யாழி யிடங்கைச் சங்க முடையானூர்
நலங்கொள் வாய்மை யந்தணர் வாழும் நறையூரே.
(பெரிய திருமொழி - 6-5-1)

கலங்க முந்நீர் கடைந்து அமுதம் கொண்டு இமையோர்
துளங்கல் தீர நல்கு சோதிச் சுடர் ஆய
வலங்கை ஆழி இடங்கைச் சங்கம் உடையான் ஊர்
நலம் கொள் வாய்மை அந்தணர் வாழும் நறையூரே.

(பெரிய திருமொழி - 6-5-1)

திருவுக்கும் திருவாகிய செல்வா !
தெய்வத்துக்கரசே ! செய்யகண்ணா !
உருவச் செஞ்சுடராழி வல்லானே !
உலகுண்ட ஒருவா ! திருமார்பா !
ஒருவற்காற்றி உய்யும்வகை என்றால்
உடனின்றைவர் என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிடவஞ்சி நின்னடைந்தேன்,
அழுந்தூர் மேல்திசை நின்றவம்மானே.
(பெரிய திருமொழி - 7-7-1)

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருக்குடந்தை

பாசுர எண்: 0
பெரிய திருமொழி : 10

கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழலாய் உலகை
இடந்த நம்பி, எங்கள் நம்பி, எறிஞர் அரணழியக்
கடந்த நம்பி கடியார் இலங்கை, உலகை ஈரடியால்
நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே.
(பெரிய திருமொழி - 6.10.1)

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருக்கண்ணபுரம்

பாசுர எண்: 0
பெரிய திருமொழி : 9

கைம்மான மதயானை இடர்தீர்த்த கருமுகிலை
மைம்மான மணியை அணிகொள் மரகதத்தை
எம்மானை, எம்பிரானை, ஈசனை, என் மனத்துள்
அம்மானை அடியேன் அடைந்து உய்ந்து போனேனே.
(பெரிய திருமொழி 8-9-1)

பாசுர எண்: 0
பெரிய திருமொழி : 9

கள்ளம் மனம் விள்ளும் வகை கருதிக் கழல் தொழுவீர் !
வெள்ளம் முதுபரவைத் திரை விரியக் கரை எங்கும்
தெள்ளும் மணி திகழும் சிறுபுலியூர்ச் சல சயனத்து
உள்ளும் எனது உள்ளத்துள்ளும் உறைவாரை உள்ளீரே !
(பெரிய திருமொழி 7-9-1)

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருநைமிசாரண்யம்

பாசுர எண்: 998
பெரிய திருமொழி : 6

வாள் நிலா முறுவல், சிறு நுதல், பெருந்தோள் மாதரார் வன முலைப் பயனே பேணினேன்; அதனைப் பிழை எனக் கருதி பேதையேன் பிறவி நோய் அறுப்பான் ஏண் இலேன் இருந்தேன்; எண்ணினேன்; எண்ணி இளையவர் கலவியின் திறத்தை நாணினேன், வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரண்யத்துள் எந்தாய் !

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்;

பெருந்துயர் இடும்பையில் பிறந்து

கூடினேன் கூடி இளையவர் தம்மோடு

அவர் தரும் கல்வியே கருதி

ஓடினேன்; ஓடி, உய்வதோர் பொருளால்

உணர்வு என்னும் பெரும் பதம் தெரிந்து

நாடினேன்; நாடி, நான் கண்டு கொண்டேன்

நாராயணா என்னும் நாமம்.

(பெரிய திருமொழி 1.1.1)

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருக்குடந்தை

பாசுர எண்: 949
பெரிய திருமொழி : 1

ஆவியே ! அமுதே ! என நினைந்து உருகி

அவர் அவர் பணை முலை துணையாப்

பாவியேன் உணராது, எத்தனை பகலும்

பழுது போய் ஒழிந்தன நாள்கள்;

தூவி சேர் அன்னம் துணையொடும் புணரும்

சூழ் புனல் குடந்தையே தொழுது, என்

நாவினால் உய்ய நான் கண்டு கொண்டேன்

நாராயணா என்னும் நாமம்.

(பெரிய திருமொழி 1.1.5)

சேமமே வேண்டி தீவினை பெருக்கி

தெரிவைமார் உருவமே மருவி

ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய்

ஒழிந்தன கழிந்த அந்நாள்கள்;

காமனார் தாதை நம்முடை அடிகள்

தம் அடைந்தார் மனத்து இருப்பார்

நாமம் நான் உய்ய நான் kaNdukoNdEn

நாராயணா என்னும் நாமம்.

(பெரிய திருமொழி 1.1.3)

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.