சாம் இடத்து என்னை குறிக்கொள் கண்டாய்,

சங்கொடு சக்கரம் ஏந்தினானே !

நா மடித்து என்னை அனேக தண்டம்

செய்வதா நிற்பர் நமன்தமர்கள் ;

போம் இடத்து உன்திறத்து எத்தனையும்

புகாவண்ணம் நிற்பதோர் மாயை வல்லை;

ஆம் இடத்து உன்னைச் சொல்லி வைத்தேன்,

அரங்கத்து அரவணைப் பள்ளியானே!

எல்லையில் வாசல் குறுகச் சென்றால்

எற்றி நமன் தமர் பற்றும் போது*

நில்லுமின் என்னும் உபாயம் இல்லை;

நேமியும் சங்கமும் ஏந்தினானே*

சொல்லலாம் போதே உன் நாமம் எல்லாம்

சொல்லினேன் என்னைக் குறிக் கொண்டு என்றும்*

அல்லற் படா வண்ணம் காக்க வேண்டும்;

அரங்கத்து அரவணைப் பள்ளியானே !

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.