அருளியவர்: பொய்கையாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாசுர எண்: 3190
முதல் திருவந்தாதி

திசையும் திசை உறு தெய்வமும் தெய்வத்து
இசையும் கருமம் எல்லாம் -- அசைவு இல் சீர்
கண்ணன், நெடுமால், கடல் கடைந்த கார் ஓத
வண்ணன் படைத்த மயக்கு.
(முதல் திருவந்தாதி - 7)

அருளியவர்: பொய்கையாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாசுர எண்: 3191
முதல் திருவந்தாதி

மயங்க, வலம்புரி வாய் வைத்து, வானத்து
இயங்கும் எறி கதிரோன் தன்னை, முயங்கு அமருள்
தேர் ஆழியால் மறைத்தது என் நீ, திருமாலே !
போர் ஆழிக் கையால் பொருது?
(முதல் திருவந்தாதி - 8)

அருளியவர்: பொய்கையாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாசுர எண்: 3192
முதல் திருவந்தாதி

பொருகோட்டு ஓர் ஏனமாய்ப் புக்கு இடந்தாய்க்கு அன்று உன்
ஒருகோட்டின் மேல் கிடந்தது அன்றே -- விரி தோட்ட
சேவடியை நீட்டி திசை நடுங்க விண் துளங்க
மா வடிவின் நீ அளந்த மண் !
(முதல் திருவந்தாதி - 9)

அருளியவர்: பொய்கையாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாசுர எண்: 3193
முதல் திருவந்தாதி

மண்ணும் மலையும் மறி கடலும் மாருதமும்
விண்ணும் விழுங்கியது மெய் என்பர்; எண்ணில்
அலகு அளவு கண்ட சீர் ஆழியாய்க்கு அன்று இவ்
உலகு அளவு உண்டோ உன் வாய்?
(முதல் திருவந்தாதி - 10)

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.