அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

மின்னுக் கொடியும் ஓர் வெண் திங்களும்
சூழ் பரிவேடமுமாய்ப்
பின்னல் துலங்கும் அரசிலையும்
பீதகச் சிற்றாடையொடும் ,
மின்னில் பொலிந்த ஓர் கார்முகில் போலக்
கழுத்தினிற் காறையொடும்,
தன்னில் பொலிந்த இருடிகேசன்
தளர்நடை நடவானோ !

(பெரியாழ்வார் திருமொழி - 1.8.3)

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

கன்னற் குடம் திறந்தால் ஒத்து ஊறிக்
கணகண சிரித்து உவந்து
முன் வந்து நின்று முத்தம் தரும் என்
முகில்வண்ணன் திருமார்வன்
தன்னைப் பெற்றேற்குத் தன்வாய் அமுதம்
தந்து என்னைத் தளிர்ப்பிக்கின்றான் ;
தன் எற்று மாற்றலர் தலைகள் மீதே
தளர்நடை நடவானோ !

(பெரியாழ்வார் திருமொழி - 1.8.4)

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

நச்சுவார் முன் நிற்கும் நாராயணன் தன்னை

அச்சோ வருக என்று ஆய்ச்சி உரைத்தன

மச்சு அணி மாடப் புதுவைக்கோன் பட்டன் சொல்

நிச்சலும் பாடுவார் நீள் விசும்பு ஆள்வரே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வட்டு நடுவே வளர்கின்ற மாணிக்க -

மொட்டு நுனியில் முளைக்கின்ற முத்தே போல்

சொட்டுச் சொட்டு என்னத் துளிக்கத் துளிக்க என்

குட்டன் வந்து என்னைப் புறம்புல்குவான்,

கோவிந்தன் என்னைப் புறம்புல்குவான்

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கிண்கிணி கட்டிக் கிறி கட்டிக் கையினில்

கங்கணம் இட்டுக் கழுத்தில் தொடர் கட்டித்

தன் கணத்தாலே சதிரா நடந்து வந்து

என் கண்ணன் என்னைப் புறம்புல்குவான்

எம்பிரான் என்னைப் புறம்புல்குவான்

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கத்தக் கதித்துக் கிடந்த பெருஞ்செல்வம்

ஒத்துப் பொருந்திக்கொண்டு உண்ணாது மண் ஆள்வான்

கொத்துத் தலைவன் குடிகெடத் தோன்றிய

அத்தன் வந்து என்னைப் புறம்புல்குவான்,

ஆயர்கள் ஏறு என் புறம்புல்குவான்

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

நாந்தகம் ஏந்திய நம்பி! சரண் என்று

தாழ்ந்த தனஞ்சயற்கு ஆகி, தரணியில்

வேந்தர்கள் உட்க விசயன் மணித் திண்தேர்

ஊர்ந்தவன் என்னைப் புறம்புல்குவான்

உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான்

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வெண்கலப் பத்திரம் கட்டி விளையாடிக்

கண் பல பெய்த கருந்தழைக் காவின் கீழ்ப்

பண் பல பாடிப் பல்லாண்டு இசைப்ப, பண்டு

மண் பல கொண்டான் புறம்புல்குவான்,

வாமனன் என்னைப் புறம்புல்குவான்

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

சத்திரம் ஏந்தித் தனி ஒரு மாணியாய்

உத்தர வேதியில் நின்ற ஒருவனைக்

கத்திரியர் காணக் காணி முற்றும் கொண்ட

பத்திராகாரன் புறம்புல்குவான்

பார் அளந்தான் என் புறம்புல்குவான்

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பொத்த உரலைக் கவிழ்த்து, அதன்மேல் ஏறி

தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்

மெத்தத் திருவயிறு ஆர விழுங்கிய

அத்தன் வந்து என்னைப் புறம்புல்குவான்

ஆழியான் என்னைப் புறம்புல்குவான்

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.