Responsive image

மூன்றாம்_திருவந்தாதி

மூன்றாம் திருவந்தாதி 1

பாசுர எண்: 2282

பாசுரம்
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன், - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்,
என்னாழி வண்ணன்பால் இன்று. (2) 1

மூன்றாம் திருவந்தாதி 2

பாசுர எண்: 2283

பாசுரம்
இன்றே கழல்கண்டேன் ஏழ்பிறப்பும் யானறுத்தேன்,
பொன்தோய் வரைமார்வில் பூந்துழாய், - அன்று
திருக்கண்டு கொண்ட திருமாலே,உன்னை
மருக்கண்டு கொண்டேன் மனம். 2

மூன்றாம் திருவந்தாதி 3

பாசுர எண்: 2284

பாசுரம்
மனத்துள்ளான் மாகடல்நீ ருள்ளான், மலராள்
தனத்துள்ளான் தண்டுழாய் மார்பன், - சினத்துச்
செருநர்உகச் செற்றுகந்த தேங்கோத வண்ணன்,
வருநரகம் தீர்க்கும் மருந்து. 3

மூன்றாம் திருவந்தாதி 4

பாசுர எண்: 2285

பாசுரம்
மருந்தும் பொருளும் அமுதமும் தானே,
திருந்திய செங்கண்மா லாங்கே, - பொருந்தியும்
நின்றுலக முண்டுமிழ்ந்தும் நீரேற்றும் மூவடியால்,
அன்றுலகம் தாயோன் அடி. 4

மூன்றாம் திருவந்தாதி 5

பாசுர எண்: 2286

பாசுரம்
அடிவண்ணம் தாமரை யன்றுலகம் தாயோன்,
படிவண்ணம் பார்க்கடல்நீர் வண்ணம், - முடிவண்ணம்
ஓராழி வெய்யோ னொளியு மஃதன்றே
ஆராழி கொண்டாற் கழகு? 5

பதம் பிரிக்கவும்
சிறப்பில் வீடு சுவர்க்கம் நரகம்*
இறப்பில் எய்துக, எய்தற்க* யானும்
பிறப்பில் பல் பிறவிப் பெருமானை*
மறப்பு ஒன்று இன்றி என்றும் மகிழ்வேனே.
(திருவாய்மொழி - 2.9.5)

English
siRappil veedu suvarkgam naragam
iRappil eidhuga, eidharkka* yaanum
piRappil palpiRavi perumaanai
maRappu ondRu indRi endRum magizhvEnE.
(Thiruvaimozhi - 2.9.5)

Summary

At the end of this birth, I am prepared for any eventuality. I may attain liberation or go to heaven or go to hell. It is immaterial to me, for I have resolved to meditate on the birthless Lord, who for the sake of His devotees comes to this earth in various forms. Wherever I go to, I shall ever think upon His grace, His infinite auspicious qualities, His admirable ploys and exploits and be immersed in divine bliss.

மூன்றாம் திருவந்தாதி 6

பாசுர எண்: 2287

பாசுரம்
அழகன்றே யாழியாற் காழிநீர் வண்ணம்,
அழகன்றே யண்டம் கடத்தல், - அழகன்றே
அங்கைநீ ரேற்றாற் கலர்மேலோன் கால்கழுவ,
கங்கைநீர் கான்ற கழல்? 6

மூன்றாம் திருவந்தாதி 7

பாசுர எண்: 2288

பாசுரம்
கழல்தொழுதும் வாநெஞ்சே. கார்கடல்நீர் வேலை,
பொழிலளந்த புள்ளூர்திச் செல்வன், - எழிலளந்தங்
கெண்ணற் கரியானை எப்பொருட்கும் சேயானை,
நண்ணற் கரியானை நாம். 7

மூன்றாம் திருவந்தாதி 8

பாசுர எண்: 2289

பாசுரம்
நாமம் பலசொல்லி நாராய ணாவென்று,
நாமங்கை யால்தொழுதும் நன்னெஞ்சே. - வா,மருவி
மண்ணுலக முண்டுமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய்,
கண்ணனையே காண்கநங் கண். 8

மூன்றாம் திருவந்தாதி 9

பாசுர எண்: 2290

பாசுரம்
கண்ணுங் கமலம் கமலமே கைத்தலமும்,
மண்ணளந்த பாதமும் மற்றவையே, எண்ணில்
கருமா முகில்வண்ணன் கார்கடல்நீர் வண்ணன்,
திருமா மணிவண்ணன் தேசு. 9

மூன்றாம் திருவந்தாதி 10

பாசுர எண்: 2291

பாசுரம்
தேசும் திறலும் திருவும் உருவமும்,
மாசில் குடிப்பிறப்பும் மற்றவையும் - பேசில்
வலம் புரிந்த வாஞ்சங்கம் கொண்டான்பே ரோத,
நலம்புரிந்து சென்றடையும் நன்கு. 10

Enter a number between 1 and 4000.