மதுரகவி_ஆழ்வார்
கண்ணிநுண் சிறுத்தாம்பு 1
அருளியவர்: மதுரகவி_ஆழ்வார்
கண்ணிநுண்_சிறுத்தாம்பு
பாசுர எண்: 937
பாசுரம்
கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணி யபெரு மாயன்,என் னப்பனில்,
நண்ணித் தென்குரு கூர்நம்பி யென்றக்கால்,
அண்ணிக் கும்அமு தூறுமென் நாவுக்கே. (1)
பதம் பிரிக்கவும்
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டு உண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்,
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்,
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே.
கண்ணிநுண் சிறுத்தாம்பு 2
அருளியவர்: மதுரகவி_ஆழ்வார்
கண்ணிநுண்_சிறுத்தாம்பு
பாசுர எண்: 938
பாசுரம்
நாவி னால்நவிற் றின்ப மெய்தினேன்,
மேவி னேனவன் பொன்னடி மெய்ம்மையே,
தேவு மற்றறி யேன்குரு கூர்நம்பி,
பாவி னின்னிசை பாடித் திரிவனே. (2)
பதம் பிரிக்கவும்
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் *
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே *
தேவு மற்றறியேன் குருகூர் நம்பி *
பாவின் இன்னிசை பாடித் திரிவனே.
(கண்ணிநுண் சிறுத்தாம்பு - 2)
கண்ணிநுண் சிறுத்தாம்பு 3
அருளியவர்: மதுரகவி_ஆழ்வார்
கண்ணிநுண்_சிறுத்தாம்பு
பாசுர எண்: 939
பாசுரம்
திரிதந் தாகிலும் தேவ பிரானுடை,
கரிய கோலத் திருவுருக் காண்பன்நான்,
பெரிய வண்குரு கூர்நகர் நம்பிக்காள்
உரிய னாய்,அடி யேன்பெற்ற நன்மையே. (3)
பதம் பிரிக்கவும்
திரிதந்து ஆகிலும் தேவபிரான் உடை*
கரிய கோலத் திருவுருக் காண்பன் நான்*
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்
உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே.
(கண்ணிநுண் சிறுத்தாம்பு - 3)
கண்ணிநுண் சிறுத்தாம்பு 4
அருளியவர்: மதுரகவி_ஆழ்வார்
கண்ணிநுண்_சிறுத்தாம்பு
பாசுர எண்: 940
பாசுரம்
நன்மை யால்மிக்க நான்மறை யாளர்கள்,
புன்மை யாகக் கருதுவ ராதலின்,
அன்னை யாயத்த னாயென்னை யாண்டிடும்
தன்மை யான்,சட கோபனென் நம்பியே. (4)
பதம் பிரிக்கவும்
நன்மையால் மிக்க நான் மறையாளர்கள்
புன்மையாகக் கருதுவர்; ஆதலின்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே.
கண்ணிநுண் சிறுத்தாம்பு 5
அருளியவர்: மதுரகவி_ஆழ்வார்
கண்ணிநுண்_சிறுத்தாம்பு
பாசுர எண்: 941
பாசுரம்
நம்பி னேன்பிறர் நன்பொருள் தன்னையும்,
நம்பி னேன்மட வாரையும் முன்னெல்லாம்,
செம்பொன் மாடத் திருக்குரு கூர்நம்பிக்
கன்ப னாய்,அடி யேஞ்சதிர்த் தேனின்றே. (5)
பதம் பிரிக்கவும்
நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையும் முன் எலாம்
செம்பொன் மாடத் திருக் கூருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே.
(கண்ணிநுண் சிறுத்தாம்பு - 5)
கண்ணிநுண் சிறுத்தாம்பு 6
அருளியவர்: மதுரகவி_ஆழ்வார்
கண்ணிநுண்_சிறுத்தாம்பு
பாசுர எண்: 942
பாசுரம்
இன்று தொட்டு மெழுமையு மெம்பிரான்,
நின்று தன்புக ழேத்த வருளினான்,
குன்ற மாடத் திருக்கு கூர்நம்பி,
என்று மென்னை யிகழ்விலன் காண்மினே. (6)
பதம் பிரிக்கவும்
இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்று தன்புகழ் ஏத்த அருளினான்;
குன்ற மாடத் திருக் குருகூர் நம்பி
என்றும் என்னை இகழ்விலன் காண்மினே.
(கண்ணிநுண் சிறுத்தாம்பு - 6)
கண்ணிநுண் சிறுத்தாம்பு 7
அருளியவர்: மதுரகவி_ஆழ்வார்
கண்ணிநுண்_சிறுத்தாம்பு
பாசுர எண்: 943
பாசுரம்
கண்டு கொண்டென்னைக் காரிமா றப்பிரான்,
பண்டை வல்வினை பாற்றி யருளினான்,
எண்டி சையு மறிய இயம்புகேன்,
ஒண்ட மிழ்ச்சட கோப னருளையே. (7)
பதம் பிரிக்கவும்
கண்டு கொண்டு என்னைக் காரிமாறப்பிரான்
பண்டை வல்வினை பாற்றி அருளினான்
எண்திசையும் அறிய இயம்புகேன்
ஒண்தமிழ்ச் சடகோபன் அருளையே.
(கண்ணிநுண் சிறுத்தாம்பு - 7)
கண்ணிநுண் சிறுத்தாம்பு 8
அருளியவர்: மதுரகவி_ஆழ்வார்
கண்ணிநுண்_சிறுத்தாம்பு
பாசுர எண்: 944
பாசுரம்
அருள்கொண் டாடு மடியவ ரின்புற,
அருளி னானவ் வருமறை யின்பொருள்,
அருள்கொண் டாயிர மின்தமிழ் பாடினான்,
அருள்கண் டீரிவ் வுலகினில் மிக்கதே. (8)
பதம் பிரிக்கவும்
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
அருளினான் அவ் அரு மறையின் பொருள்
அருள்கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே.
(கண்ணிநுண் சிறுத்தாம்பு - 8)
கண்ணிநுண் சிறுத்தாம்பு 9
அருளியவர்: மதுரகவி_ஆழ்வார்
கண்ணிநுண்_சிறுத்தாம்பு
பாசுர எண்: 945
பாசுரம்
மிக்க வேதியர் வேதத்தி னுட்பொருள்
நிற்கப் பாடியென் நெஞ்சுள் நிறுத்தினான்,
தக்க சீர்ச்சட கோபனென் நம்பிக்கு,ஆட்
புக்க காத லடிமைப் பயனன்றே? (9)
பதம் பிரிக்கவும்
மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள்
நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர் சடகோபன் என் நம்பிக்கு ஆட்
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே.
(கண்ணிநுண் சிறுத்தாம்பு - 9)
கண்ணிநுண் சிறுத்தாம்பு 10
அருளியவர்: மதுரகவி_ஆழ்வார்
கண்ணிநுண்_சிறுத்தாம்பு
பாசுர எண்: 946
பாசுரம்
பயனன் றாகிலும் பாங்கல ராகிலும்
செயல்நன் றாகத் திருத்திப் பணிகொள்வான்,
குயில்நின் றார்ப்பொழில் சூழ்குரு கூர்நம்பி,
முயல்கின் றேனுன்றன் மொய்கழற் கன்பையே. (10)
பதம் பிரிக்கவும்
பயன் அன்றாகிலும் பாங்கு அல்லர் ஆகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணிகொள்வான்
குயில் நின்று ஆர் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே.
(கண்ணிநுண் சிறுத்தாம்பு - 10)