பெருமாள்_திருமொழி
பெருமாள் திருமொழி 21
அருளியவர்: குலசேகர_ஆழ்வார்
பெருமாள்_திருமொழி
பாசுர எண்: 667
பாசுரம்
அல்லிமாமலர் மங்கைநாதன்
அரங்கன்மெய்யடி யார்கள்தம்
எல்லையிலடி மைத்திறத்தினில்
என்றுமேவு மனத்தனாம்
கொல்லிகாவலன் கூடல்நாயகன்
கோழிக்கோன்குல சேகரன்
சொல்லினின்தமிழ் மாலைவல்லவர்
தொண்டர்தொண்டர்க ளாவரே 2.10
பெருமாள் திருமொழி 22
அருளியவர்: குலசேகர_ஆழ்வார்
பெருமாள்_திருமொழி
பாசுர எண்: 668
பாசுரம்
மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும்இவ்
வையந் தன்னொடும் கூடுவ தில்லையான்
ஐய னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன்
மையல் கொண்டாழிந் தேனென்றன் மாலுக்கே 3.1
பெருமாள் திருமொழி 23
அருளியவர்: குலசேகர_ஆழ்வார்
பெருமாள்_திருமொழி
பாசுர எண்: 669
பாசுரம்
நூலி னேரிடை யார்திறத் தேநிற்கும்
ஞாலந் தன்னொடும் கூடுவ தில்லையான்
ஆலியா அழையா அரங்கா வென்று
மாலெ ழுந்தொழிந் தேனென்றன் மாலுக்கே 3.2
பெருமாள் திருமொழி 24
அருளியவர்: குலசேகர_ஆழ்வார்
பெருமாள்_திருமொழி
பாசுர எண்: 670
பாசுரம்
மார னார்வரி வெஞ்சிலைக் காட்செய்யும்
பாரி னாரொடும் கூடுவ தில்லையான்
ஆர மார்வ னரங்க னனந்தன்நல்
நார ணன்நர காந்தகன் பித்தனே 3.3
பெருமாள் திருமொழி 25
அருளியவர்: குலசேகர_ஆழ்வார்
பெருமாள்_திருமொழி
பாசுர எண்: 671
பாசுரம்
உண்டி யேயுடை யேயுகந் தோடும்,இம்
மண்ட லத்தொடும் கூடுவ தில்லையான்
அண்ட வாண னரங்கன்வன் பேய்முலை
உண்ட வாயன்ற னுன்மத்தன் காண்மினே 3.4
பெருமாள் திருமொழி 26
அருளியவர்: குலசேகர_ஆழ்வார்
பெருமாள்_திருமொழி
பாசுர எண்: 672
பாசுரம்
தீதில் நன்னெறி நிற்கஅல் லாதுசெய்
நீதி யாரொடும் கூடுவ தில்லையான்
ஆதி ஆய னரங்கன்,அந் தாமரைப்
பேதை மாமண வாளன்றன் பித்தனே 3.5
பெருமாள் திருமொழி 27
அருளியவர்: குலசேகர_ஆழ்வார்
பெருமாள்_திருமொழி
பாசுர எண்: 673
பாசுரம்
எம்ப ரத்தரல் லாரொடும் கூடலன்
உம்பர் வாழ்வையொன் றாக கருதிலன்
தம்பி ரானம ரர்க்கு,அரங் கநகர்
எம்பி ரானுக்கெ ழுமையும் பித்தனே 3.6
பெருமாள் திருமொழி 28
அருளியவர்: குலசேகர_ஆழ்வார்
பெருமாள்_திருமொழி
பாசுர எண்: 674
பாசுரம்
எத்தி றத்திலும் யாரொடும் கூடும்,அச்
சித்தந் தன்னைத் தவிர்த்தனன் செங்கண்மால்
அத்த னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன்
பித்த னாயொழிந் தேனெம்பி ரானுக்கே 3.7
பெருமாள் திருமொழி 29
அருளியவர்: குலசேகர_ஆழ்வார்
பெருமாள்_திருமொழி
பாசுர எண்: 675
பாசுரம்
பேய ரேயெனக் கியாவரும் யானுமோர்
பேய னேயெவர்க் கும்இது பேசியென்
ஆய னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன்
பேய னாயொழிந் தேனெம்பி ரானுக்கே 3.8
பெருமாள் திருமொழி 30
அருளியவர்: குலசேகர_ஆழ்வார்
பெருமாள்_திருமொழி
பாசுர எண்: 676
பாசுரம்
அங்கை யாழி யரங்க னடியிணை
தங்கு சிந்தைத் தனிப்பெரும் பித்தனாய்
கொங்கர் கோன்குல சேகரன் சொன்னசொல்
இங்கு வல்லவர்க் கேதமொன் றில்லையே 3.9