Responsive image

பெருமாள்_திருமொழி

பெருமாள் திருமொழி 11

பாசுர எண்: 657

பாசுரம்
திடர்விளங்கு கரைப்பொன்னி நடுவு பாட்டுத்
      திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
கடல்விளங்கு கருமேனி யம்மான் றன்னைக்
      கண்ணாரக் கண்டுகக்கும் காதல் தன்னால்
குடைவிளங்கு விறல்தானைக் கொற்ற வொள்வாள்
      கூடலர்கோன் கொடைகுலசே கரன்சொற் செய்த
நடைவிளங்கு தமிழ்மாலை பத்தும் வல்லார்
      நலந்திகழ்நா ரணனடிக்கீழ் நண்ணு வாரே 1.11

பெருமாள் திருமொழி 12

பாசுர எண்: 658

பாசுரம்
தேட்டரும்திறல் தேனினைத்தென்
      னரங்கனைத்திரு மாதுவாழ்
வாட்டமில்வன மாலைமார்வனை
      வாழ்த்திமால்கொள்சிந் தையராய்
ஆட்டமேவி யலந்தழைத்தயர்
      வெய்தும்மெய்யடி யார்கள்தம்
ஈட்டம்கண்டிடக் கூடுமேலது
      காணும்கண்பய னாவதே 2.1

பெருமாள் திருமொழி 13

பாசுர எண்: 659

பாசுரம்
தோடுலாமலர் மங்கைதோளிணை
      தேய்ந்ததும்சுடர் வாளியால்
நீடுமாமரம் செற்றதும்நிரை
      மேய்த்துமிவை யேநினைந்து
ஆடிப்பாடி அரங்கவோஎன்ற
      ழைக்கும்தொண்ட ரடிப்பொடி
ஆடனாம்பெறில் கங்கைநீர்குடைந்
      தாடும்வேட்கையென் னாவதே 2.2

பெருமாள் திருமொழி 14

பாசுர எண்: 660

பாசுரம்
ஏறடர்த்ததும் ஏனமாய்நிலம்
      கீண்டதும்முன்னி ராமனாய்
மாறடர்த்ததும் மண்ணளந்ததும்
      சொல்லிப்பாடிவண் பொன்னிப்பே
ராறுபோல்வரும் கண்ணநீர்கொண்ட
      ரங்கன்கோயில் திருமுற்றம்
சேறுசெய்தொண்டர் சேவடிச்செழுஞ்
      சேறெஞ்சென்னிக் கணிவனே 2.3

பெருமாள் திருமொழி 15

பாசுர எண்: 661

பாசுரம்
தோய்த்ததண்தயிர் வெண்ணெய்பாலுடன்
      உண்டலும்உடன் றாய்ச்சிகண்டு
ஆர்த்ததோளுடை யெம்பிரானென்ன
      ரங்கனுக்கடி யார்களாய்
நாத்தழும்பெழ நாரணாவென்ற
      ழைத்துமெய்தழும் பத்தொழு
தேத்தி,இன்புறும் தொண்டர்சேவடி
      ஏத்திவாழ்த்துமென் நெஞ்சமே 2.4

பெருமாள் திருமொழி 16

பாசுர எண்: 662

பாசுரம்
பொய்சிலைக்குர லேற்றெருத்தமி
      றுத்துபோரர வீர்த்தகோன்
செய்சிலைச்சுடர் சூழொளித்திண்ண
      மாமதிள்தென்ன ரங்கனாம்
மெய்சிலைக்கரு மேகமொன்றுதம்
      நெஞ்சில்நின்று திகழப்போய்
மெய்சிலிர்ப்பவர் தம்மையேநினைந்
      தென்மனம்மெய்சி லிர்க்குமே 2.5

பெருமாள் திருமொழி 17

பாசுர எண்: 663

பாசுரம்
ஆதியந்தம னந்தமற்புதம்
      ஆனவானவர் தம்பிரான்
பாதமாமலர் சூடும்பத்தியி
      லாதபாவிக ளுய்ந்திட
தீதில்நன்னெரி காட்டியெங்கும்
      திரிந்தரங்கனெம் மானுக்கே
காதல்செய்தொண்டர்க் கெப்பிறப்பிலும்
      காதல்செய்யுமென் னெஞ்சமே 2.6

பெருமாள் திருமொழி 18

பாசுர எண்: 664

பாசுரம்
காரினம்புரை மேனிநல்கதிர்
      முத்தவெண்ணகைச் செய்யவாய்
ஆரமார்வ னரங்கனென்னும்
      அரும்பெருஞ்சுட ரொன்றினை
சேரும்நெஞ்சின ராகிச்சேர்ந்துக
      சிந்திழிந்தகண் ணீர்களால்
வாரநிற்பவர் தாளிணைக்கொரு
      வாரமாகுமென் னெஞ்சமே 2.7

பெருமாள் திருமொழி 19

பாசுர எண்: 665

பாசுரம்
மாலையுற்றக டல்கிடந்தவன்
      வண்டுகிண்டுந றுந்துழாய்
மாலையுற்றவ ரைப்பெருந்திரு
      மார்வனைமலர்க் கண்ணனை
மாலையுற்றெழுந் தடிப்பாடித்தி
      ரிந்தரங்கனெம் மானுக்கே
மாலையுற்றிடும் தொண்டர்வாழ்வுக்கு
      மாலையுற்றதென் நெஞ்சமே 2.8

பெருமாள் திருமொழி 20

பாசுர எண்: 666

பாசுரம்
மொய்த்துக்கண்பனி சோரமெய்கள்சி
      லிர்ப்பஏங்கி யிளைத்துநின்று
எய்த்துக்கும்பிடு நட்டமிட்டெழுந்
      தாடிப்பாடியி றைஞ்சி,என்
அத்தனச்ச னரங்கனுக்கடி
      யார்களாகி அவனுக்கே
பித்தராமவர் பித்தரல்லர்கள்
      மற்றையார்முற்றும் பித்தரே 2.9

Enter a number between 1 and 4000.