பெரிய_திருவந்தாதி
பெரிய திருவந்தாதி 1
அருளியவர்: நம்மாழ்வார்
பெரிய_திருவந்தாதி
பாசுர எண்: 2585
பாசுரம்
முயற்றி சுமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சே,
இயற்றுவாய் எம்மொடுநீ கூடி,-நயப்புடைய
நாவீன் தொடைக்கிளவி யுள்பொதிவோம், நற்பூவைப்
பூவீன்ற வண்ணன் புகழ்
பெரிய திருவந்தாதி 2
அருளியவர்: நம்மாழ்வார்
பெரிய_திருவந்தாதி
பாசுர எண்: 2586
பாசுரம்
புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம்-இகழோம் மற்
றெங்கள் மால். செங்கண் மால். சீறல்நீ, தீவினையோம்
எங்கள் மால் கண்டாய் இவை.
பெரிய திருவந்தாதி 3
அருளியவர்: நம்மாழ்வார்
பெரிய_திருவந்தாதி
பாசுர எண்: 2587
பாசுரம்
இவையன்றே நல்ல இவையன்றே தீய,
இவையென் றிவையறிவ னேலும்,-இவையெல்லாம்
என்னால் அடைப்புநீக் கொண்ணா திறையவனே,
என்னால் செயற்பால தென்?
பெரிய திருவந்தாதி 4
அருளியவர்: நம்மாழ்வார்
பெரிய_திருவந்தாதி
பாசுர எண்: 2588
பாசுரம்
என்னின் மிகுபுகழார் யாவரே, பின்னையும்மற்
றெண்ணில் மிகுபுகழேன் யானல்லால்,-என்ன
கருஞ்சோதிக் கண்ணன் கடல்புரையும், சீலப்
பெருஞ்சோதிக் கென்னெஞ்சாட் பெற்று?
பெரிய திருவந்தாதி 5
அருளியவர்: நம்மாழ்வார்
பெரிய_திருவந்தாதி
பாசுர எண்: 2589
பாசுரம்
பெற்றதாய் நீயே பிறப்பித்த தந்தைநீ
மற்றையா ராவாரும் நீபேசில், எற்றேயோ
மாய.மா மாயவளை மாயமுலை வாய்வைத்த
நீயம்மா. காட்டும் நெறி.
பெரிய திருவந்தாதி 6
அருளியவர்: நம்மாழ்வார்
பெரிய_திருவந்தாதி
பாசுர எண்: 2590
பாசுரம்
நெறிகாட்டி நீக்குதியோ, நின்பால் கருமா
முறிமேனி காட்டுதியோ, மேனாள்-அறியோமை
எஞ்செய்வா னெண்ணினாய் கண்ணனே, ஈதுரையாய்
எஞ்செய்தா லென்படோ ம் யாம்?
பெரிய திருவந்தாதி 7
அருளியவர்: நம்மாழ்வார்
பெரிய_திருவந்தாதி
பாசுர எண்: 2591
பாசுரம்
யாமே அருவினையோம் சேயோம், என் நெஞ்சினார்
தாமே யணுக்கராய்ச் சார்ந்தொழிந்தார்,-பூமேய
செம்மாதை நின் மார்வில் சேர்வித்து, பாரிடந்த
அம்மா. நின் பாதத் தருகு.
பெரிய திருவந்தாதி 8
அருளியவர்: நம்மாழ்வார்
பெரிய_திருவந்தாதி
பாசுர எண்: 2592
பாசுரம்
அருகும் சுவடும் தெரிவுணரோம், அன்பே
பெருகும் மிகவிதுவென்? பேசீர்,-பருகலாம்
பண்புடையீர். பாரளந்தீர். பாவியேம்கண் காண்பரிய
_ண்புடையீர் _ம்மை _மக்கு.
பெரிய திருவந்தாதி 9
அருளியவர்: நம்மாழ்வார்
பெரிய_திருவந்தாதி
பாசுர எண்: 2593
பாசுரம்
_மக்கடியோம் என்றென்று நொந்துதுரைத்தென், மாலார்
தமக்கவர்த்தாம் சார்வரிய ரானால்?-எமக்கினி
யாதானு மாகிடுகாண் நெஞ்சே, அவர்த்திறத்தே
யாதானும் சிந்தித் திரு.
பெரிய திருவந்தாதி 10
அருளியவர்: நம்மாழ்வார்
பெரிய_திருவந்தாதி
பாசுர எண்: 2594
பாசுரம்
இருநால்வர் ஈரைந்தின் மேலொருவர், எட்டோ
டொருநால்வர் ஓரிருவர் அல்லால், திருமாற்கு
யாமார் வணக்கமார் ஏபாவம் நன்னெஞ்சே
நாமா மிகவுடையோம் நாழ்?