பூதத்தாழ்வார்
இரண்டாம் திருவந்தாதி 31
அருளியவர்: பூதத்தாழ்வார்
இரண்டாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2212
பாசுரம்
பிரானென்று நாளும் பெரும்புலரி யென்றும்,
குராநல் செழும்போது கொண்டு, - வராகத்
தணியுருவன் பாதம் பணியுமவர் கண்டீர்,
மணியுருவம் காண்பார் மகிழ்ந்து. 31
இரண்டாம் திருவந்தாதி 32
அருளியவர்: பூதத்தாழ்வார்
இரண்டாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2213
பாசுரம்
மகிழ்ந்தது சிந்தை திருமாலே, மற்றும்
மகிழ்ந்ததுன் பாதமே போற்றி, - மகிழ்ந்த
தழலாழி சங்க மவைபாடி யாடும்,
தொழிலாகம் சூழ்ந்து துணிந்து. 32
இரண்டாம் திருவந்தாதி 33
அருளியவர்: பூதத்தாழ்வார்
இரண்டாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2214
பாசுரம்
துணிந்தது சிந்தை துழாயலங்கல், அங்கம்
அணிந்தவன்பே ருள்ளத்துப் பல்கால், - பணிந்ததுவும்
வேய்பிறங்கு சாரல் விறல்வேங் கடவனையே,
வாய்திறங்கள் சொல்லும் வகை. 33
இரண்டாம் திருவந்தாதி 34
அருளியவர்: பூதத்தாழ்வார்
இரண்டாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2215
பாசுரம்
வகையா லவனி யிரந்தளந்தாய் பாதம்,
புகையால் நறுமலாரால் முன்னே, - மிகவாய்ந்த
அன்பாக்கி யேத்தி யடிமைப்பட்டேனுனக்கு,
என்பாக்கி யத்தால் இனி. 34
இரண்டாம் திருவந்தாதி 35
அருளியவர்: பூதத்தாழ்வார்
இரண்டாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2216
பாசுரம்
இனிதென்பர் காமம் அதனிலும் ஆற்ற,
இனிதென்பர் தண்ணீரும் எந்தாய், - இனிதென்று
காமநீர் வேளாது நின்பெருமை வேட்பரேல்,
சேமநீ ராகும் சிறிது. 35
இரண்டாம் திருவந்தாதி 36
அருளியவர்: பூதத்தாழ்வார்
இரண்டாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2217
பாசுரம்
சிறியார் பெருமை சிறிதின்க ணெய்தும்,
அறியாரும் தாமறியா ராவர், - அறியாமை
மண்கொண்டு மண்ணுண்டு மண்ணுமிழ்ந்த மாயனென்று,
எண்கொண்டேன் னெஞ்சே. இரு. 36
இரண்டாம் திருவந்தாதி 37
அருளியவர்: பூதத்தாழ்வார்
இரண்டாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2218
பாசுரம்
இருந்தண் கமலத் திருமலரி னுள்ளே,
திருந்து திசைமுகனைத் தந்தாய், - பொருந்தியநின்
பாதங்க ளேத்திப் பணியாவேல், பல்பிறப்பும்
ஏதங்க ளெல்லா மெமக்கு. 37
இரண்டாம் திருவந்தாதி 38
அருளியவர்: பூதத்தாழ்வார்
இரண்டாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2219
பாசுரம்
எமக்கென் றிருநிதியம் ஏமாந்தி ராதே,
தமக்கென்றும் சார்வ மறிந்து, - நமக்கென்றும்
மாதவனே யென்னும் மனம்படைத்து மற்றவன்பேர்
ஓதுவதே நாவினா லோத்து. 38
இரண்டாம் திருவந்தாதி 39
அருளியவர்: பூதத்தாழ்வார்
இரண்டாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2220
பாசுரம்
ஓத்தின் பொருள்முடிவும் இத்தனையே, உத்தமன்பேர்
ஏத்தும் திறமறிமி னேழைகாள், ஓத்தனை
வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல், மாதவன்பேர்
சொல்லுவதே ஓத்தின் சுருக்கு. 39
இரண்டாம் திருவந்தாதி 40
அருளியவர்: பூதத்தாழ்வார்
இரண்டாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2221
பாசுரம்
சுருக்காக வாங்கிச் சுலாவினின்று ஐயார்
நெருக்காமுன் நீர்நினைமின் கண்டீர், - திருப்பொலிந்த
ஆகத்தான் பாதம் அறிந்தும், அறியாத
போகத்தா லில்லை பொருள். 40