பூதத்தாழ்வார்
இரண்டாம் திருவந்தாதி 11
அருளியவர்: பூதத்தாழ்வார்
இரண்டாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2192
பாசுரம்
கடைநின் றமரர் கழல்தொழுது, நாளும்
இடைநின்ற இன்பத்த ராவர், புடைநின்ற
நீரோத மேனி நெடுமாலே, நின்னடியை
ஆரோத வல்லார் அவர்? 11
இரண்டாம் திருவந்தாதி 12
அருளியவர்: பூதத்தாழ்வார்
இரண்டாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2193
பாசுரம்
அவரிவரென் றில்லை அரவணையான் பாதம்,
எவர்வணங்கி யேத்தாதா ரெண்ணில், பலரும்
செழுங்கதிரோ னெண்மலரோன் கண்ணுதலோன் அன்றே
தொழுந்தகையார் நாளும் தொடர்ந்து? 12
இரண்டாம் திருவந்தாதி 13
அருளியவர்: பூதத்தாழ்வார்
இரண்டாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2194
பாசுரம்
தொடரெடுத்த மால்யானை சூழ்கயம்புக் கஞ்சிப்
படரெடுத்த பைங்கமலம் கொண்டு,அன் - றிடரடுக்க
ஆழியான் பாதம் பணிந்தன்றே, வானவர்கோன்
பாழிதா னெய்திற்றுப் பண்டு? 13
இரண்டாம் திருவந்தாதி 14
அருளியவர்: பூதத்தாழ்வார்
இரண்டாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2195
பாசுரம்
பண்டிப் பெரும்பதியை யாக்கி பழிபாவம்
கொண்டுஇங்கு வாழ்வாரைக் கூறாதே, - எண்டிசையும்
பேர்த்தகரம் நான்குடையான் பேரோதிப் பேதைகாள்
தீர்த்தகரர் ஆமின் திரிந்து. 14
இரண்டாம் திருவந்தாதி 15
அருளியவர்: பூதத்தாழ்வார்
இரண்டாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2196
பாசுரம்
திரிந்தது வெஞ்சமத்துத் தேர்கடவி, அன்று
பிரிந்தது சீதையைமான் பின்போய், - புரிந்ததுவும்
கண்பள்ளி கொள்ள அழகியதே, நாகத்தின்
தண்பள்ளி கொள்வான் றனக்கு. 15
இரண்டாம் திருவந்தாதி 16
அருளியவர்: பூதத்தாழ்வார்
இரண்டாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2197
பாசுரம்
தனக்கடிமை பட்டது தானறியா னேலும்
மனத்தடைய வைப்பதாம் மாலை, - வனத்திடரை
ஏரியாம் வண்ணம் இயற்று மிதுவல்லால்,
மாரியார் பெய்கிற்பார் மற்று? 16
இரண்டாம் திருவந்தாதி 17
அருளியவர்: பூதத்தாழ்வார்
இரண்டாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2198
பாசுரம்
மற்றா ரியலாவர் வானவர்கோன் மாமலரோன்,
சுற்றும் வணங்கும் தொழிலானை, - ஒற்றைப்
பிறையிருந்த செஞ்சடையான் பிஞ்சென்று, மாலைக்
குறையிரந்து தான்முடித்தான் கொண்டு. 17
இரண்டாம் திருவந்தாதி 18
அருளியவர்: பூதத்தாழ்வார்
இரண்டாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2199
பாசுரம்
கொண்ட துலகம் குறளுருவாய்க் கோளரியாய்,
ஒண்டிறலோன் மார்வத் துகிர்வைத்தது - உண்டதுவும்
தான்கடந்த ஏழுலகே தாமரைக்கண் மாலொருநாள்,
வான்கடந்தான் செய்த வழக்கு. 18
இரண்டாம் திருவந்தாதி 19
அருளியவர்: பூதத்தாழ்வார்
இரண்டாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2200
பாசுரம்
வழக்கன்று கண்டாய் வலிசகடம் செற்றாய்,
வழக்கொன்று நீமதிக்க வேண்டா, - குழக்கன்று
தீவிளவின் காய்க்கெறிந்த தீமை திருமாலே,
பார்விளங்கச் செய்தாய் பழி. 19
இரண்டாம் திருவந்தாதி 20
அருளியவர்: பூதத்தாழ்வார்
இரண்டாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2201
பாசுரம்
பழிபாவம் கையகற்றிப் பல்காலும் நின்னை,
வழிவாழ்வார் வாழ்வராம் மாதோ, - வழுவின்றி
நாரணன்றன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும்,
காரணங்கள் தாமுடையார் தாம். 20