நாச்சியார்_திருமொழி
நாச்சியார் திருமொழி 41
அருளியவர்: ஆண்டாள்
நாச்சியார்_திருமொழி
பாசுர எண்: 544
பாசுரம்
ஊடல் கூட லுணர்தல் புணர்தலை,
நீடு நின்ற நிறைபுக ழாய்ச்சியர்,
கூட லைக்குழற் கோதைமுன் கூறிய,
பாடல் பத்தும்வல் லார்க்கில்லை பாவமே. 11
நாச்சியார் திருமொழி 42
அருளியவர்: ஆண்டாள்
நாச்சியார்_திருமொழி
பாசுர எண்: 545
பாசுரம்
மன்னு பெரும்புகழ் மாதவன் மாமணி
வண்ணன் மணிமுடி மைந்தன்
தன்னை, உகந்தது காரண மாகஎன்
சங்கிழக் கும்வழக் குண்டே,
புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப்
பொதும்பினில் வாழும் குயிலே,
பன்னியெப் போது மிருந்து விரைந்தென்
பவளவா யன்வரக் கூவாய். 1
நாச்சியார் திருமொழி 43
அருளியவர்: ஆண்டாள்
நாச்சியார்_திருமொழி
பாசுர எண்: 546
பாசுரம்
வெள்ளை விளிசங் கிடங்கையிற் கொண்ட
விமல னெனக்குருக் காட்டான்,
உள்ளம் புகுந்தென்னை நைவித்து நாளும்
உயிர்பெய்து கூத்தாட்டுக் காணும்,
கள்ளவிழ் செண்பகப் பூமலர் கோதிக்
களித்திசை பாடுங் குயிலே,
மெள்ள விருந்து மிழற்றி மிழற்றாதென்
வேங்கட வன்வரக் கூவாய். 2
நாச்சியார் திருமொழி 44
அருளியவர்: ஆண்டாள்
நாச்சியார்_திருமொழி
பாசுர எண்: 547
பாசுரம்
மாதலி தேர்முன்பு கோல்கொள்ள மாயன்
இராவணன் மேல்,சர மாரி
தாய்தலை யற்றற்று வீழத் தொடுத்த
தலைவன் வரவெங்குங் காணேன்,
போதலர் காவில் புதுமணம் நாறப்
பொறிவண்டின் காமரங் கேட்டு,உன்
காதலி யோடுடன் வாழ்குயி லே.என்
கருமாணிக் கம்வரக் கூவாய். 3
நாச்சியார் திருமொழி 45
அருளியவர்: ஆண்டாள்
நாச்சியார்_திருமொழி
பாசுர எண்: 548
பாசுரம்
என்புரு கியின வேல்நெடுங் கண்கள்
இமைபொருந் தாபல நாளும்,
துன்பக் கடல்புக்கு வைகுந்த னென்பதோர்
தோணி பெறாதுழல் கின்றேன்,
அன்புடை யாரைப் பிரிவுறு நோயது
நீயு மறிதி குயிலே,
பொன்புரை மேனிக் கருளக் கொடியுடைப்
புண்ணிய னைவரக் கூவாய். 4
நாச்சியார் திருமொழி 46
அருளியவர்: ஆண்டாள்
நாச்சியார்_திருமொழி
பாசுர எண்: 549
பாசுரம்
மென்னடை யன்னம் பரந்துவிளையாடும்
வில்லிபுத் தூருறை வான்றன்,
பொன்னடி காண்பதோ ராசயி னாலென்
பொருகயற் கண்ணிணை துஞ்சா,
இன்னடி சிலோடு பாலமு தூட்டி
எடுத்தவென் கோலக் கிளியை,
உன்னொடு தோழமை கொள்வன் குயிலே.
உலகளந் தான்வரக் கூவாய். (2) 5
நாச்சியார் திருமொழி 47
அருளியவர்: ஆண்டாள்
நாச்சியார்_திருமொழி
பாசுர எண்: 550
பாசுரம்
எத்திசை யுமம ரர்பணிந் தேத்தும்
இருடீகே சன்வலி செய்ய,
முத்தன்ன வெண்முறு வற்செய்ய வாயும்
முலயு மழகழிந் தேன்நான்,
கொத்தலர் காவில் மணித்தடம் கண்படை
கொள்ளு மிளங்குயி லே,என்
தத்துவ னைவரக் கூகிற்றி யாகில்
தலையல்லால் கைம்மாறி லேனே. 6
நாச்சியார் திருமொழி 48
அருளியவர்: ஆண்டாள்
நாச்சியார்_திருமொழி
பாசுர எண்: 551
பாசுரம்
பொங்கிய பாற்கடல் பள்ளிகொள் வானைப்
புணர்வதோ ராசயி னால்,என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்
தாவியை யாகுலஞ் செய்யும்,
அங்குயி லே.உனக் கென்ன மறைந்துறைவு
ஆழியும் சங்குமொண் தண்டும்,
தங்கிய கையவ னைவரக் கூவில்நீ,
சாலத் தருமம் பெறுதி. 7
நாச்சியார் திருமொழி 49
அருளியவர்: ஆண்டாள்
நாச்சியார்_திருமொழி
பாசுர எண்: 552
பாசுரம்
சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச்
சதுரன் பொருத்த முடையன்,
நாங்களெம் மில்லிருந் தொட்டிய கச்சங்கம்
நானு மவனு மறிதும்,
தேங்கனி மாம்பொழில் செந்தளிர் கோதும்
சிறுகுயி லே,திரு மாலை
ஆங்கு விரைந்தொல்லை கூகிற்றி யாகில்
அவனைநான் செய்வன காணே. 8
நாச்சியார் திருமொழி 50
அருளியவர்: ஆண்டாள்
நாச்சியார்_திருமொழி
பாசுர எண்: 553
பாசுரம்
பைங்கிளி வண்ணன் சிரீதர னென்பதோர்
பாசத் தகப்பட்டி ருந்தேன்,
பொங்கொளி வண்டிரைக் கும்பொழில் வாழ்குயி
லே.குறிக் கொண்டிது நீகேள்,
சங்கொடு சக்கரத் தான்வரக் கூவுதல்
பொன்வளை கொண்டு தருதல்,
இங்குள்ள காவினில் வாழக் கருதில்
இரண்டத்தொன் றேல்திண்ணம் வேண்டும். 9