நாச்சியார்_திருமொழி
நாச்சியார் திருமொழி 31
அருளியவர்: ஆண்டாள்
நாச்சியார்_திருமொழி
பாசுர எண்: 534
பாசுரம்
தெள்ளி யார்பலர் கைதொழும் தேவனார்,
வள்ளல் மாலிருஞ் சோலை மணாளனார்,
பள்ளி கொள்ளு மிடத்தடி கொட்டிட,
கொள்ளு மாகில்நீ கூடிடு கூடலே. 1
நாச்சியார் திருமொழி 32
அருளியவர்: ஆண்டாள்
நாச்சியார்_திருமொழி
பாசுர எண்: 535
பாசுரம்
காட்டில் வேங்கடம் கண்ண புரநகர்,
வாட்ட மின்றி மகிழ்ந்துறை வாமனன்,
ஓட்ட ராவந்தென் கைப்பற்றி, தன்னோடும்
கூட்டு மாகில்நீ கூடிடு கூடலே. (2) 2
நாச்சியார் திருமொழி 33
அருளியவர்: ஆண்டாள்
நாச்சியார்_திருமொழி
பாசுர எண்: 536
பாசுரம்
பூம கன்புகழ் வானவர் போற்றுதற்
காம கன்,அணி வாணுதல் தேவகி
மாம கன்,மிகு சீர்வசு தேவர்தம்,
கோம கன்வரில் கூடிடு கூடலே. 3
நாச்சியார் திருமொழி 34
அருளியவர்: ஆண்டாள்
நாச்சியார்_திருமொழி
பாசுர எண்: 537
பாசுரம்
ஆய்ச்சி மார்களு மாயரு மஞ்சிட,
பூத்த நீள்கடம் பேறிப் புகப்பாய்ந்து,
வாய்த்த காளியன் மேல்நட மாடிய,
கூத்த னார்வரில் கூடிடு கூடலே. 4
நாச்சியார் திருமொழி 35
அருளியவர்: ஆண்டாள்
நாச்சியார்_திருமொழி
பாசுர எண்: 538
பாசுரம்
மாட மாளிகை சூழ்மது ரைப்பதி
நாடி, நந்தெரு வின்நடு வேவந்திட்டு,
ஓடை மாமத யானை யுதைத்தவன்,
கூடு மாகில்நீ கூடிடு கூடலே. 5
நாச்சியார் திருமொழி 36
அருளியவர்: ஆண்டாள்
நாச்சியார்_திருமொழி
பாசுர எண்: 539
பாசுரம்
அற்ற வன்மரு தம்முறி யநடை
கற்ற வன்,கஞ் சனைவஞ் சனையினால்
செற்ற வன்,திக ழும்மது ரைப்பதி,
கொற்ற வன்வரில் கூடிடு கூடலே. 6
நாச்சியார் திருமொழி 37
அருளியவர்: ஆண்டாள்
நாச்சியார்_திருமொழி
பாசுர எண்: 540
பாசுரம்
அன்றின் னாதன செய்சிசு பாலனும்,
நின்ற நீள்மரு தும்மெரு தும்புள்ளும்,
வென்றி வேல்விறற் கஞ்சனும் வீழ,முன்
கொன்ற வன்வரில் கூடிடு கூடலே. 7
நாச்சியார் திருமொழி 38
அருளியவர்: ஆண்டாள்
நாச்சியார்_திருமொழி
பாசுர எண்: 541
பாசுரம்
ஆவ லன்புட யார்தம் மனத்தன்றி
மேவ லன்,விரை சூழ்துவ ராபதிக்
காவ லன்,கன்று மேய்த்து விளையாடும்,
கோவ லன்வரில் கூடிடு கூடலே. 8
நாச்சியார் திருமொழி 39
அருளியவர்: ஆண்டாள்
நாச்சியார்_திருமொழி
பாசுர எண்: 542
பாசுரம்
கொண்ட கோலக் குறளுரு வாய்ச்சென்று,
பண்டு மாவலி தன்பெரு வேள்வியில்,
அண்ட மும்நில னும்அடி யொன்றினால்,
கொண்ட வன்வரில் கூடிடு கூடலே. 9
நாச்சியார் திருமொழி 40
அருளியவர்: ஆண்டாள்
நாச்சியார்_திருமொழி
பாசுர எண்: 543
பாசுரம்
பழகு நான்மறை யின்பொரு ளாய்,மதம்
ஒழுகு வாரண முய்ய வளித்த,எம்
அழக னாரணி யாய்ச்சியர் சிந்தையுள்,
குழக னார்வரில் கூடிடு கூடலே. 10