Responsive image

நாச்சியார்_திருமொழி

நாச்சியார் திருமொழி 21

பாசுர எண்: 524

பாசுரம்
கோழி யழைப்பதன் முன்னம்
      குடைந்துநீ ராடுவான் போந்தோம்,
ஆழியஞ் செல்வ னெழுந்தான்
      அரவணை மேல்பள்ளி கொண்டாய்,
ஏழைமை யாற்றவும் பட்டோ ம்
      இனியென்றும் பொய்கைக்கு வாரோம்,
தோழியும் நானும் தொழுதோம்
      துகிலைப் பணித்தரு ளாயே. 1

நாச்சியார் திருமொழி 22

பாசுர எண்: 525

பாசுரம்
இதுவென் புகுந்ததிங் கந்தோ.
      இப்பொய்கைக் கெவ்வாறு வந்தாய்,
மதுவின் துழாய்முடி மாலே.
      மாயனே.எங்க ளமுதே,
விதியின்மை யாலது மாட்டோ ம்
      வித்தகப் பிள்ளாய். விரையேல்,
குதிகொண் டரவில் நடித்தாய்.
      குருந்திடைக் கூறை பணியாய். 2

நாச்சியார் திருமொழி 23

பாசுர எண்: 526

பாசுரம்
எல்லே யீதென்ன இளமை
      எம்மனை மார்காணி லொட்டார்,
பொல்லாங்கீ தென்று கருதாய்
      பூங்குருந் தேறி யிருத்தி,
வில்லாலி லங்கை யழித்தாய்.நீ
      வேண்டிய தெல்லாம் தருவோம்,
பல்லாரும் காணாமே போவோம்
      பட்டைப் பணித்தரு ளாயே. 3

நாச்சியார் திருமொழி 24

பாசுர எண்: 527

பாசுரம்
பரக்க விழித்தெங்கும் நோக்கிப்
      பலர்குடைந் தாடும் சுனையில்,
அரக்கநில் லாகண்ண நீர்கள்
      அலமரு கின்றவா பாராய்,
இரக்கமே லொன்று மிலாதாய்.
      இலங்கை யழித்த பிரானே,
குரக்கர சாவ தறிந்தோம்
      குருந்திடைக் கூறை பணியாய். 4

நாச்சியார் திருமொழி 25

பாசுர எண்: 528

பாசுரம்
காலைக் கதுவிடு கின்ற
      கயலோடு வாளை விரவி,
வேலைப் பிடித்தெந்னை மார்கள்
      ஓட்டிலென் னவிளை யாட்டோ ,
கோலச்சிற் றாடை பலவுங்
      கொண்டுநீ யேறி யிராதே,
கோலங் கரிய பிரானே.
      குருந்திடைக் கூறை பணியாய். 5

நாச்சியார் திருமொழி 26

பாசுர எண்: 529

பாசுரம்
தடத்தவிழ் தாமரைப் பொய்கைத்
      தாள்களெங் காலைக் கதுவ,
விடத்தே ளெறிந்தாலே போல
      வேதனை யற்றவும் பட்டோ ம்
குடத்தை யெடுத்தேற விட்டுக்
      கூத்தாட வல்லஎங் கோவே,
படிற்றையெல் லாம்தவிர்ந் தெங்கள்
      பட்டைப் பணித்தரு ளாயே. 6

நாச்சியார் திருமொழி 27

பாசுர எண்: 530

பாசுரம்
நீரிலே நின்றயர்க் கின்றோம்
      நீதியல் லாதன செய்தாய்,
ஊரகம் சாலவும் சேய்த்தால்
      ஊழியெல் லாமுணர் வானே,
ஆர்வ முனக்கே யுடையோம்
      அம்மனை மார்காணி லொட்டார்,
போர விடாயெங்கள் பட்டைப்
      பூங்குருந் தேறியி ராதே. 7

நாச்சியார் திருமொழி 28

பாசுர எண்: 531

பாசுரம்
மாமிமார் மக்களே யல்லோம்
      மற்றுமிங் கெல்லாரும் போந்தார்,
தூமலர்க் கண்கள் வளரத்
      தொல்லையி ராத்துயில் வானே,
சேமமே லன்றிது சாலச்
      சிக்கென நாமிது சொன்னோம்,
கோமள ஆயர்கொ ழுந்தே.
      குருந்திடைக் கூறை பணியாய். 8

நாச்சியார் திருமொழி 29

பாசுர எண்: 532

பாசுரம்
கஞ்சன் வலைவைத்த வன்று
      காரிரு ளெல்லில் பிழைத்து,
நெஞ்சுதுக் கம்செய்யப் போந்தாய்
      நின்றஇக் கன்னிய ரோமை,
அஞ்ச உரப்பாள் அசோதை
      ஆணாட விட்டிட் டிருக்கும்,
வஞ்சகப் பேய்ச்சிபா லுண்ட
      மசிமையி லீ.கூறை தாராய். 9

நாச்சியார் திருமொழி 30

பாசுர எண்: 533

பாசுரம்
கன்னிய ரோடெங்கள் நம்பி
      கரிய பிரான்விளை யாட்டை,
பொன்னியல் மாடங்கள் சூழ்ந்த
      புதுவையர் கோன்பட்டன் கோதை,
இன்னிசை யால்சொன்ன மாலை
      ஈரைந்தும் வல்லவர் தாம்போய்,
மன்னிய மாதவ னோடு
      வைகுந்தம் புக்கிருப் பாரே.10

Enter a number between 1 and 4000.