நாச்சியார்_திருமொழி
நாச்சியார் திருமொழி 21
அருளியவர்: ஆண்டாள்
நாச்சியார்_திருமொழி
பாசுர எண்: 524
பாசுரம்
கோழி யழைப்பதன் முன்னம்
குடைந்துநீ ராடுவான் போந்தோம்,
ஆழியஞ் செல்வ னெழுந்தான்
அரவணை மேல்பள்ளி கொண்டாய்,
ஏழைமை யாற்றவும் பட்டோ ம்
இனியென்றும் பொய்கைக்கு வாரோம்,
தோழியும் நானும் தொழுதோம்
துகிலைப் பணித்தரு ளாயே. 1
நாச்சியார் திருமொழி 22
அருளியவர்: ஆண்டாள்
நாச்சியார்_திருமொழி
பாசுர எண்: 525
பாசுரம்
இதுவென் புகுந்ததிங் கந்தோ.
இப்பொய்கைக் கெவ்வாறு வந்தாய்,
மதுவின் துழாய்முடி மாலே.
மாயனே.எங்க ளமுதே,
விதியின்மை யாலது மாட்டோ ம்
வித்தகப் பிள்ளாய். விரையேல்,
குதிகொண் டரவில் நடித்தாய்.
குருந்திடைக் கூறை பணியாய். 2
நாச்சியார் திருமொழி 23
அருளியவர்: ஆண்டாள்
நாச்சியார்_திருமொழி
பாசுர எண்: 526
பாசுரம்
எல்லே யீதென்ன இளமை
எம்மனை மார்காணி லொட்டார்,
பொல்லாங்கீ தென்று கருதாய்
பூங்குருந் தேறி யிருத்தி,
வில்லாலி லங்கை யழித்தாய்.நீ
வேண்டிய தெல்லாம் தருவோம்,
பல்லாரும் காணாமே போவோம்
பட்டைப் பணித்தரு ளாயே. 3
நாச்சியார் திருமொழி 24
அருளியவர்: ஆண்டாள்
நாச்சியார்_திருமொழி
பாசுர எண்: 527
பாசுரம்
பரக்க விழித்தெங்கும் நோக்கிப்
பலர்குடைந் தாடும் சுனையில்,
அரக்கநில் லாகண்ண நீர்கள்
அலமரு கின்றவா பாராய்,
இரக்கமே லொன்று மிலாதாய்.
இலங்கை யழித்த பிரானே,
குரக்கர சாவ தறிந்தோம்
குருந்திடைக் கூறை பணியாய். 4
நாச்சியார் திருமொழி 25
அருளியவர்: ஆண்டாள்
நாச்சியார்_திருமொழி
பாசுர எண்: 528
பாசுரம்
காலைக் கதுவிடு கின்ற
கயலோடு வாளை விரவி,
வேலைப் பிடித்தெந்னை மார்கள்
ஓட்டிலென் னவிளை யாட்டோ ,
கோலச்சிற் றாடை பலவுங்
கொண்டுநீ யேறி யிராதே,
கோலங் கரிய பிரானே.
குருந்திடைக் கூறை பணியாய். 5
நாச்சியார் திருமொழி 26
அருளியவர்: ஆண்டாள்
நாச்சியார்_திருமொழி
பாசுர எண்: 529
பாசுரம்
தடத்தவிழ் தாமரைப் பொய்கைத்
தாள்களெங் காலைக் கதுவ,
விடத்தே ளெறிந்தாலே போல
வேதனை யற்றவும் பட்டோ ம்
குடத்தை யெடுத்தேற விட்டுக்
கூத்தாட வல்லஎங் கோவே,
படிற்றையெல் லாம்தவிர்ந் தெங்கள்
பட்டைப் பணித்தரு ளாயே. 6
நாச்சியார் திருமொழி 27
அருளியவர்: ஆண்டாள்
நாச்சியார்_திருமொழி
பாசுர எண்: 530
பாசுரம்
நீரிலே நின்றயர்க் கின்றோம்
நீதியல் லாதன செய்தாய்,
ஊரகம் சாலவும் சேய்த்தால்
ஊழியெல் லாமுணர் வானே,
ஆர்வ முனக்கே யுடையோம்
அம்மனை மார்காணி லொட்டார்,
போர விடாயெங்கள் பட்டைப்
பூங்குருந் தேறியி ராதே. 7
நாச்சியார் திருமொழி 28
அருளியவர்: ஆண்டாள்
நாச்சியார்_திருமொழி
பாசுர எண்: 531
பாசுரம்
மாமிமார் மக்களே யல்லோம்
மற்றுமிங் கெல்லாரும் போந்தார்,
தூமலர்க் கண்கள் வளரத்
தொல்லையி ராத்துயில் வானே,
சேமமே லன்றிது சாலச்
சிக்கென நாமிது சொன்னோம்,
கோமள ஆயர்கொ ழுந்தே.
குருந்திடைக் கூறை பணியாய். 8
நாச்சியார் திருமொழி 29
அருளியவர்: ஆண்டாள்
நாச்சியார்_திருமொழி
பாசுர எண்: 532
பாசுரம்
கஞ்சன் வலைவைத்த வன்று
காரிரு ளெல்லில் பிழைத்து,
நெஞ்சுதுக் கம்செய்யப் போந்தாய்
நின்றஇக் கன்னிய ரோமை,
அஞ்ச உரப்பாள் அசோதை
ஆணாட விட்டிட் டிருக்கும்,
வஞ்சகப் பேய்ச்சிபா லுண்ட
மசிமையி லீ.கூறை தாராய். 9
நாச்சியார் திருமொழி 30
அருளியவர்: ஆண்டாள்
நாச்சியார்_திருமொழி
பாசுர எண்: 533
பாசுரம்
கன்னிய ரோடெங்கள் நம்பி
கரிய பிரான்விளை யாட்டை,
பொன்னியல் மாடங்கள் சூழ்ந்த
புதுவையர் கோன்பட்டன் கோதை,
இன்னிசை யால்சொன்ன மாலை
ஈரைந்தும் வல்லவர் தாம்போய்,
மன்னிய மாதவ னோடு
வைகுந்தம் புக்கிருப் பாரே.10