Responsive image

நாச்சியார்_திருமொழி

நாச்சியார் திருமொழி 141

பாசுர எண்: 644

பாசுரம்
வெளிய சங்கொன் றுடையானைப்
      பீதக வாடை யுடையானை,
அளிநன் குடைய திருமாலை
      ஆழி யானைக் கண்டீரே?-
களிவண் டெங்கும் கலந்தாற்போல்
      கழம்பூங் குழல்கள் தடந்தோள்மேல்,
மிளிர நின்று விளையாட
      விருந்தா வனத்தே கண்டோ மே. 8

நாச்சியார் திருமொழி 142

பாசுர எண்: 645

பாசுரம்
நாட்டைப் படையென்று அயன்முதலாத்
      தந்த நளிர்மா மலருந்தி,
வீட்டைப் பண்ணி விளையாடும்
      விமலன் றன்னைக் கண்டீரே?-
காட்டை நாடித் தேனுகனும்
      களிறும் புள்ளு முடன்மடிய,
வேட்டை யாடி வருவானை
      விருந்தா வனத்தே கண்டோ மே. 9

நாச்சியார் திருமொழி 143

பாசுர எண்: 646

பாசுரம்
பருந்தாட் களிற்றுக் கருள்செய்த
      பரமன் றன்னை, பாரின்மேல்
விருந்தா வனத்தே கண்டமை
      விட்டு சித்தன் கோதைசொல்,
மருந்தா மென்று தம்மனத்தே
      வைத்துக் கொண்டு வாழ்வார்கள்,
பெருந்தா ளுடைய பிரானடிக்கீழ்ப்
      பிரியா தென்று மிருப்பாரே. 10

Enter a number between 1 and 4000.