திருவிருத்தம்
திருவிருத்தம் 31
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2508
பாசுரம்
இசைமின்கள் தூதென் றிசைத்தா லிசையிலம், என்தலைமேல்
அசைமின்க ளென்றா லசையிங்கொலாம்,அம்பொன் மாமணிகள்
திசைமின் மிளிரும் திருவேங்கடத்துவன் தாள்சிமயம்
மிசைமின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே . 31
திருவிருத்தம் 32
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2509
பாசுரம்
மேகங்க ளோ.உரை யீர், திருமால்திரு மேனியொக்கும்
யோகங்க ளுங்களுக் கெவ்வாறு பெற்றீர், உயிரளிப்பான்
மாகங்க ளெல்லாம் திரிந்துநன்னீர்கள் சுமந்து_ந்தம்
ஆகங்கள் நோவ, வருந்தும் தவமாம் அருள்பெற்றதே? 32
திருவிருத்தம் 33
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2510
பாசுரம்
அருளார் திருச்சக் கரத்தால் அகல்விசும் பும்நிலனும்
இருளார் வினைகெடச் செங்கோல் நடாவுதிர், ஈங்கோர்பெண்பால்
பொருளோ எனுமிகழ் வோ?இவற்றின்புறத் தாளென்றெண்ணோ?
தெருளோம் அரவணை யீர்,இவள் மாமை சிதைக்கின்றதே. 33
திருவிருத்தம் 34
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2511
பாசுரம்
சிதைக்கின்ற தாழியென் றாழியைச் சீறி,தன் சீறடியால்
உதைக்கின்ற நாயகந் தன்னொடும் மாலே, உனதுதண்தார்
ததைக்கின்ற தண்ணந் துழாயணி வானது வேமனமாய்ப்
பதைக்கின்ற மாதின் திறத்துஅறியேஞ்செயற் பாலதுவே. 34
திருவிருத்தம் 35
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2512
பாசுரம்
பால்வாய்ப் பிறைப்பிள்ளை ஒக்கலைக் கொண்டு, பகலிழந்த
மேல்பால் திசைப்பெண் புலம்புறு மாலை, உலகளந்த
மால்பால் துழாய்க்கு மனமுடை யார்க்குநல் கிற்றையெல்லாம்
சோல்வான் புகுந்து,இது வோர்பனி வாடை துழாகின்றதே. 35
திருவிருத்தம் 36
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2513
பாசுரம்
துழாநெடுஞ் சூழிரு ளென்று,தன் தண்தா ரதுபெயரா
எழாநெடு வூழி யெழுந்தவிக் காலத்தும், ஈங்கிவளோ
வழாநெடுந் துன்பத்த ளென்றிரங் காரம்ம னோ.இலங்கைக்
குழாநெடு மாடம், இடித்த பிரானார் கொடுமைகளே . 36
திருவிருத்தம் 37
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2514
பாசுரம்
கொடுங்கால் சிலையர் நிரைகோ ளுழவர், கொலையில்வெய்ய
கடுங்கால் இளைஞர் துடிபடும் கவ்வைத்து, அருவினையேன்
நெடுங்கால மும்கண்ணன் நீண்மலர்ப் பாதம் பரவிப் பெற்ற
தொடுங்கா லொசியு மிடை, இள மாஞ்சென்ற சூழ்கடமே. 37
திருவிருத்தம் 38
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2515
பாசுரம்
கடமா யினகள் கழித்து,தம் கால்வன்மை யால்பலநாள்
தடமா யினபுக்கு நீர்நிலை நின்ற தவமிதுகொல்,
குடமாடி யிம்மண்ணும் விண்ணும் குலுங்க வுலகளந்து
நடமா டியபெரு மான்,உரு வொத்தன நீலங்களே. 38
திருவிருத்தம் 39
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2516
பாசுரம்
நீலத் தடவரை மேல்புண்ட ரீக நெடுந்தடங்கள்
போல, பொலிந்தெமக் கெல்லா விடத்தவும், பொங்குமுந்நீர்
ஞாலப் பிரான்விசும் புக்கும் பிரான்மற்றும் நல்லோர்பிரான்
கோலம் கரிய பிரான்,எம்பிரான்கண்ணின் கோலங்களே. 39
திருவிருத்தம் 40
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2517
பாசுரம்
கோலப் பகற்களி றொன்றுகற் புய்ய, குழாம்விரிந்த
நீலக்கங் குற்களி றெல்லாம் நிறைந்தன, நேரிழையீர் .
ஞாலப்பொன் மாதின் மணாளன் துழாய்நங்கள் சூழ்குழற்கே
ஏலப் புனைந்தென்னை மார்,எம்மை நோக்குவ தென்றுகொலோ. 40