திருமழிசையாழ்வார்
திருச்சந்த விருத்தம் 41
அருளியவர்: திருமழிசையாழ்வார்
திருச்சந்த_விருத்தம்
பாசுர எண்: 792
பாசுரம்
ஆயனாகி யாயர்மங்கை
வேயதோள்வி ரும்பினாய்,
ஆய.நின்னை யாவர்வல்ல
ரம்பரத்தொ டிம்பராய்,
மாய.மாய மாயைகொல்அ
தன்றிநீவ குத்தலும்,
மாயமாய மாக்கினாயுன்
மாயமுற்று மாயமே. (41)
திருச்சந்த விருத்தம் 42
அருளியவர்: திருமழிசையாழ்வார்
திருச்சந்த_விருத்தம்
பாசுர எண்: 793
பாசுரம்
வேறிசைந்த செக்கர்மேனி
நீரணிந்த புஞ்சடை,
கீறுதிங்கள் வைத்தவன்கை
வைத்தவன்க பால்மிசை,
ஊறுசெங்கு ருதியால்நி
றைத்தகார ணந்தனை
ஏறுசென்ற டர்த்தவீச.
பேசுகூச மின்றியே. (42)
திருச்சந்த விருத்தம் 43
அருளியவர்: திருமழிசையாழ்வார்
திருச்சந்த_விருத்தம்
பாசுர எண்: 794
பாசுரம்
வெஞ்சினத்த வேழவெண்ம
ருப்பொசித்து உருத்தமா,
கஞ்சனைக்க டிந்துமண்ண
ளந்துகொண்ட காலனே,
வஞ்சனத்து வந்தபேய்ச்சி
யாவிபாலுள் வாங்கினாய்,
அஞ்சனத்த வண்ணானாய
ஆதிதேவ னல்லையே? (43)
திருச்சந்த விருத்தம் 44
அருளியவர்: திருமழிசையாழ்வார்
திருச்சந்த_விருத்தம்
பாசுர எண்: 795
பாசுரம்
பாலினீர்மை செம்பொனீர்மை
பாசியின்ப சும்புறம்,
போலுநீர்மை பொற்புடைத்த
டத்துவண்டு விண்டுலாம்,
நீலநீர்மை யென்றிவைநி
றைந்தகாலம் நான்குமாய்,
மாலினீர்மை வையகம்ம
றைத்ததென்ன நீர்மையே? (44)
திருச்சந்த விருத்தம் 45
அருளியவர்: திருமழிசையாழ்வார்
திருச்சந்த_விருத்தம்
பாசுர எண்: 796
பாசுரம்
மண்ணுளாய்கொல் விண்ணுளாய்கொல்
மண்ணுளேம யங்கிநின்று,
எண்ணுமெண்ண கப்படாய்கொல்
என்னமாயை, நின்தமர்
கண்ணுளாய்கொல் சேயைகொல்அ -
னந்தன்மேல்கி டந்தவெம்
புண்ணியா,பு னந்துழாய
லங்கலம்பு னிதனே. (45)
திருச்சந்த விருத்தம் 46
அருளியவர்: திருமழிசையாழ்வார்
திருச்சந்த_விருத்தம்
பாசுர எண்: 797
பாசுரம்
தோடுபெற்ற தண்டுழாய
லங்கலாடு சென்னியாய்,
கோடுபற்றி ஆழியேந்தி
அஞ்சிறைப்புள் ளூர்தியால்,
நாடுபெற்ற நன்மைநண்ண
மில்லையேனும் நாயினேன்,
வீடுபெற்றி றப்பொடும்பி
றப்பறுக்கு மாசொலே. (46)
திருச்சந்த விருத்தம் 47
அருளியவர்: திருமழிசையாழ்வார்
திருச்சந்த_விருத்தம்
பாசுர எண்: 798
பாசுரம்
காரொடொத்த மேனிநங்கள்
கண்ண. விண்ணிண் நாதனே,
நீரிடத்த ராவணைக்கி
டத்தியென்பர் அன்றியும்
ஓரிடத்தை யல்லையெல்லை
யில்லையென்ப ராதலால்,
சேர்விடத்தை நாயினேன்
தெரிந்திறைஞ்சு மாசொலே. (47)
திருச்சந்த விருத்தம் 48
அருளியவர்: திருமழிசையாழ்வார்
திருச்சந்த_விருத்தம்
பாசுர எண்: 799
பாசுரம்
குன்றில்நின்று வானிருந்து
நீள்கடல்கி டந்து,மண்
ஒன்றுசென்ற தொன்றையுண்ட
தொன்றிடந்து பன்றியாய்,
நன்றுசென்ற நாளவற்றுள்
நல்லுயிர்ப டைத்தவர்க்கு,
அன்றுதேவ மைத்தளித்த
ஆதிதேவ னல்லயே? (48)