திருமழிசையாழ்வார்
திருச்சந்த விருத்தம் 32
அருளியவர்: திருமழிசையாழ்வார்
திருச்சந்த_விருத்தம்
பாசுர எண்: 783
பாசுரம்
குரக்கினப்ப டைகொடுகு
ரைகடலின் மீதுபோய்
அரக்கரங்க ரங்கவெஞ்ச
ரந்துரந்த வாதிநீ,
இரக்கமண்கொ டுத்தவற்கி
ரக்கமொன்று மின்றியே,
பரக்கவைத்த ளந்துகொண்ட
பற்பபாத னல்லையே? (32)
திருச்சந்த விருத்தம் 33
அருளியவர்: திருமழிசையாழ்வார்
திருச்சந்த_விருத்தம்
பாசுர எண்: 784
பாசுரம்
மின்னிறத்தெ யிற்றரக்கன்
வீழவெஞ்ச ரம்துரந்து,
பின்னவற்க ருள்புரிந்த
ரசளித்த பெற்றியோய்,
நன்னிறத்தொ ரிஞ்சொலேழை
பின்னைகேள்வ. மன்னுசீர்,
பொன்னிறத்த வண்ணானாய
புண்டரீக னல்லையே? (33)
திருச்சந்த விருத்தம் 34
அருளியவர்: திருமழிசையாழ்வார்
திருச்சந்த_விருத்தம்
பாசுர எண்: 785
பாசுரம்
ஆதியாதி யாதிநீயொ
ரண்டமாதி யாதலால்,
சோதியாத சோதிநீஅ
துண்மையில்வி ளங்கினாய்,
வேதமாகி வேள்வியாகி
விண்ணினோடு மண்ணுமாய்
ஆதியாகி யாயனாய
மாயமென்ன மாயமே? (34)
திருச்சந்த விருத்தம் 35
அருளியவர்: திருமழிசையாழ்வார்
திருச்சந்த_விருத்தம்
பாசுர எண்: 786
பாசுரம்
அம்புலாவு மீனுமாகி
யாமையாகி ஆழியார்,
தம்பிரானு மாகிமிக்க
தன்புமிக்க தன்றியும்
கொம்பராவு நுண்மருங்கு
லாயர்மாதர் பிள்ளையாய்
எம்பிரானு மாயவண்ண
மென்கொலோவெம் மீசனே. (35)
திருச்சந்த விருத்தம் 36
அருளியவர்: திருமழிசையாழ்வார்
திருச்சந்த_விருத்தம்
பாசுர எண்: 787
பாசுரம்
ஆடகத்த பூண்முலைய
சோதையாய்ச்சி பிள்ளையாய்
சாடுதைத்தோர் புள்ளதாவி
கள்ளதாய பேய்மகள்
வீடுவைத்த வெய்யகொங்கை
ஐயபால முதுசெய்து,
ஆடகக்கை மாதர்வா
யமுதமுண்ட தென்கொலோ? (36)
திருச்சந்த விருத்தம் 37
அருளியவர்: திருமழிசையாழ்வார்
திருச்சந்த_விருத்தம்
பாசுர எண்: 788
பாசுரம்
காய்த்தநீள்வி ளங்கனியு
திர்த்தெதிர்ந்த பூங்குருந்தம்
சாய்த்து,மாபி ளந்தகைத்த
லத்தகண்ண னென்பரால்
ஆய்ச்சிபாலை யுண்டுமண்ணை
யுண்டுவெண்ணெ யுண்டு,பின்
பேய்ச்சிபாலை யுண்டுபண்டொ
ரேனமாய வாமனா. (37)
திருச்சந்த விருத்தம் 38
அருளியவர்: திருமழிசையாழ்வார்
திருச்சந்த_விருத்தம்
பாசுர எண்: 789
பாசுரம்
கடங்கலந்த வன்கரிம
ருப்பொசித்துஓர் பொய்கைவாய்,
விடங்கலந்த பாம்பின்மேல்ந
டம்பயின்ற நாதனே
குடங்கலந்த கூத்தனாய
கொண்டல்வண்ண. தண்டுழாய்,
வடங்கலந்த மாலைமார்ப.
காலநேமி காலனே. (38)
திருச்சந்த விருத்தம் 39
அருளியவர்: திருமழிசையாழ்வார்
திருச்சந்த_விருத்தம்
பாசுர எண்: 790
பாசுரம்
வெற்பெடுத்து வேலைநீர்க
லக்கினாய்அ தன்றியும்,
வெற்பெடுத்து வேலைநீர்வ
ரம்புகட்டி வேலைசூழ்,
வெற்பெடுத்த இஞ்சிசூழி
லங்கைகட்ட ழித்தநீ
வெற்பெடுத்து மாரிகாத்த
மேகவண்ண னல்லையே. (39)
திருச்சந்த விருத்தம் 40
அருளியவர்: திருமழிசையாழ்வார்
திருச்சந்த_விருத்தம்
பாசுர எண்: 791
பாசுரம்
ஆனைகாத்தொ ரானைகொன்ற
தன்றியாயர் பிள்ளையாய்,
ஆனைமேய்த்தி யானெயுண்டி
அன்றுகுன்ற மொன்றினால்,
ஆனைகாத்து மையரிக்கண்
மாதரார்தி றத்து,முன்
ஆனையன்று சென்றடர்த்த
மாயமென்ன மாயமே? (40)