Responsive image

திருமழிசையாழ்வார்

திருச்சந்த விருத்தம் 1

பாசுரம்
பூநிலாய வைந்துமாய்ப்
      புனற்கண்நின்ற நான்குமாய்,
தீநிலாய மூன்றுமாய்ச்
      சிறந்தகா லிரண்டுமாய்,
மீநிலாய தொன்றுமாகி
      வேறுவேறு தன்மையாய்,
நீநிலாய வண்ணநின்னை
      யார்நினைக்க வல்லரே? (1)

திருச்சந்த விருத்தம் 2

பாசுரம்
ஐந்துமைந்து மைந்துமாகி
      யல்லவற்று ளாயுமாய்,
ஐந்துமூன்று மொன்றுமாகி
      நின்றவாதி தேவனே,
ஐந்துமைந்து மைந்துமாகி
      யந்தரத்த ணைந்துநின்று,
ஐந்துமைந்து மாயநின்னை
      யாவர்காண வல்லரே? (3)

திருச்சந்த விருத்தம் 3

திருச்சந்த விருத்தம் 4

பாசுரம்
மூன்றுமுப்ப தாறினோடொ
      ரைந்துமைந்து மைந்துமாய்,
மூன்றுமூர்த்தி யாகிமூன்று
      மூன்றுமூன்று மூன்றுமாய,
தோன்றுசோதி மூன்றுமாய்த்
      துளக்கமில் விளக்கமாய்,
ஏன்றெனாவி யுள்புகுந்த
      தென்கொலோவெம் மீசனே. (4)

திருச்சந்த விருத்தம் 5

பாசுரம்
நின்றியங்கு மொன்றலாவு
      ருக்கடோ றும் ஆவியாய்,
ஒன்றியுள்க லந்துநின்ற
      நின்னதன்மை யின்னதென்று,
என்றும்யார்க்கு மெண்ணிறந்த
      ஆதியாய்நின் னுந்திவாய்,
அன்றுநான்மு கற்பயந்த
      வாதிதேவ னல்லையே? (5)

திருச்சந்த விருத்தம் 6

பாசுரம்
நாகமேந்து மேருவெற்பை
      நாகமேந்து மண்ணினை,
நாகமேந்து மாகமாக
      மாகமேந்து வார்புனல்,
மாகமேந்து மங்குல்தீயொர்
      வாயுவைந் தமைந்துகாத்து,
ஏகமேந்தி நின்றநீர்மை,
      நின்கணேயி யன்றதெ. (6)

திருச்சந்த விருத்தம் 7

பாசுரம்
ஒன்றிரண்டு மூர்த்தியா
      யுறக்கமோடு ணர்ச்சியாய்,
ஒன்றிரண்டு காலமாகி
      வேலைஞால மாயினாய்,
ஒன்றிரண்டு தீயுமாகி
      யாயனாய மாயனே
ஒன்றிரண்டு கண்ணினுனு
      முன்னையேத்த வல்லனே? (7)

திருச்சந்த விருத்தம் 8

பாசுரம்
ஆதியான வானவர்க்கு
      மண்டமாய வப்புறத்து,
ஆதியான வானவர்க்கு
      மாதியான வாதிநீ,
ஆதியான வானவாண
      ரந்தகாலம் நீயுரைத்தி,
ஆதியான காலநின்னை
      யாவர்காண வல்லரே? (8)

திருச்சந்த விருத்தம் 9

பாசுரம்
தாதுலாவு கொன்றைமாலை
      துன்னுசெஞ்ச டைச்சிவன்,
நீதியால்வ ணங்குபாத
      நின்மலா.நி லாயசீர்
வேதவாணர் கீதவேள்வி
      நீதியான வேள்வியார்,
நீதியால் வணங்குகின்ற
      நீர்மைநின்கண் நின்றதே (9)

திருச்சந்த விருத்தம் 10

பாசுரம்
தன்னுளேதி ரைத்தெழும்
      தரங்கவெண்த டங்கடல்
தன்னுளேதி ரைத்தெழுந்
      தடங்குகின்ற தன்மைபோல்,
நின்னுளேபி றந்திறந்து
      நிற்பவும் திரிபவும்,
நின்னுளேய டங்குகின்ற
      நீர்மைநின்கண் நின்றதே (10)

Enter a number between 1 and 4000.