திருச்சந்த_விருத்தம்
திருச்சந்த விருத்தம் 11
அருளியவர்: திருமழிசையாழ்வார்
திருச்சந்த_விருத்தம்
பாசுர எண்: 762
பாசுரம்
சொல்லினால்தொ டர்ச்சிநீ
சொலப்படும்பொ ருளும்நீ,
சொல்லினால்சொ லப்படாது
தோன்றுகின்ற சோதிநீ,
சொல்லினால்ப டைக்கநீப
டைக்கவந்து தோன்றினார்,
சொல்லினால்சு ருங்கநின்கு
ணங்கள் சொல்ல வல்லரே? (11)
திருச்சந்த விருத்தம் 12
அருளியவர்: திருமழிசையாழ்வார்
திருச்சந்த_விருத்தம்
பாசுர எண்: 763
பாசுரம்
உலகுதன்னை நீபடைத்தி
யுள்ளொடுக்கி வைத்தி, மீண்-
டுலகுதன்னு ளேபிறத்தி
யோரிடத்தை யல்லையால்
உலகுநின்னொ டொன்றிநிற்க
வேறுநிற்றி யாதலால்,
உலகில்நின்னை யுள்ளசூழல்
யாவருள்ளா வல்லரே? (12)
திருச்சந்த விருத்தம் 13
அருளியவர்: திருமழிசையாழ்வார்
திருச்சந்த_விருத்தம்
பாசுர எண்: 764
பாசுரம்
இன்னையென்று சொல்லலாவ
தில்லையாதும் இட்டிடைப்
பின்னைகேள்வ னென்பருன்பி
ணக்குணர்ந்த பெற்றியோர்
பின்னையாய கோலமோடு
பேருமூரு மாதியும்,
நின்னையார் நினைக்கவல்லர்
நீர்மையால்நி னைக்கிலே. (13)
திருச்சந்த விருத்தம் 14
அருளியவர்: திருமழிசையாழ்வார்
திருச்சந்த_விருத்தம்
பாசுர எண்: 765
பாசுரம்
தூய்மையோக மாயினாய்து
ழாயலங்கல் மாலையாய்,
ஆமையாகி யாழ்கடல்து
யின்றவாதி தேவ,நின்
நாமதேய மின்னதென்ன
வல்லமல்ல மாகிலும்,
சாமவேத கீதனாய
சக்ரபாணி யல்லையே? (14)
திருச்சந்த விருத்தம் 15
அருளியவர்: திருமழிசையாழ்வார்
திருச்சந்த_விருத்தம்
பாசுர எண்: 766
பாசுரம்
அங்கமாறும் வேதநான்கு
மாகிநின்ற வற்றுளே,
தங்குகின்ற தன்மையாய்த
டங்கடல்ப ணத்தலை,
செங்கண்நாக ணைக்கிடந்த
செல்வமல்கு சீரினாய்,
சங்கவண்ண மன்னமேனி
சார்ங்கபாணி யல்லையே? (15)
திருச்சந்த விருத்தம் 16
அருளியவர்: திருமழிசையாழ்வார்
திருச்சந்த_விருத்தம்
பாசுர எண்: 767
பாசுரம்
தலைக்கணத்து கள்குழம்பு
சாதிசோதி தோற்றாமாய்,
நிலைக்கணங்கள் காணவந்து
நிற்றியேலும் நீடிருங்,
கலைக்கணங்கள் சொற்பொருள்க
ருத்தினால்நி னைக்கொணா,
மலைக்கணங்கள் போலுணர்த்தும்
மாட்சிநின்றன் மாட்சியே. (16)
திருச்சந்த விருத்தம் 17
அருளியவர்: திருமழிசையாழ்வார்
திருச்சந்த_விருத்தம்
பாசுர எண்: 768
பாசுரம்
ஏகமூர்த்தி மூன்றுமூர்த்தி
நாலுமூர்த்தி நன்மைசேர்,
போகமூர்த்தி புண்ணியத்தின்
மூர்த்தியெண்ணில் மூர்த்தியாய்
நாகமூர்த்தி சயனமாய்ந
லங்கடல்கி டந்து,மேல்
ஆகமூர்த்தி யாயவண்ண
மெங்கொலாதி தேவனே. (17)
திருச்சந்த விருத்தம் 18
அருளியவர்: திருமழிசையாழ்வார்
திருச்சந்த_விருத்தம்
பாசுர எண்: 769
பாசுரம்
விடத்தவாயொ ராயிரமி
ராயிரம்கண் வெந்தழல்,
விடத்துவீழ்வி லாதபோகம்
மிக்கசோதி தொக்கசீர்,
தொடுத்துமேல்வி தானமாய
பௌவநீர ராவணை
படுத்தபாயல் பள்ளிகொள்வ
தென்கொல்வேலை வண்ணாணே. (18)
திருச்சந்த விருத்தம் 19
அருளியவர்: திருமழிசையாழ்வார்
திருச்சந்த_விருத்தம்
பாசுர எண்: 770
பாசுரம்
புள்ளாதாகி வேதநான்கு
மோதினாய்அ தன்றியும்,
புள்ளின்வாய்பி ளந்துபுட்கொ
டிப்பிடித்த பின்னரும்,
புள்ளையூர்தி யாதலால
தென்கொல்மின்கொள் நேமியாய்,
புள்ளின்மெய்ப்ப கைக்கடல்கி
டத்தல்காத லித்ததே. (19)
திருச்சந்த விருத்தம் 20
அருளியவர்: திருமழிசையாழ்வார்
திருச்சந்த_விருத்தம்
பாசுர எண்: 771
பாசுரம்
கூசமொன்று மின்றிமாசு
ணம்படுத்து வேலைநீர்,
பேசநின்ற தேவர்வந்து
பாடமுன்கி டந்ததும்,
பாசம்நின்ற நீரில்வாழு
மாமையான கேசவா,
ஏசவன்று நீகிடந்த
வாறுகூறு தேறவே. (20)