Responsive image

திருச்சந்த_விருத்தம்

திருச்சந்த விருத்தம் 111

பாசுரம்
வைதுநின்னை வல்லவாப
      ழித்தவர்க்கும் மாறில்போர்
செய்துநின்னை செற்றதீயில்
      வெந்தவர்க்கும் வந்துன்னை
எய்தலாகு மென்பராத
      லாலெம்மாய. நாயினேன்,
செய்தகுற்றம் நற்றமாக
      வேகொள்ஞால நாதனே. (111)

திருச்சந்த விருத்தம் 112

பாசுரம்
வாள்களாகி நாள்கள்செல்ல
      நோய்மைகுன்றி மூப்பெய்தி,
மாளுநாள தாதலால்வ
      ணங்கிவாழ்த்தென் நெஞ்சமே,
ஆளதாகு நன்மையென்று
      நன்குணர்ந்த தன்றியும்,
மீள்விலாத போகம்நல்க
      வேண்டும்மால பாதமே. (112)

திருச்சந்த விருத்தம் 113

பாசுரம்
சலங்கலந்த செஞ்சடைக்க
      றுத்தகண்டன் வெண்டலைப்
புலன்கலங்க வுண்டபாத
      கத்தன்வன்து யர்கெட,
அலங்கல்மார்வில் வாசநீர்கொ
      டுத்தவன்ன டுத்தசீர்,
நலங்கொள்மாலை நண்ணும்வண்ண
      மெண்ணுவாழி நெஞ்சமே. (113)

திருச்சந்த விருத்தம் 114

பாசுரம்
ஈனமாய வெட்டுநீக்கி
      யேதமின்றி மீதுபோய்,
வானமாள வல்லையேல்வ
      ணங்கிவாழ்த்தென் நெஞ்சமே,
ஞானமாகி ஞாயிறாகி
      ஞாலமுற்று மோரெயிற்று,
ஏனமாயி டந்தமூர்த்தி
      யெந்தைபாத மெண்ணியே. (114)

திருச்சந்த விருத்தம் 115

பாசுரம்
அத்தனாகி யன்னையாகி
      யாளுமெம்பி ரானுமாய்,
ஒத்தொவ்வாத பல்பிறப்பொ
      ழித்துநம்மை யாட்கொள்வான்,
முத்தனார்மு குந்தனார்பு
      குந்துநம்முள் மேவினார்,
எத்தினாலி டர்க்கடல்கி
      டத்தியேழை நெஞ்சமே. (115)

திருச்சந்த விருத்தம் 116

பாசுரம்
மாறுசெய்த வாளரக்கன்
      நாளுலப்ப, அன்றிலங்கை
நீறுசெய்து சென்றுகொன்று
      வென்றிகொண்ட வீரனார்,
வேறுசெய்து தம்முளென்னை
      வைத்திடாமை யால்,நமன்
கூறுசெய்து கொண்டிறந்த
      குற்றமெண்ண வல்லனே. (116)

திருச்சந்த விருத்தம் 117

பாசுரம்
அச்சம்நோயொ டல்லல்பல்பி
      றப்புவாய மூப்பிவை,
வைத்தசிந்தை வைத்தவாக்கை
      மாற்றிவானி லேற்றுவான்,
அச்சுதன நந்தகீர்த்தி
      யாதியந்த மில்லவன்,
நச்சுநாக ணைக்கிடந்த
      நாதன்வேத கீதனே. (117)

திருச்சந்த விருத்தம் 118

பாசுரம்
சொல்லினும்தொ ழிற்கணும்தொ
      டக்கறாத வன்பினும்,
அல்லுநன்ப கலினோடு
      மானமாலை காலையும்,
அல்லிநாண்ம லர்க்கிழத்தி
      நாத.பாத போதினை,
புல்லியுள்ளம் விள்விலாது
      பூண்டுமீண்ட தில்லையே. (118)

திருச்சந்த விருத்தம் 119

பாசுரம்
பொன்னிசூழ ரங்கமேய
      பூவைவண்ண. மாய.கேள்,
என்னதாவி யென்னும்வல்வி
      னையினுள்கொ ழுந்தெழுந்து,
உன்னபாத மென்னிநின்ற
      வொண்சுடர்க்கொ ழுமலர்,
மன்னவந்து பூண்டுவாட்ட
      மின்றுயெங்கும் நின்றதே. (119)

திருச்சந்த விருத்தம் 120

பாசுரம்
இயக்கறாத பல்பிறப்பி
      லென்னைமாற்றி யின்றுவந்து,
உயக்கொள்மேக வண்ணன்நண்ணி
      யென்னிலாய தன்னுளே,
மயக்கினான்றன் மன்னுசோதி
      யாதலாலென் னாவிதான்,
இயக்கெலாம றுத்தறாத
      வின்பவீடு பெற்றதே. (120)

Enter a number between 1 and 4000.