Responsive image

குலசேகர_ஆழ்வார்

பெருமாள் திருமொழி 101

பாசுர எண்: 747

பாசுரம்
குரைகடலை யடலம்பால் மறுக வெய்து
      குலைகட்டி மறுகரையை யதனா லேரி
எரிநெடுவே லரக்கரொடு மிலங்கை வேந்தன்
      இன்னுயிர்கொண் டவன்தம்பிக் கரசு மீந்து
திருமகளோ டினிதமர்ந்த செல்வன் றன்னைத்
      தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
அரசமர்ந்தா னடிசூடு மரசை யல்லால்
      அரசாக வெண்ணேன்மற் றரசு தானே 10.7

பெருமாள் திருமொழி 102

பாசுர எண்: 748

பாசுரம்
அம்பொனெடு மணிமாட அயோத்தி யெய்தி
      அரசெய்தி அகத்தியன்வாய்த் தான்முன் கொன்றான்
றன்பெருந்தொல் கதைக்கேட்டு மிதிலைச் செல்வி
      உலகுய்யத் திருவயிறு வாய்த்த மக்கள்
செம்பவளத் திரள்வாய்த்தன் சரிதை கேட்டான்
      தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
எம்பெருமான் றஞ்சரிதை செவியால் கண்ணால்
      பருகுவோ மின்னமுதை மதியோ மின்றே 10.8

பெருமாள் திருமொழி 103

பாசுர எண்: 749

பாசுரம்
செறிதவச்சம் புகன்றன்னைச் சென்று கொன்று
      செழுமறையோ னுயிர்மீட்டுத் தவத்தோ னீந்த
நிறைமணிப்பூ ணணியுங்கொண் டிலவணன் றன்னைத்
      தம்பியால் வானேற்றி முனிவன் வேண்ட
திறல்விளங்கு மிலக்குமனைப் பிரிந்தான் றன்னைத்
      தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
உறைவானை மறவாத வுள்ளந் தன்னை
      உடையோம்மற் றுறுதுயர மடையோ மின்றே 10.9

பெருமாள் திருமொழி 104

பாசுர எண்: 750

பாசுரம்
அன்றுசரா சரங்களைவை குந்தத் தேற்றி
      அடலரவப் பகையேறி யசுரர் தம்மை
வென்று,இலங்கு மணிநெடுந்தோள் நான்கும் தோன்ற
      விண்முழுது மெதிர்வரத்தன் தாமம் மேவி
சென்றினிது வீற்றிருந்த வம்மான் றன்னைத்
      தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
என்றும்நின்றா னவனிவனென் றேத்தி நாளும்
      இன்றைஞ்சுமினோ வெப்பொழுதும் தொண்டீர் நீரே 10.10

பெருமாள் திருமொழி 105

பாசுர எண்: 751

பாசுரம்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
      திறல்விளங்கு மாருதியோ டமர்ந்தான் றன்னை
எல்லையில்சீர்த் தயரதன்றன் மகனாய்த் தோன்றிற்
      றதுமுதலாத் தன்னுலகம் புக்க தீறா
கொல்லியலும் படைத்தானைக் கொற்ற வொள்வாள்
      கோழியர்கோன் குடைக்குலசே கரஞ்சொற் செய்த
நல்லியலின் தமிழ்மாலை பத்தும் வல்லார்
      நலந்திகழ்நா ரணனடிக்கீழ் நண்ணு வாரே 10.11

Enter a number between 1 and 4000.