கண்ணிநுண்_சிறுத்தாம்பு
கண்ணிநுண் சிறுத்தாம்பு 11
அருளியவர்: மதுரகவி_ஆழ்வார்
கண்ணிநுண்_சிறுத்தாம்பு
பாசுர எண்: 947
பாசுரம்
அன்பன் தன்னை யடைந்தவர் கட்கெல்லாம்
அன்பன், தென்குரு கூர்நகர் நம்பிக்கு,
அன்ப னாய்மது ரகவி சொன்னசொல்
நம்பு வார்ப்பதி, வைகுந்தம் காண்மினே. (11)
பதம் பிரிக்கவும்
அன்பன் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே.
(கண்ணிநுண் சிறுத்தாம்பு - 11)