இரண்டாம்_திருவந்தாதி
இரண்டாம் திருவந்தாதி 41
அருளியவர்: பூதத்தாழ்வார்
இரண்டாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2222
பாசுரம்
பொருளால் அமருலகம் புக்கியல லாகாது
அருளா லறமருளு மன்றே, - அருளாலே
மாமறையோர்க் கீந்த மணிவண்ணன் பாதமே,
நீமறவேல் நெஞ்சே. நினை. 41
இரண்டாம் திருவந்தாதி 42
அருளியவர்: பூதத்தாழ்வார்
இரண்டாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2223
பாசுரம்
நினைப்பன் திருமாலை நீண்டதோள் காண,
நினைப்பார் பிறப்பொன்றும் நேரார், - மனைப்பால்
பிறந்தார் பிறந்தெய்தும் பேரின்ப மெல்லாம்,
துறந்தார் தொழுதாரத் தோள். 42
இரண்டாம் திருவந்தாதி 43
அருளியவர்: பூதத்தாழ்வார்
இரண்டாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2224
பாசுரம்
தோளிரண் டெட்டேழும் மூன்று முடியனைத்தும்,
தாளிரண்டும் வீழச் சரந்துரந்தான், - தாளிரண்டும்,
ஆர்தொழுவார் பாதம் அவைதொழுவ தன்றே,என்
சீர்கெழுதோள் செய்யும் சிறப்பு? 43
இரண்டாம் திருவந்தாதி 44
அருளியவர்: பூதத்தாழ்வார்
இரண்டாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2225
பாசுரம்
சிறந்தார்க் கெழுதுணையாம் செங்கண்மால் நாமம்,
மறந்தாரை மானிடமா வையேன், அறம்தாங்கும்
மாதவனே யென்னும் மனம்படைத்து, மற்றவன்பேர்
ஓதுவதே நாவினா லுள்ளு. 44
இரண்டாம் திருவந்தாதி 45
அருளியவர்: பூதத்தாழ்வார்
இரண்டாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2226
பாசுரம்
உளதென் றிறுமாவா ருண்டில்லை யென்று,
தளர்தல் அதனருகும் சாரார், - அளவரிய
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும்,
பாதத்தான் பாதம் பயின்று. 45
இரண்டாம் திருவந்தாதி 46
அருளியவர்: பூதத்தாழ்வார்
இரண்டாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2227
பாசுரம்
பயின்ற தரங்கம் திருக்கோட்டி, பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள், - பயின்ற
தணிதிகழும் சோலை யணிநீர் மலையே
மணிதிகழும் வண்தடக்கை மால். 46
இரண்டாம் திருவந்தாதி 47
அருளியவர்: பூதத்தாழ்வார்
இரண்டாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2228
பாசுரம்
மாலை யரியுருவன் பாத மலரணிந்து,
காலை தொழுதெழுமின் கைகோலி, - ஞாலம்
அளந்திடந் துண்டுமிழ்ந்த அண்ணலைமற் றல்லால்
உளங்கிடந்த வாற்றா லுணர்ந்து. 47
இரண்டாம் திருவந்தாதி 48
அருளியவர்: பூதத்தாழ்வார்
இரண்டாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2229
பாசுரம்
உணர்ந்தாய் மறைநான்கும் ஓதினாய் நீதி
மணந்தாய் மலர்மகள்தோள் மாலே. - மணந்தாய்போய்
வேயிருஞ் சாரல் வியலிரு ஞாலம்சூழ்,
மாயிருஞ் சோலை மலை. 48
இரண்டாம் திருவந்தாதி 49
அருளியவர்: பூதத்தாழ்வார்
இரண்டாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2230
பாசுரம்
மலையேழும் மாநிலங்க ளேழும் அதிர,
குலைசூழ் குரைகடல்க ளேழும், - முலைசூழ்ந்த
நஞ்சுரத்துப் பெண்ணை நவின்றுண்ட நாவனென்று,
அஞ்சாதென் னெஞ்சே. அழை. 49
இரண்டாம் திருவந்தாதி 50
அருளியவர்: பூதத்தாழ்வார்
இரண்டாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2231
பாசுரம்
அழைப்பன் திருமாலை ஆங்கவர்கள் சொன்ன,
பிழைப்பில் பெரும்பெயரே பேசி, - இழைப்பரிய
ஆயவனே. யாதவனே. என்றவனை யார்முகப்பும்,
மாயவனே என்று மதித்து. 50