Songs
மூன்றாம் திருவந்தாதி 90
அருளியவர்: பேயாழ்வார்
மூன்றாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2371
பாசுரம்
சிலம்பும் செறிகழலும் சென்றிசைப்ப, விண்ணா
றலம்பிய சேவடிபோய், அண்டம் - புலம்பியதோள்
எண்டிசையும் சூழ இடம்போதா தென்கொலோ,
வண்டுழாய் மாலளந்த மண்? 90
மூன்றாம் திருவந்தாதி 91
அருளியவர்: பேயாழ்வார்
மூன்றாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2372
பாசுரம்
மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டு மாற்றாதாய்,
வெண்ணெய் விழுங்க வெகுண்டு,ஆய்ச்சி - கண்ணிக்
கயிற்றினால் கட்டத்தான் கட்டுண் டிருந்தான்,
வயிற்றினோ டாற்றா மகன். 91
மூன்றாம் திருவந்தாதி 92
அருளியவர்: பேயாழ்வார்
மூன்றாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2373
பாசுரம்
மகனொருவர்க் கல்லாத மாமேனி மாயன்,
மகனா மவன்மகன்றன் காதல் - மகனை
சிறைசெய்த வாணன்தோள் செற்றான் கழலே
நிறைசெய்தென் நெஞ்சே. நினை. 92
மூன்றாம் திருவந்தாதி 93
அருளியவர்: பேயாழ்வார்
மூன்றாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2374
பாசுரம்
நினைத்துலகில் ஆர்தெளிவார் நீண்ட திருமால்,
அனைத்துலகும் உள்ளொடுக்கி ஆல்மேல், - கனைத்துலவு
வெள்ளத்தோர் பிள்ளையாய் மெள்ளத் துயின்றானை,
உள்ளத்தே வைநெஞ்சே. உய்த்து. 93
மூன்றாம் திருவந்தாதி 94
அருளியவர்: பேயாழ்வார்
மூன்றாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2375
பாசுரம்
உய்த்துணர் வென்னும் ஒளிகொள் விளக்கேற்றி,
வைத்தவனை நாடி வலைப்படுத்தேன், - மெத்தெனவே
நின்றா னிருந்தான் கிடந்தானென் னெஞ்சத்து,
பொன்றாமை மாயன் புகுந்து. 94
மூன்றாம் திருவந்தாதி 95
அருளியவர்: பேயாழ்வார்
மூன்றாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2376
பாசுரம்
புகுந்திலங்கும் அந்திப் பொழுதகத்து, அரியாய்
இகழ்ந்த இரணியன தாகம், சுகிர்ந்தெங்கும்
சிந்தப் பிளந்த திருமால் திருவடியே
வந்தித்தென் னெஞ்சமே. வாழ்த்து. 95
மூன்றாம் திருவந்தாதி 96
அருளியவர்: பேயாழ்வார்
மூன்றாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2377
பாசுரம்
வாழ்த்திய வாயராய் வானோர் மணிமகுடம்
தாழ்த்தி வணங்கத் தழும்பாமே, - கேழ்த்த
அடித்தா மரைமலர்மேல் மங்கை மணாளன்,
அடித்தா மரையாம் அலர். 96
மூன்றாம் திருவந்தாதி 97
அருளியவர்: பேயாழ்வார்
மூன்றாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2378
பாசுரம்
அலரெடுத்த வுந்தியான் ஆங்கெழி லாய,
மலரெடுத்த மாமேனி மாயன், - அலரெடுத்த
வண்ணத்தான் மாமலரான் வார்சடையா னென்றிவர்கட்
கெண்ணத்தா னாமோ இமை? 97
மூன்றாம் திருவந்தாதி 98
அருளியவர்: பேயாழ்வார்
மூன்றாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2379
பாசுரம்
இமஞ்சூழ் மலையும் இருவிசும்பும் காற்றும்,
அமஞ்சூழ்ந் தறவிளங்கித் தோன்றும், - நமஞ்சூழ்
நரகத்து தம்மை நணுகாமல் காப்பான்,
துரகத்தை வாய்பிளந்தான் தொட்டு. 98
மூன்றாம் திருவந்தாதி 99
அருளியவர்: பேயாழ்வார்
மூன்றாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2380
பாசுரம்
தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான்,
அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று, - குட்டத்துக்
கோள்முதலை துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான்
தாள் முதலே நங்கட்குச் சார்வு. (2) 99