Songs
மூன்றாம் திருவந்தாதி.98
அருளியவர்: பேயாழ்வார்
மூன்றாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2379
பாசுரம்
இமஞ்சூழ் மலையும் இருவிசும்பும் காற்றும்,
அமஞ்சூழ்ந் தறவிளங்கித் தோன்றும், - நமஞ்சூழ்
நரகத்து தம்மை நணுகாமல் காப்பான்,
துரகத்தை வாய்பிளந்தான் தொட்டு. 98
Summary
He who protected the mountains, the skies, the winds and all else within himself will surely protect us from the travels all hell. He killed the horse kesin with his bare hands.
மூன்றாம் திருவந்தாதி.99
அருளியவர்: பேயாழ்வார்
மூன்றாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2380
பாசுரம்
தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான்,
அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று, - குட்டத்துக்
கோள்முதலை துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான்
தாள் முதலே நங்கட்குச் சார்வு. (2) 99
Summary
With eight hands wielding eight victorious weapons tht have never seen defeat, the Lord of Attabusyakaram is our sole refuge. He wielded his discus over a crocodile and saved on elephant in the yore.
ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி.1
அருளியவர்: ஸ்ரீராமானுஜ
ஸ்ரீராமானுஜ_நூற்றந்தாதி
பாசுர எண்: 3913
பாசுரம்
நிதியைப் பொழியும் முகில்என்று நீசர்தம் வாசல்பற்றித்
துதிகற் றுலகில் துவள்கின்றி லேன், இனித் தூய்நெறிசேர்
எதிகட் கிறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம்
கதிபெற் றுடைய இராமா னுசனென்னைக் காத்தனனே. 21
ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி.10
அருளியவர்: ஸ்ரீராமானுஜ
ஸ்ரீராமானுஜ_நூற்றந்தாதி
பாசுர எண்: 3922
பாசுரம்
இன்பந் தருபெரு வீடுவந் தெய்திலென்? எண்ணிறந்த
துன்பந் தருநிர யம்பல சூழிலென்? தொல்லுலகில்
மன்பல் லுயிர்கட் கிறையவன் மாயன் எனமொழிந்த
அன்பன் அனகன் இராமா னுசனென்னை ஆண்டனனே. 30
ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி.11
அருளியவர்: ஸ்ரீராமானுஜ
ஸ்ரீராமானுஜ_நூற்றந்தாதி
பாசுர எண்: 3923
பாசுரம்
ஆண்டிகள் நாள்திங்க ளாய்நிகழ் காலமெல் லாம்மனமே.
ஈண்டுபல் யோனிகள் தோறுழல் வோம் இன்றோ ரெண்ணின்றியே
காண்டகு தோளண்ணல் தென்னத்தி யூரர் கழலிணைக்கீழ்ப்
பூண்டவன் பாளன் இராமா னுசனைப் பொருந்தினமே. (2) 31
ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி.12
அருளியவர்: ஸ்ரீராமானுஜ
ஸ்ரீராமானுஜ_நூற்றந்தாதி
பாசுர எண்: 3924
பாசுரம்
பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும்,நல்ல
திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறுகலியால்
வருந்திய ஞாலத்தை வண்மையி னால்வந் தெடுத்தளித்த
அருந்தவன் எங்கள் இராமா னுசனை அடைபவர்க்கே. 32
ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி.13
அருளியவர்: ஸ்ரீராமானுஜ
ஸ்ரீராமானுஜ_நூற்றந்தாதி
பாசுர எண்: 3925
பாசுரம்
அடையார் கமலத் தலர்மகள் கேள்வன் கை யாழியென்னும்
படையொடு நாந்தக மும்படர் தண்டும்,ஒண் சார்ங்கவில்லும்
புடையார் புரிசங் கமுமிந்தப் பூதலம் காப்பதற்கென்று
இடையே இராமா னுசமுனி யாயின இந்நிலத்தே. 33
ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி.14
அருளியவர்: ஸ்ரீராமானுஜ
ஸ்ரீராமானுஜ_நூற்றந்தாதி
பாசுர எண்: 3926
பாசுரம்
நிலத்தைச் செறுத்துண்ணும் நீசக் கலியை, நினைப்பரிய
பலத்தைச் செறுத்தும் பிறங்கிய தில்லை,என் பெய்வினைதென்
புலத்தில் பொறித்தவப் புத்தகச் சும்மை பொறுக்கியபின்
நலத்தைப் பொறுத்தது இராமா னுசன்றன் நயப்புகழே. 34
ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி.15
அருளியவர்: ஸ்ரீராமானுஜ
ஸ்ரீராமானுஜ_நூற்றந்தாதி
பாசுர எண்: 3927
பாசுரம்
நயவேன் ஒருதெய்வம் நானிலத் தேசில மானிடத்தைப்
புயலே எனக்கவி போற்றிசெய் யேன், பொன் னரங்கமென்னில்
மயலே பெருகும் இராம னுசன்மன்னு மாமலர்த்தாள்
அயரேன் அருவினை என்னையெவ் வாறின் றடர்ப்பதுவே? 35
ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி.16
அருளியவர்: ஸ்ரீராமானுஜ
ஸ்ரீராமானுஜ_நூற்றந்தாதி
பாசுர எண்: 3928
பாசுரம்
அடல்கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன் றாரணச்சொல்
கடல்கொண்ட ஒண்பொருள் கண்டளிப் பப்,பின்னும் காசினியோர்
இடரின்கண் வீழ்ந்திடத் தானுமவ் வொண்பொருள் கொண்டவர்பின்
படரும் குணன், எம் இராமா னுசன்றன் படியிதுவே. 36