Responsive image

Blogs

ஆழ்வார்கள் அவதார தினங்கள்

ஆழ்வார்கள் அவதார தினங்கள் அட்டவணை.

எண் ஆழ்வார் மாதம் நக்ஷத்திரம்
1 பொய்கை ஆழ்வார் ஐப்பசி திருவோணம்
2 பூதத்தாழ்வார் ஐப்பசி அவிட்டம்
3 பேயாழ்வார் ஐப்பசி சதயம்
4 திருமழிசை ஆழ்வார் தை மகம்
5 நம்மாழ்வார் வைகாசி விசாகம்
6 மதுரகவி ஆழ்வார் சித்திரை சித்திரை
7 பெரியாழ்வார் ஆனி சுவாதி
8 ஆண்டாள் ஆடி பூரம்
9 குலசேகர ஆழ்வார் மாசி புணர்பூசம்
10 தொண்டரடிப்பொடி ஆழ்வார் மார்கழி கேட்டை
11 திருப்பாணாழ்வார் கார்த்திகை ரோகிணி
12 திருமங்கை ஆழ்வார் கார்த்திகை கார்த்திகை

ஆழ்வார்கள் அவதார ஸ்தலங்கள்

ஆழ்வார்கள் அவதார ஸ்தலங்கள் அட்டவணை.

எண் ஆழ்வார் அம்சம் அவதார ஸ்தலம்
1 பொய்கை ஆழ்வார் பாஞ்சசன்னியம் (சங்கு) பொற்றாமரைக் குளம், திருவெஃகா
2 பூதத்தாழ்வார் கௌமோதகம் (கதை)

திருக்கடல்மல்லை,(மகாபலிபுரம்)

3 பேயாழ்வார் நாந்தகம்(வாள்) ஆதிகேசவபெருமாள்கோயில், மயிலாப்பூர்
4 திருமழிசை ஆழ்வார் ஆழி (சக்கரத்தாழ்வார்) திருமழிசை
5 நம்மாழ்வார் சேனை முதலியார் திருக்குருகூர்
6 மதுரகவி ஆழ்வார் நித்யஸூரி குமுதர் திருக்கோளூர்
7 பெரியாழ்வார் கருடாழ்வார் ஸ்ரீ வில்லிபுத்தூர்
8 ஆண்டாள் பூமாதேவி ஸ்ரீ வில்லிபுத்தூர்
9 குலசேகர ஆழ்வார் கௌஸ்துபம் திருவஞ்சிக்களம்
10 தொண்டரடிப்பொடி ஆழ்வார் வைஜயந்தி (வனமாலை) திருமண்டங்குடி
11 திருப்பாணாழ்வார் ஸ்ரீவத்ஸம் உறையூர்
12 திருமங்கை ஆழ்வார் சார்ங்கம் (வில்) திருக்குறையலூர் (திருவாலி)

ஆழ்வார்கள் பன்னிருவர் பாடல்

azhvargal-panniruvar-signal.ogg

azhvargal-panniruvar-signal.mp3

முகுந்தமாலா - 8


चिन्तयामि हरिमेव सन्ततं मन्दमन्द हसिताननाम्बुजम् |
नन्दगोप-तनयं परात्परं नारदादि-मुनिबृन्द वन्दितम् || 8 ||
(मुकुन्दमाला - 8)


சிந்தயாமி ஹரிமேவ ஸந்ததம் மந்த மந்த ஹசிதாநநாம்புஜம் |
நந்தகோப தநயம் பராத்பரம் நாரதாதி முனி ப்ருந்த வந்திதம் ||
(முகுந்தமாலா - 8)

[பொருள்]

மனதைக் கவரும் அழகான புன்முறுவல் பூக்கும் தாமரைத் திருமுகத்தானும், நந்தகோபரின் திருமகனும், எல்லோரையும் விட உயர்ந்தவனும், நாரதர் முதலான முனிவர்களால் நாரதர் முதலான முனிவர்களால் வணங்கப்படுபவனுமான ஸ்ரீ மஹாவிஷ்ணுவையே எப்பொழுதும் சிந்தித்திருக்கிறேன்.

அஹம் நான்
மந்த மந்த ஹசித புன்முறுவல் பூக்கும்
ஆநநாம்புஜம் தாமரைத் திருமுகத்தானும்
நந்தகோப தநயம் நந்தகோபரின் திருமகனும்
பராத்பரம் மேன்மை பொருந்திய அனைவரிலும் மேம்பட்டவன் (எல்லோரையும் விட உயர்ந்தவனும்)
நாரதாதி முனிப்ருந்த வந்திதம் நாரதர் முதலான முனிவர்களால் வணங்கப்படுபவனுமான
ஹரிமேவ (ஹரிம் ஏவ) ஸ்ரீ மஹாவிஷ்ணுவையே
ஸந்ததம் எப்பொழுதும்
சிந்தயாமி சிந்தித்திருக்கிறேன்